<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13967342</id><updated>2011-07-07T16:10:28.342-07:00</updated><category term='சாகரன்'/><category term='கவிதைப் போட்டி'/><category term='நம்பிக்கை'/><category term='கவிதை'/><title type='text'>பரஞ்சோதியின் பக்கம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>25</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-7330663980682899002</id><published>2007-02-28T21:24:00.000-08:00</published><updated>2007-02-28T21:26:52.527-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம்பிக்கை'/><title type='text'>நம்பிக்கை போட்டி முடிவுகள்</title><content type='html'>நம்பிக்கை போட்டி முடிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு இணைய நெஞ்சங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் நம்பிக்கையின் நெஞ்சார்ந்த  வணக்கங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடத்திய காதல் கவிதைகள்(ஏன் நடத்தப்பட்டது என்ற விபரத்தை அனைவரும் அறிவீர்கள்)  போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் நெருங்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சில நாட்கள் விறுவிறுப்பு குன்றிய நிலையில் இருந்த போட்டி பின் விறு விறுப்பு கூடி கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட கவிதைகள் போட்டிக் களத்தில் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலரது படைப்புகள் விதிமுறைக்கு மாறாக இருந்தமையால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டதில் எங்களுக்கும் வருத்தமே! அடுத்த முறை விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தங்கள் படைப்பை தர வேண்டும் என்று அன்புடன் இந்நேரம் வேண்டிக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகள் குறித்து படைப்பாளிகளும் நடுவர்களும் போட்டி முடிவு தங்கள் கணிப்பு படி சரியாக வந்திருக்கிறதா என்ற ஆர்வத்துடன் நிச்சயமாக இருப்பார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் அல்லது இருவர் மதிப்பீடு செய்தால் சரியாக சில சமயம் வரும்! ஆனால் 11 பேர் ஒரே படைப்பை இவர் இன்னார் என்று அறியாமல் மதிப்பீடு செய்தால் அது சரியாகத்தான் வரும். அதுவும் ஆண்கள் எழுதிய காதல் கவிதை பெண்கள் மதிப்பீடு செய்தது பெரும் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அறிவிக்கப்படும் முடிவுகள் மிகச் சரியானவையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவுகளை மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவிக்க உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த பணிச்சுமையில் அடியேன் இருக்கின்றேன். எனவே என்னால் ஏற்பட்ட தாமத்தை பொறுத்தருளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நம்பிக்கையின் மீது மிக்க ஆர்வம் கொண்டு பொருளுதவி செய்த அன்பர்களுக்கும் , விளம்பர உதவி செய்த அன்பர்களுக்கும்,  முத்தமிழ் மற்றும் இல்லம் குழும நண்பர்களுக்கும், முக்கியமாக கவிதைகளையெல்லாம் மிக்க பொறுமையுடன் மதிப்பீடு செய்த நடுவர்களுக்கும் எத்தனை நன்றிகள் நான் உரைத்தாலும் அவை கணக்கிலாகாது. ஆக அனைவரையும் அடிபணிந்து வணங்கி போட்டி முடிவுகளை அறிவிக்கும் வரை பொறுத்தருள வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை குழுமம் சார்பாக&lt;br /&gt;&lt;br /&gt;பாஸிட்டிவ் ராமா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-7330663980682899002?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/7330663980682899002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=7330663980682899002' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7330663980682899002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7330663980682899002'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2007/02/blog-post_28.html' title='நம்பிக்கை போட்டி முடிவுகள்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-4615372468046699277</id><published>2007-02-18T20:47:00.000-08:00</published><updated>2007-02-18T20:49:57.613-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம்பிக்கை'/><title type='text'>நம்பிக்கை கவிதைப் போட்டி - இன்றே கடைசி நாள்</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-4615372468046699277?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/4615372468046699277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=4615372468046699277' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/4615372468046699277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/4615372468046699277'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2007/02/blog-post_18.html' title='நம்பிக்கை கவிதைப் போட்டி - இன்றே கடைசி நாள்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-7526483386411433058</id><published>2007-02-17T20:53:00.000-08:00</published><updated>2007-02-17T21:02:03.816-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம்பிக்கை'/><title type='text'>நம்பிக்கையின் கவிதைப் போட்டி - நாளை கடைசி நாள்</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-7526483386411433058?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/7526483386411433058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=7526483386411433058' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7526483386411433058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7526483386411433058'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2007/02/blog-post_17.html' title='நம்பிக்கையின் கவிதைப் போட்டி - நாளை கடைசி நாள்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-1089901483283580025</id><published>2007-02-12T02:21:00.000-08:00</published><updated>2007-02-11T04:24:56.479-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகரன்'/><title type='text'>மாமனிதர் சாகரனும் நானும்</title><content type='html'>&lt;strong&gt;(என்னுயிர் தோழனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நேற்றிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன் அடித்தது, சில நேரம் அதை கண்டுக்காமல் விட்டு விடுவேன், ஆனால் ரிங் டோன் அடித்து அடித்து கட் ஆன விதம் எனக்கு ஏதோ போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போனில் தொடர்பு கொண்டவர் முத்தமிழ் மன்ற குமரன், “அண்ணா! ஒரு அதிர்ச்சி செய்தி, தமிழ்மணத்தில் நம்ம சாகரன் அண்ணா பற்றிய கெட்ட செய்தி, அவர் மறைவு என்று பதிவு இருக்குது, நம்ம கிரியும் அதை பார்த்து உடனே உங்களிடம் உடனே சொல்லச் சொன்னார்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒரு நொடியில் என் மூச்சே நின்று போனது, கடவுளே! இது பொய்ச்செய்தியாக இருக்கட்டும், ஏதோ தவறான தகவலாக இருக்கட்டும் என்று இணையத்தில் தமிழ்மணம் பார்த்தேன், பதிவை போட்டவர்கள் மதியும், சிபியும், இருவரும் எதையும் ஆராயாமல் போடுபவர்கள் அல்ல, இருந்தாலும் மனதுக்குள் ஒரு எண்ணம், இது தவறாக தகவல் தான் என்று நினைத்து, சாகரனின் சவுதி அரேபியா தொலைபேசிகளுக்கு அழைத்தேன், ஆனால் போகவில்லை.  ஒரே படபடப்பு, என்ன செய்வது என்று தெரியவில்லை, கண்களில் நீர் வழிகிறது, இருந்தாலும் இறைவா! நீ நினைத்தால் எதையும் எப்போவும் மாற்ற முடியும், இச்செய்தி பொய்யான செய்தியாக இருக்கட்டும் என்று வேண்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் முன்பு சாகரன் கொடுத்த ரியாத் தமிழ்ச்சங்கம் வலைத்தளம் போய் பார்த்தேன், அது பல மாதங்களாக மாற்றப்பட வில்லை, யாருடைய தொலைபேசியாவது கிடைக்குமான்னு பார்த்தேன், கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் யாகூ குருப் போனால், அங்கே இம்தியாஸ் என்பவர் போட்ட பதிவை படித்து மனம் உடைந்து போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கிரிக்கு சொன்னேன், கத்தார் இக்பால் அண்ணாவுக்கு தொடர்பு கொண்டேன், அவரும் தூங்கிவிட்டார் போல், லைன் எடுக்கலை. என்ன செய்வது என்று புரியவில்லை. கிரியும் ரொம்ப நேரம் பேசி, மீண்டும் தமிழ்மணம் பார்த்தேன், ஒவ்வொருவராக உறுதி செய்வது போல் பதிவுகள் வர, உடனே கிரியிடம் சொல்லி, முத்தமிழ் மன்றத்தில் அறிவிப்பு கொடுக்கச் சொன்னேன், இரவு முழுவதும் தூக்கமில்லை, படுத்தால் மனப்பாரம் அதிகமாகிக் கொண்டே இருக்க, விடியற்காலை வரை விழித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அவரைப் பற்றி நினைக்க நினைக்க மனம் பாரமாகிறது, கண்களில் நீர் வழிகிறது. எத்தனை அருமையான மனிதர், எங்கே தேடினும் அவரைப் போல் ஒருவர் இனி கிடைக்க மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சாகரனும் பழகிய நாட்கள் இனிமையான நாட்கள், அந்த இனிமையான நாட்களை பகிர்ந்து கொண்டால் தான் என் மனப்பாரம் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாகரன் என்ற கல்யாண் எனக்கு தமிழ்மன்றத்தில் தான் பழக்கம் ஆனார். நான் அங்கே குழந்தைகளுக்கு கதை சொல்வது பரஞ்சோதி மாமா என்ற தலைப்பு தொடங்கிய போது, மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளின் பெயர்களை கேட்டு, அவர்கள் அக்கதைகளில் வரும்படியாக செய்தேன், அப்போ தான் எனக்கு வர்ணிகா பழக்கம் ஆனார், சாகரன் மற்றும் சகோதரி எங்க உறவானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பு தொடங்கிய போது சாகரன் சவுதி அரேபியா செய்திகள் அதிகம் கொடுத்தார்.  சாகரன் என்ற பெயர் ஏன் என்று கேட்டதற்கு சாகரம் போல் எல்லை இல்லாமல் பரந்து விரிய வேண்டும், அழிவு என்பதே இல்லாததாக இருக்கவேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கால இயந்திரம் என்ற டைம் மெஷின் பற்றிய கதை எழுதிய போது அதில் அவர் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் பாத்திரமாக வர ஆசைப்பட்டார், அதை வைத்து கதை எழுதவும் என்னிடம் சொன்னார். அவர் வந்திய தேவனாக மாறி வீர நாராயண ஏரி ஓரமாக குதிரையில் போகும் காட்சியை ரசனையாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அடிக்கடி தொலைபேசியில் அழைப்பார், அப்போ என் மகள் சக்தி பிறக்கவில்லை, வர்ணிகாவை பற்றி அடிக்கடி சொல்வார், கை சூப்பும் பழக்கம் பற்றி சொல்வார், மகளின் ஒவ்வொரு செயலையும் என்னிடம் சொல்லி மகிழ்வார், நானும் அவருக்கு குழந்தை வளர்ப்பு விசயமாக தகவல்கள் கொடுப்பேன். “சுரேஷ்! உங்ககிட்ட நிறைய பேச ஆசையாக இருக்குது, ஆனால் தொலைபேசி கட்டணம் தான் தடுக்குது, நேரில் சந்தித்து இது பற்றி அதிகம் பேசுவோம்” என்று அடிக்கடி சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரியும் என்னிடம் அடிக்கடி பேசுவார்கள், என் மனைவியோடும் பேசியிருக்காங்க. வர்ணிகா பேசுவதை கணினி வாயிலாக எனக்கு அனுப்பி வைப்பார், நானும் சாட் செய்யும் போது பேசியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் மன்றம் தொடங்க நினைத்த கணமே தன் முழு ஆதரவையும் கொடுப்பதாக உறுதி கூறினார், அதற்காக தினமும் போன் செய்து பேசினார், இரண்டே நாட்களில் முத்தமிழ் மன்றம் அவருடைய அயராத உழைப்பில் உருவானது. முத்தமிழ் மன்றம் தொடங்கும் முன்பு அவரது பாலகுமாரன் விவாதக்களம் தொடங்கிய போதும் என்னை வழிநடத்துநராக இருக்க சொன்னார், நான் அதில் இருந்த குறைகளை சுட்டிக் காட்டி அதை எல்லாம் சரி செய்தார். பின்னர் பாலகுமாரன் நாவல்கள் அதிகம் படிக்காததால் என்னால் அங்கே தொடர்ந்து பதிவுகள் போட முடியவில்லை, அப்போவும் “சுரேஷ், சும்மாவாக்கும் எட்டி பாருங்க, நான் விரைவில் பாலகுமாரன் நாவல்கள் இணையம் வழியாக அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் மன்றம் தொடங்கிய காலக்கட்டத்தில் அவருடான நட்பு மேலும் கூடியது. வர்ணிகாவுக்காக நான் கார்ட்டூன், கணினி விளையாட்டு, பாடங்கள் அடங்கிய சிடிகளை அனுப்பி வைத்து மகிழ வைத்தேன், இன்னும் இருப்பதை நேரில் பார்க்கும் போது கொடுக்கிறேன் என்று சொல்லி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலா சகோதரி நடத்திய குழந்தைகளுக்கான போட்டிகளில் பரிசு வழங்க ஒத்துக் கொண்ட போது, பணம் எப்படி அனுப்புவது என்று தெரியாமல் விழித்த போது, கை கொடுத்தவர் சாகரன் தான், நான் இன்னும் அவருக்கு கடனாளியாகவே இருக்கிறேன், எத்தனையோ முறை கொடுக்க முனைந்த போதும், “சுரேஷ் நேரில் சந்திக்கும் போது கொடுங்க, ஒன்றும் அவசரம் இல்லை, இந்த ஆண்டு எப்படியும் நாம் சென்னையில் சந்திக்கலாம்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ கடவுளே! ஏன் இப்படி சதி செய்தாய், அவர் என்ன பாவம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் பேசும் போதெல்லாம் ஏதோ ஒரு மகானிடம் பேசுவது போலிருக்கும், அநாவசியமான சொற்கள், செயல்கள் எதையும் அவரிடமிருந்து வராது, எப்போ பார்த்தாலும் “எதையாவது சாதிக்கணும் சுரேஷ், அதுவும் பெரிய அளவில் இருக்கணும், இப்போ நம் முகம் காட்டக்கூடாது, யார் அது யார் அது என்று தேடும் நிலையில் நாம் முகம் காட்டணும்” என்று குழந்தை போல் சொல்வார், பேச்சில் அத்தனை ஆர்வமும், உண்மையும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்று எல்லோரும் யார் சாகரன், யார் கல்யாண், எப்படி இருப்பார் என்று கேட்கிறார்கள் நண்பா! உன் முகத்தை காட்டு நண்பா”&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வலைப்பதிவாளர்கள் கூட்டத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதை கூட அவர் சொன்னார், அது ரொம்பவும் எதார்ச்சையாக நடந்ததாகவும், ரொம்பவும் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்தியதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேன் கூடு தொடங்கிய போது, தனியொருவராக அதற்காக இரவு பகலாக கடுமையாக உழைத்தார், இது யாருக்கும் போட்டியாக இருக்காது, தனித்தன்மையோடு விளங்கும் என்று அடிக்கடி சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது மற்றும் என்னுடைய நீண்ட நாள் கனவாக குழந்தைகள் தளம், ஆம் தமிழிலில் குழந்தைகளுக்கான அனைத்து விசயங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் தளம் ஒன்றை அமைக்க நாங்க இருவரும் திட்டமிட்டோம். நான் அவரை தொடர்ந்து அதற்காக உழைக்குமாறு கேட்டுக் கொண்டேன்,  வாண்டு.காம் என்ற பெயரையும் அவர் ரிஜிஸ்டர் செய்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சென்ற போது நண்பர்களிடம் அது பற்றி பேசியும் இருந்தேன், ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து வேலைகள் அதிகமாகவும், சாகரனும் தேன் கூடு மற்றும் அலுவலக பணியில் மும்மரமாக இறங்க, இருவரும் அதை வரும் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப் போட்டோம். வாண்டு.காம் தளத்திற்காக நிறைய மென் பொருட்களையும், பிளாஷ் விளையாடுகளையும் வாங்கி வருவதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடைசியாக அவரிடம் பேசியது 6ந்தேதி, அன்று அவரிடம் நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு கவிதைப் போட்டியின் விபரத்தை தேன் கூட்டின் முகப்பில் தெரியப்படுத்துங்க என்றேன், அவரும் உடனே செய்கிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் பார்த்தவுடன் அவருக்கு நன்றி சொல்ல நினைத்தேன், பின்னர் அப்படியே தள்ளி போய் விட்டது, அவரும் என்னை, நம்மை எல்லாம் பிரிந்து ரொம்ப தூரம், இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் எனக்கு சாகரன் போல் ஒரு முகம் தெரியாத நண்பர் கிடைப்பாரா என்று தெரியவில்லை. சகோதரியும் மருமகள் வர்ணிகாவையும் எப்படி காண்பேன், நேரில் பார்க்கும் போது எப்படி ஆறுதல் சொல்வேன் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலதேவனின் கொடிய செயலால் என் நண்பனை இழந்துவிட்டேன். சாகரன் ஒரு மகான், வாழும் விவேகானந்தராக அவரை கண்டேன். பாரதி, கணித மேதை இராமானுஜம், மாவீரன் பகத்சிங் போன்றவர்களை எல்லாம் இளம் வயதில் தன்னிடம் அழைத்துக் கொண்ட இறைவன், என் நண்பரையும் அழைத்துக் கொண்டது இறைவனின் சுயநலமிக்க கொடிய செயலாகவே நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இணையத்தில் தனக்கு என்று ஒரு மகத்தான இடத்தை அடைய நினைத்த என் தோழனின் பயணம் கால்வாசி தூரம் கூட இல்லை என்றாலும்,  நம் அனைவரின் மனதிலும், தமிழ் தாயின் இதயத்திலும் என்றும் நீங்காத அளவுக்கு சாதித்து சென்றிருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-1089901483283580025?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/1089901483283580025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=1089901483283580025' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/1089901483283580025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/1089901483283580025'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2007/02/blog-post_12.html' title='மாமனிதர் சாகரனும் நானும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-7562235755285892768</id><published>2007-02-09T21:17:00.000-08:00</published><updated>2007-02-06T23:53:05.794-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்</title><content type='html'>நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://mani-vilas.blogspot.com/2006/11/blog-post_26.html" target="_blank"&gt;&lt;strong&gt;உன்னிலும் என்னிலும்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,&lt;br /&gt;என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...&lt;br /&gt;&lt;br /&gt;உனது அறுவை சினேகிதி&lt;br /&gt;எனது புருடா நண்பன்....&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்&lt;br /&gt;எனக்கு பிடித்த வோட்கா..&lt;br /&gt;&lt;br /&gt;உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்&lt;br /&gt;என் ஆசை கால் பந்து வீரன்...&lt;br /&gt;&lt;br /&gt;உன் முதுகு மச்சம்&lt;br /&gt;என் மார்புக்கீறல்..&lt;br /&gt;&lt;br /&gt;உன் தாலிக்கொடியின் அழுத்தம்&lt;br /&gt;என் மீசையின் குத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;என இன்னும் ஆழமாய்&lt;br /&gt;எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிலும் என்னிலும்&lt;br /&gt;சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது&lt;br /&gt;இன்னமும்...&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாய் என் முதல் காதல்....&lt;br /&gt;உன்னில் ..?&lt;br /&gt;&lt;br /&gt;(நண்பர்களே!  உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-7562235755285892768?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/7562235755285892768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=7562235755285892768' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7562235755285892768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7562235755285892768'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2007/02/101.html' title='நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-7165479949801278132</id><published>2007-02-06T23:48:00.000-08:00</published><updated>2007-02-06T23:53:06.105-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைப் போட்டி'/><title type='text'>நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி</title><content type='html'>நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியின் விபரமும், விதிமுறைகளும் முந்தைய பதிவில் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:&lt;br /&gt;&lt;br /&gt;1. பாஸிடிவ்ராமா -  &lt;a href="mailto:positiverama@gmail.com"&gt;positiverama@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. பரஞ்சோதி - &lt;a href="mailto:paransothi@gmail.com"&gt;paransothi@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.  விழியன் - &lt;a href="mailto:paransothi@gmail.com"&gt;umanaths@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இவண்,&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை கூகுள் குழுமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/nambikkai" target="_blank"&gt;http://groups.google.co.in/group/nambikkai&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-7165479949801278132?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/7165479949801278132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=7165479949801278132' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7165479949801278132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/7165479949801278132'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2007/02/blog-post_06.html' title='நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-411882141643286511</id><published>2007-02-05T20:15:00.000-08:00</published><updated>2007-02-05T20:29:23.852-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைப் போட்டி'/><title type='text'>நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி</title><content type='html'>இணையத்தின் இனிய நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது. கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு &lt;strong&gt;காதல்&lt;/strong&gt; பற்றியது ..என்னடா இது நம்பிக்கையில் &lt;strong&gt;காதல் கவிதையா? ஆ&lt;/strong&gt;! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சின்ன விளக்கம் இங்கே..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் "காதல்" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்" என்ன விசேசம் என்றால், &lt;strong&gt;உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பரிசுத்தொகை விபரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முதல்பரிசு ரூ 1500/-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இரண்டாம் ரூ 1000/-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மூன்றாம் பரிசு ரூ 500/-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)&lt;br /&gt;&lt;br /&gt;5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப் படும். பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்பப்படும் கவிதைகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:&lt;br /&gt;&lt;br /&gt;1.பாஸிடிவ்ராமா &lt;a href="mailto:positiverama@gmail.com"&gt;positiverama@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.பரஞ்சோதி &lt;a href="mailto:paransothi@gmail.com"&gt;umanaths@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இவண்,&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை கூகுள் குழுமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/nambikkai" target="_blank"&gt;http://groups.google.co.in/group/nambikkai&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-411882141643286511?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/411882141643286511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=411882141643286511' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/411882141643286511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/411882141643286511'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2007/02/blog-post.html' title='நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-115019181256371880</id><published>2006-06-13T02:41:00.000-07:00</published><updated>2006-10-04T22:39:25.920-07:00</updated><title type='text'>வேட்டையாடு விளையாடு - வெள்ளெலி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tracysbeans.com/Merchant2/graphics/00000001/RATWHITEM055TGY.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px;" src="http://www.tracysbeans.com/Merchant2/graphics/00000001/RATWHITEM055TGY.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் மொதல்ல புட்டான் புடிக்கிறதையும், அப்புறம் கருந்தேள் பிடிக்கிறதையும் சொல்லிட்டேன், அடுத்தது வெள்ளை எலி வேட்டை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை எலி வேட்டையில நான் அதிகம் போனதில்லை, மத்த எல்லா வேட்டையும் பகல்லன்னா, வெள்ளலி வேட்டை ராத்திரியில தான் நடக்கும், அதிலும் அமாவாசை அன்னைக்கு தான் போவாங்க. எங்க அம்மா மாலை 6 மணிக்கு மேலே வெளியே போக அனுமதி கொடுக்க மாட்டாங்க, அதனால அடிக்கடி போகும் வாய்ப்பு கிடைக்கல, ஒரே ஒரு தடவை தான் போனேன், அதுவும் மாயாண்டி சுவாமி கோவில்கொடை அப்போதான், ஆனால் எங்க கூட்டாளிங்க அவங்க எலி புடிச்சதை கதையா சொல்லுவாங்களா, அதையும் சேர்த்து சொல்லுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க கிராமத்திலே அங்கே அங்கே வயலும், நிலக்கடலையும், வாழையும், தென்னந்தோப்புமா இருக்கும். ஒவ்வொருத்தர் வீட்டுக்கு பின்னாலேயும் கொறஞ்சது 10 தென்னமரமாவது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அருமையான கிராமம், தோட்டத்தில வேலியோரமா பெரிய பெரிய பொந்துங்க இருக்கும். நாங்க கிரிக்கெட் ஆடும் போது செல சமயம் பந்து பொந்துக்குள்ள போயிடும், அப்போ நான் கையை விட்டு எடுக்க பயப்படுவேன், ஏலே! பாம்பு கீம்பு இருக்கும்லே” என்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ என் நண்பர்கள் சொல்லுவாங்க, “ஏலே! அது பாம்பு பொந்துல்ல அது வெள்ளலி பொந்து, பாம்பா இருந்தா அதன் தடம் தெரியுமுல்ல” என்பாங்க. இருந்தாலும் நான் அந்த பக்கம் போகமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தைரியமான பசங்க போயி எடுத்துட்டு வருவாங்க, நான் அவங்க கிட்ட ஆமா எப்படி இதை வெள்ளெலி பொந்துன்னு சொன்னேன்னு கேட்டா, அதுவா! வெள்ளெலி கூட்டமா தான் இருக்கும், அதுவும் ஒரு பொந்து வழியா மட்டும் போகாது, சுத்தி சுத்தி பொந்தடிச்சி இருக்கும், ஒவ்வொரு 10 மீட்டர் தூரத்திலும் பொந்து இருக்கும், எல்லாம் பொந்தும் இணைஞ்சி இருக்கும், ஆபத்துன்னா பல பொந்து வழியாக எல்லா எலிகளும் தப்பிச்சி ஓடுமுன்னு எங்க கூட்டாளிங்க சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அப்படியான்னு கேட்டுட்டு விட்டுட்டேன். ஒரு நாள் மாலையில் கிரிக்கெட் ஆடிட்டு வரும் போது, எங்க கூட்டாளிங்க, குசுகுசுன்னு பேசிட்டாங்க, என்னான்னு கேட்டதுக்கு, “இன்னைக்கு அமாவாசை ராத்திரி, வெள்ளெலி புடிக்க போடுறோம், வெற்றிவேல் அஞ்சாறு இரும்பு கம்பி தயார் செய்துட்டான், சுதாகர் அண்ணா 5 கட்டை டார்ச் லைட் கொண்டு வருவாங்க, முருகன் மசாலா, உப்பு எல்லாம் கொண்டு வருவான், நீயும் வாரியா?”&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்கு மேலே வீட்டட விட்டு வெளியே போகவோ, வெளியிலிருந்து பிந்தி வருவோ அம்மா அனுமதிப்பதே கிடையாது, இந்நிலையில் எப்படி போவது, என்னால் முடியாதுப்பான்னுட்டேன். முருகனும் ஆமாம், அவன் வரவேண்டாம், அவங்க அம்மா அவனை மட்டுமல்ல, நம்ம தோலை கூட உரிச்சிப்புடுவாங்கன்னு பயம் காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து என்னால எலி புடிக்க போகமுடியலைன்ன வருத்தமாக இருந்தது, ஆனாலும் அம்மாவின் ஆணையை மீற முடியதே. ஏதாவது பொய்யை சொல்லிட்டு போகலாமான்னு யோசித்தேன், ஒன்றுமே புலப்படலை, புலம்பிக்கொண்டே படுத்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் விடியற்காலையிலேயே வழக்கம் போல் ஊற வச்ச பச்சை கடலையை துன்னுட்டு ஓட்டம் ஓடி, உடற்பயிற்சி செய்ய கிளம்பி போனேன், அங்கே போனால் முருகன், முத்து, வெற்றி எல்லாம் அங்கே படுத்துகிடந்தாங்க. நான் எழுப்பி, என்ன வீட்டுக்கு போகலையான்னு கேட்டதற்கு “செகண்ட் ஷோ சினிமா பார்த்து, அதன் பின்னர் ராத்திரி முழுவதும், வெள்ளெலி புடிச்சும், திருட்டுத்தனமாக எளநீ களவாடியும் வர நேரம் ஆயிட்டுதாம், அதான் இங்கேயே படுத்துட்டோம்”&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவிங்களா! ராத்திரி பூரா வீட்டுக்க்கு போலையா, நல்லவேளை நான் இவன்க கூட போகலை, இல்லேன்னா அம்மா ராத்திரி பூரா என்னை காணம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க, காலையில் வீட்டுக்கு போனால் தோலை உரிச்சிருப்பாங்க. சித்தப்பாகிட்ட சொல்லி இருப்பாங்க, அவங்க வேறு கன்னாபின்னான்னு திட்டியிருப்பாங்க, முருகா என்னை காப்பாதிட்டன்னு திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி சொன்னான், உன் பங்கை எடுத்து வைச்சிருக்கோம், எடுத்துக்கோன்னு சொன்னான். எனக்கு சாப்பிட மனசு இல்லை, எலியை போய் சாப்பிடுவதா என்று மூஞ்சியை சுளித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே முத்து சொன்னான் “அண்ணே! வீட்டிலே கோழி கண்டதையும் தின்னுது, அதையே சாப்பிடுறீங்க, வெள்ளெலி கண்டதையும் சாப்பிடாது, நெல்லு, பயிரு, கடலை தான் சாப்பிடும்”.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்போவும் கொஞ்ச பந்தா, ஈகோ, வித்தியாசமானவன்னு காட்டிக்குவேன், கடைசி வரை நான் எலி வறுவலை சாப்பிடவில்லை. ஆனாலும் வெள்ளெலி பிடிக்கும் மொறையை பார்க்க ஆசை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியா மாயாண்டி சுவாமி கோவிலில் கொடை வந்தது. வில்லுப்பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், கதை சொல்லுவாங்க தானே, ஆனா எங்க கேங்குக்கு பிடிக்காது. அன்னைக்கு ராத்திரி வில்லுப்பாட்டு, போன வருசம் வந்தவரையே புக் பண்ணியிருந்தாங்க, அவரும் போன வருசம் சொன்ன கதையையே சொல்லத் தொடங்கினார், எல்லோரும் கொட்டாவி விட்டோம், உடனே பசங்க அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசினாங்க, சுதாகர் அண்ணாவை போய் பார்த்தாங்க, எங்க பாஸ் அவரும் கிளம்பிட்டார், எல்லோரும் வெள்ளெலி புடிக்க கிளம்பிட்டாங்க. நானும் என் அம்மாகிட்ட ராத்திரி பூரா வில்லுப்பாட்டு கேட்டு தான் வருவேன், லேட்டாச்சின்னா கோயிலேயே படுத்துக்கிறேன்னு மொத தடவையா அனுமதி வாங்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பயங்கரமான ஆர்வம், திரில், சொல்ல முடியாத சந்தோசம். போகிற வழியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக முருகன் பதில் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;எலி எப்படி பிடிப்பீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கையில் பெரிய கம்பி, முனை கூறாக இருக்குதே அதை வைத்து குத்தி பிடிப்போம். இல்லாட்டி சாக்கு வைச்சி பிடிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பியை குத்துவதுக்குள்ள எலி ஓடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;எலி ஓடாது, அதுக்கு தான், எலியை பார்த்ததும், டார்ச் லைட்டை அதன் கண்ணில் அடிக்கணும், எலி ஆடாம அசையாம நின்னுடும், உடனே ஒரே குத்து, குத்தி தூக்கிடுணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை எலி பொந்துக்குள்ள இருந்தா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு தான் மம்முட்டி இருக்கே, அதை வெச்சி வெட்டி பிடிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ தானே சொன்னே, எலி பல பொந்து வழியா ஓடுமுன்னு, அப்போ என்ன செய்வே?&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு தான் பொந்துகிட்ட இருக்கணும் கையில் சாக்கு பை இருக்குதுல்ல, அதை வைச்சி போத்தி பிடிக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பு கீம்பு பொந்துல்ல இருந்தா?&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் கடுப்புல “ஏலே சும்மா வாரியா, பாம்பு இருந்தா நீயே பிடி, அதான் பாக்க போறேல்ல”&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு மேலே பேசினா, கம்பியால என்னை குத்திப்புடுவான்னு விட்டுட்டேன். நேரா எங்க பாட்டி வீட்டு தோட்ட வேலிபக்கம் போனாங்க, அங்கே நெறைய ஒட மரம் இருந்தது, முள் கால்ல ஏறினா, மூணு நாளுக்கு வலிக்கும், அதே பயத்தில் கவனமாக போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நைசா பூனை மாதிரி நடந்தோம், அவங்க சொன்ன மாதிரியே வெள்ளெலி நடமாட்டம் இருந்துச்சு, ஆனா நேருக்கு நேரா டார்ச் அடிக்கும் நிலையில் ஒன்னும் வரலை, வந்த ஒரு எலியையும் ஒருத்தன் தும்மல் போட்டு விரட்டிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பொறுமை இல்லாம எல்லோரும் எலிகளை வெரட்டிக்கிட்டு போனோம், ஒவ்வொன்னும் ஒவ்வொரு தெசையில ஓடி, பொந்துல போயிட்டுது. அப்புறம் என்ன முருகன், முத்து எல்லாம் ஆளுக்கு ஒரு பொந்தை தோண்டினாங்க, நாங்க ஆளுக்கு ஒரு பொந்துகிட்ட சாக்குபையை பிடிச்சிக்கிட்டு இருந்தோம், ஒன்னும் வருகிறபாடு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வெறுத்து போய், சரி வேற பக்கம் போகலாமுன்னு போனோம், அங்கேயும் எங்க சத்தம் கேட்டு எலிகள் ஓட்டுது, உடனே பாஸ் சொன்னார் “எலி புடிக்க கூட்டம் சேர்க்ககூடாது, மூணு பேருக்கு மேல போன இப்படி ஆகும்”&lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டுமல்ல, ஊருக்கு கோவில்கொடைக்கு வந்த பட்டினத்து பசங்க வேற வர, ஒரே திருவிழா கோஷ்டி மாதிரி தான் எலி புடிக்க போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் முருகன் ஒரு பொந்தை தோண்ட நாங்க ஆவலோடு பார்த்துட்டு இருந்தோமா, சடார்ன்னு உள்ளே இருந்து ஒரு பாம்பு எங்களுக்கு பயந்து  எங்க காலுக்குள்ள ஓட, நாங்க அதுக்கு பயந்து அலறி அடிச்சிட்டு ஓட, கோஷ்டி கும்பல் எல்லாமே எலிகளை விட அதிக திசைகளில் ஓடிட்டாங்க, நானும் பயந்து முள் செடி எல்லாம் தாண்டி ஒரே ஓட்டமாக ஓடி, ரோட்டுக்கு வந்துட்டேன், கை, கால், முட்டி, எல்லாம் முள் கிழித்து ரத்தம் வந்தது, நல்லவேளை பாம்பு கடிக்கலைன்னு மனசை தேத்திக்கிட்டு கோயிலுக்கு வந்தேன். அங்கே எனக்கு முன்னாடியே பல பயலுக்கு வந்துட்டாங்க. எங்க பாஸ், சுதாகர் அண்ணா, முருகன் மூணு பேர் மட்டும் வரலை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில மூணு பேரும் வந்தாங்க, எலே! கோயிலுக்கு பின்னாடி வாங்கலே! எளநீ வெட்டி வந்திருக்கோம், சாப்பிடலாமுன்னு கூட்டிட்டு போனாங்க. நாங்க ஓடி வந்த பின்னாடி அவங்க ஒரு தோப்புல நொழஞ்சி எளநீ வெட்டிட்டு வந்துட்டாங்க, நாங்களும் ஜாலியா சாப்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளெலி வேட்டை இத்தனை கஷ்டமான்னு நினைச்சா, செல மக்க செலவே இல்லாமல் எலி புடிச்சாங்க அது எப்படின்னு அடுத்த வாட்டி சொல்லுறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-115019181256371880?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/115019181256371880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=115019181256371880' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/115019181256371880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/115019181256371880'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/06/blog-post_13.html' title='வேட்டையாடு விளையாடு - வெள்ளெலி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114966827211340962</id><published>2006-06-07T01:17:00.000-07:00</published><updated>2006-06-10T18:01:00.353-07:00</updated><title type='text'>வேட்டையாடு விளையாடு - கருந்தேள்</title><content type='html'>போன வாட்டி நான் சின்ன வயசுல தும்பி/புட்டான்/தட்டான் புடிச்ச கதையை சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வருசம் முழுவதும் தும்பி, பட்டாம் பூச்சி/வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் விளையாடு விளையாடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மழைக்காலம் வந்தால் எங்க ஊரில் பட்டுப்பூச்சின்னு ஒரு பூச்சி வரும், அய்யோ எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? சிறிய வண்டு மாதிரி தான், ஆனால் பஞ்சு மாதிரி உடம்பு முழுவதும் பட்டு துணி/கம்பிளி போர்த்தியது போல் சிவப்பாக பளபளக்கும். கையில் எடுத்தால் கால்களை எல்லாம் மடக்கிக் கொண்டு சுருண்டு போய் அமைதியாக இருக்கும், கடிக்கவும் செய்யாது, அது எப்படி வருது, எப்படி போகுதுன்னு இதுவரை தெரியவில்லை, ஏதோ வானத்தில் மழை பெய்யும் போது விழுதுண்ணு சின்ன வயசிலே பேசிக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் அதை சேகரிப்போம், ஒரே நாளில் அது மண்டையை போட்டும், பள்ளிக்கூடத்துக்கு (5வது படிக்கும் வரை) போகும் போது அதையும் கொண்டு போயிடுவோம், ஒரு பக்கம் நான் என்னுடையதை விட, அடுத்த முனையில் என் கூட்டாளி அவனது பட்டுப்பூச்சியை விட, யாருடையது முதலில் நடுமத்திசெண்டர் போகுதுன்னு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;செல சமயம் இப்படி வெளையாட, முதுவில் டீச்சர் ஓங்கி ஒரு அறை வைப்பாங்க, அதன் பின்னரே ஆட்டம் தடை படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக 6வது வகுப்பு போன போது, வாழ்க்கை பருவத்தில் அடுத்த நிலைக்கு போனமாதிரியான ஒரு எண்ணம், பெரியவங்களை பார்த்து அவங்களை மாதிரி நடக்க ஆசைப்படுதல் எல்லாமே தொடங்கியது, அப்போ தான் பட்டம் விடும் விளையாட்டு, கோலி, சோடா பாட்டில் மூடி, சிகரெட் அட்டை, பம்பரம், கபடி எல்லாம் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ எனக்கு கூட்டாளி, குருவாக முருகன் கிடைச்சான். முருகனுக்கு என்னை விட ஒரு வயசு கூட, எங்க தெருவிலேயே 3 முருகன்கள், அதில் ஒருவரை மட்டும் அண்ணன் என்று அழைப்பேன், அவர் இப்போ இங்கே எங்க வீட்டுக்கு எதிரே தான் குடும்பத்தோடு இருக்கிறார், சக்திக்கு தினமும் விளையாட ஒரு அத்தை இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தோழன் முருகன் சரியான வால், வீட்டிலேயே இருக்கமாட்டான், எப்போ பார்த்தாலும் ஏதாவது சேட்டை செய்துகிட்டே இருப்பான், கொரங்குப்பய என்றே எல்லோரும் அவனை சொல்லுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவ, எங்க தெருவுக்கு அடுத்த தேரிக்காட்டுக்குள்ள போய் பிள்ளையார் பந்து விளையாடினோம், ஒருத்தன் வீசின பந்து அங்கே இருந்த பாழடைந்த கெணத்துல விழுந்துட்டது, அவனை போட்டு முருகன் நல்லா சாத்திட்டான், அவனும் அழுதுட்டே இருக்க, முருகன் அவனை சமாதானம் செய்ய, “சரி சரி! நான் ஒனக்கு நட்டுவக்காலி பிடிச்சு விளையாட சொல்லித்தாரேன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒன்னுமே புரியலை, நட்டுவக்காலியை பிடிப்பதா? அது எப்போவாவது வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள வரும், எங்க கண்ணுல பட்டால் அடுத்த நிமிடமே பரலோகம் போயிடுமே. இங்கே காட்டுக்குள்ள எங்கே பிடிப்பான் என்று நெனைச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நெறைய கொழுஞ்சி செடி இருக்கும் இடத்துக்கு போனான், அப்படியே தரையில் ஊர்ந்து கொண்டு ஒவ்வொரு செடியின் மூட்டையும் பார்த்துக் கொண்டே போனான், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு பெரிய குச்சியை கொண்டு வரச் சொன்னான். அங்கே ஒரு சின்ன பொந்து, நாலு விரல் நுழையும் அளவு துவாரம், அதில் ஒரு குச்சியை எடுத்து விட்டான். குச்சியான நன்றாக உள்ளே போனதும், மட மடவென்று மண்ணை கையால் கிண்டி, தோண்டினான், அப்புறம் ஒரு ஒடைஞ்ச மண்சட்டி  ஓட்டை வைத்து வேகமாக தோண்டினான், குச்சி சென்ற அளவுக்கு தோண்டியதும், மீண்டும் குச்சியை பல திசைகளில் நுழைத்தான், ஒரு பக்கம் குச்சி விட்டதும் நுழைந்து விட்டது, முழு குச்சி நுழையும் அளவுக்கு விட்டு மீண்டும் தோண்டினான், இப்படியாக நாலு, அஞ்சு மொறை செய்த பின்பு, எல்லோரையும் தள்ளிப்போகச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் 10 அடி தூரம் தள்ளி போயி நின்னுட்டேன், கையில் பெரிய கல்லை வேறு எடுத்து வைச்சிக்கிட்டேன், பாதுகாப்புக்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நிமிடத்தில் மண்ணை பொழந்துக்கொண்டு பெரிய நட்டுவக்காலி (கருந்தேள்) வந்தது, அய்யோ பொட்டபுள்ளங்க எல்லாம் ஓடிட்டாங்க, நானும் 4 அடி பின்னாடி போயிட்டேன். முருகன் மட்டும் தேளை அந்த குச்சியால் நோண்டினான், அது குச்சியை படக் படக் என்று கொட்டியது. கொஞ்ச நேரம் கொட்ட வைத்த பின்பு, அந்த குச்சியால், தேளை மண்ணோடு அமுக்கி பிடிச்சிக்கிட்டு, கொடுக்கை மட்டும் ஒரு கல்லை வைத்து தட்டி எடுத்துட்டான். இப்போ பயமே இல்லைன்னு தேளை கையில் எடுத்து ஓட விட்டான், அய்யோ எனக்கு ஒடம்பு எல்லாம் புல்லரிச்சுட்டுது. பயமாக இருந்தது. அப்புறம் முருகன் அந்த தேளை எடுத்து ஒவ்வொருத்தர் மேலும் தூக்கிப் போட, நான் ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்கு வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அடுத்த நாளும் முருகனை கூப்பிட்டுகிட்டு ஒரு பெரிய படையே கிளம்பியது, கருந்தேள் பிடிக்கத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை முருகனின் மாணவன் முத்து தோண்டினான், தேள் வரும் நிலை வந்ததும், முருகன் வந்து கொடுக்கை பிடுங்கினான், அன்று நாலு, அஞ்சு தேள் பிடிச்சிட்டோம், அப்புறமா மாயாண்டி தாத்தா வீட்டு திண்ணையில் விட்டு தேள் ரேஸ் வச்சோம். அப்புறம் இரு தேள்களை கிளாடியேட்டர் ஸ்டைலில் சண்டை போட வச்சோம், அப்புறமா ஒரு தேளின் வாலில் நூலைக்கட்டி இரு பக்கமாக இழுக்க வைச்சோம், இப்படி எல்லாம் செய்து முடிக்க, எங்க தேள் விளையாட்டு எங்க அம்மாகிட்ட என் தம்பி போட்டு கொடுக்க, அம்மா வந்து நாலு சாத்து சாத்தினாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்த பின்பு எங்க அம்மா, யாரோ ஒருவரை தேள் கொட்டியதால் விஷம் ஏறி செத்து போயிட்டார், ஒருவருக்கு கை, கால் விளங்கலைன்னு கதை சொன்னாங்க. அதிலும் மஞ்ச தேள் ரொம்ப விஷமுன்னு சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எங்க அத்தை பொண்ணு, அத்தை மகன் எல்லாம் லீவுக்கு, கோயில் கொடைக்கு ஊருக்கு வந்தால், தேள் பிடிக்கும் வித்தையை காட்டி அசத்தியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அப்படி தான் வீட்டு வாசப்படி மேல சாவி இருக்கும் அதை எடுக்க கையால் தடவ, படக்குன்னு ஏதோ குத்திச்சி, வேகமாக கையை எடுத்தால் மஞ்ச தேள் ஒன்னு கீழே விழுந்தது, அவ்வளவு தான், அய்யோ அம்மான்னு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டிட்டேன். அம்மா அதை வெளக்குமாத்தால அடிச்சி கொன்னுட்டாங்க, எனக்கோ வலி தாங்க முடியலை, அழுது புரண்டேன். உடனே அம்மா, பக்கத்து வீட்டு சுப்பையா மாமா, கோபால் மாமா வீட்டு அத்தை என்றே தெருவே கூடிட்டது, ஆளுக்கு ஒரு வைத்தியம் சொன்னாங்க, ஏதேதோ குடிக்க சொன்னாங்க, எனக்கோ விர் விர்ன்னு வலி ஏறியது. உடனே தம்பி டாக்டர் மாமா கிட்ட போய் ஒரு ஊசி போட்டாங்க, செல மாத்திரையும் கொடுத்தாங்க, அதன் பின்னர் வலி போயிட்டது, ராத்திரி பூரா தூக்கமே இல்லை, எங்கே செத்து போயிடுவேனோன்னு, காலையில் முழித்தவுடன் தரையில் கால் படுதான்னு பார்த்தேன், நல்ல வேளை உசுரோடு தான் இருந்தேன். அதன் பின்னர் அடிக்கடி கை வலிக்கும், ஊறல் எடுக்குமா, உடனே வெஷம் இன்னமும் இருக்குது, அதை இறக்கணும், அதுக்கு மசூதியில் ஓதும் பாய் மந்திரிச்சு கொடுக்கும் தேங்காய் எண்ணேய் தேய்த்தால் போதும் என்று சொல்ல, எங்க அத்தை சீறுடையார் புரத்துக்கு கூப்பிட்டு போய் பாய்கிட்ட சொல்ல, அவரும் தேங்காய் எண்ணேயை ஓதி கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கொடுத்த எண்ணேயை போட்டால் வலியே காணமல் போயிடும், அதன் பின்னர் அந்த எண்ணேய் யப்போ பூச்சி கடிச்சாலும் போடுவோம், உடனே சரியாயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் முருகன் சொன்னான், ஒரு தடவை தேள் கொட்டிட்டா, அதன் பின்னர் தேள் கொட்டினா விஷம் ஏறாதுன்னான். அதன் பின்னர் தேள் பிடிக்கும் விளையாட்டு சூடுபிடிச்சது, பாழடைந்த கெணத்துல சைடுல இருக்கும் பாறையை உயர்த்தினா செல சமயம் மஞ்ச தேள் எல்லாம் கிடைக்கும், செல சமயம் குட்டி குட்டியா தேள் குட்டிகள் ஓடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் ஆடும் போது ஒரு முறை அடிச்ச பந்து பனமரத்துக்கு அடியில போய் விழ, அங்கே போனா இரண்டு தேள் புதுசா கல்யாணம் ஆன மாதிரி இருந்தாங்க, அதை பார்த்த எங்க குரு (இவர் வேற, இவர் பெயரு அலிபாபா), அதுக்கு பெரிய கதையே சொன்னாரு, தேள்களின் காதல், கல்யாணம், ஆண் தேளின் கதி, இப்படி, இந்த கதை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே, குவைத்துல கூட பாலைவனத்தில கிரிக்கெட் ஆடும் போது கோழி குஞ்சு சைஸில் தேள்/நட்டுவகாலி பார்த்திருக்கிறேன். இங்கே தேளுக்கு பதில் உடும்பு பிடிச்சிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி, இவ்வளவு தூரம் தேள் புராணம் பாடிட்டு, ஒரு கதை சொல்லலைன்னா என் பேரு கெட்டு போயிடாது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க பக்கத்து வீட்டுக்காரங்க எங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுப்பாங்க, அடிக்கடி பிரச்சனை வரும், அம்மா ரொம்பவே அமைதியாக இருப்பாங்க. அவங்க வீட்டு சின்ன பசங்க எங்க வீட்டுக்கு வெளையாட வந்தா, நான் வெரட்டி விடுவேன். அப்போ அப்போ கருவேப்பிலை பறிக்க வருவாங்க, நான் அம்மாகிட்ட ஏம்மா, நீங்க அவங்களை உள்ளே விடுறீங்க, அவங்க தான் நம்ம கூட சண்டை போடுறாங்க தானே என்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு எங்க அம்மா சொல்லுவாங்க, அவங்க சுபவாசம் அப்படி, அதுக்கு நாம நம்மளை மாத்திக்கக்கூடாது, நாம நாமாகவே இருக்கணும்பாங்க, அப்படி சொல்லி ஒரு தேள் கதை சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாட்டி ஒரு சாமியார் தன் சீடர்களுடன் ஆத்துப்பக்கமா போனாராம், அங்கே ஒரு கருந்தேள் தண்ணியில் தத்தளித்து கொண்டிருந்திச்சாம், சாமியாரும் பாவமுண்ணு அதை காப்பாற்ற தன் கையால் எடுத்தாராம், எடுத்து வெளியே வருவதற்குள் தேள் கொட்டிவிட, சாமியாரும் கையை உதறிவிட்டாராம், மீண்டும் தேள் தண்ணீரில் விழுந்து தத்தளிச்சதாம், மீண்டும் கையால் பிடிச்சி தூக்கினாராம், மீண்டும் கொட்டியதாம், இப்படியாக இருக்க, அதை பார்த்த குருவின் சீடர் “சாமி! அதான் அந்த தேள் கொட்டுதே, அதை விட்டு விட்டு போகலாமே, அதை ஏன் காப்பாற்ற நினைக்கிறீங்கன்னாராம்”&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு குரு சொன்னாராம் “சீடனே! தேளின் தன்மையானது கொட்டக்கூடியது, அதற்கு நான் காப்பற்றத் தான் கையால் பிடிக்கிறேன் என்று தெரியவில்லை, அதுக்காக நாம நம் மனிததன்மையை விட்டு விட்டு அதை தண்ணீரிலேயே விட்டு போகலாமா? தேள் தன் வேலையை செய்கிறது, நான் என் வேலையை செய்கிறேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கதையாக சொன்ன அம்மா, தேள் மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்க, ஆனா நாம அப்படி இருக்கக்கூடாது, நம் கடமையை சரியாக செய்யணும் என்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சரியான கோபம், யார் மேல, சீடன் மேல தான். குருவை தேள் கொட்டுது, குரு தான் முட்டாத்தனமாக கையை விட்டு தேளை பிடிக்கிறார், சீடனாவது ஒரு கட்டையோ, துணியோ, வேறு எதையாவது கொடுக்கலாம் தானே, ஒரு வேளை குரு பரமார்த்த குருவா? சிஷ்யன் மட்டி, அல்லது மூடனா?&lt;br /&gt;&lt;br /&gt;இதை எங்க அம்மாகிட்ட கேட்டிருந்தால் தலையில் ஒரு கொட்டு விழுந்திருக்கும், அதான் உங்ககிட்ட கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வேட்டை : வெள்ளை எலி – விரைவில்…&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114966827211340962?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114966827211340962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114966827211340962' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114966827211340962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114966827211340962'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/06/blog-post_07.html' title='வேட்டையாடு விளையாடு - கருந்தேள்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114959257688163894</id><published>2006-06-06T04:14:00.000-07:00</published><updated>2006-06-07T03:18:54.220-07:00</updated><title type='text'>வேட்டையாடு விளையாடு – புட்டான்</title><content type='html'>சின்ன வயசு நடந்த சம்பவங்களை இப்போ நெனச்சி பார்த்தாலும் சந்தோசமாகத் தான் இருக்குது. அதை அப்போ அப்போ சிவாவின் பதிவுகள் படித்து அனுபவிச்சியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமம் என்றாலே அங்கே வெளையாட்டும் வேட்டையாடுதலும் இல்லாம இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மொத வேட்டையாடுதல் எப்படி தொடங்கிச்சின்னா, புட்டான் (தும்பி) பிடிக்கிறதிலயும், கலர் கலர் ஈ பிடிக்கறதிலயும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புட்டான் பிடிக்கும் கலையே தனிதான், செடியில் அமர்ந்திருக்கும் புட்டானை, சவுண்டே வுடாம நைசா பூனைக்கணக்கா கிட்ட போய், அதன் வாலை பிடிக்க வேண்டும், பிடித்தவுடன் உடனே அதன் ரக்கையை பிடிக்கணும், இல்லேன்னா வெட்டருவா புட்டான் கடிச்சிபுடும். நான் கடியும் வாங்கியிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புட்டான்கள் பலவகையுண்டு. சின்னதா இருப்பது கொசு புட்டான், அதை பிடிக்கிறது மகா கஷ்டம். அப்புறம் மஞ்ச நிறத்தில் இருக்கிறதுக்கு பேரு எங்க ஊரில் திருடன், ஊதா நிறத்தில் திருடன் சைசிலேயே இருக்கும் புட்டானுக்கு போலிஸ்காரன்னு பேரு, காரணம் ஊதா புட்டானை கண்டதும் மஞ்ச புட்டான் பறந்துடும். அப்புறம் டேஞ்சர் புட்டான் நம்ம வெட்டருவா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டருவா புட்டான் பச்சை நிறத்தில் போலிஸ் திருடனை விட கொஞ்சம் பெரிசா இருக்கும். மகா மோசமான புட்டான், அவன் கிட்ட போலிஸ், திருடன், கொசு இப்படி யாரு மாட்டினாலும் கடிச்சு துன்னுபுடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் செல சமயம் நல்ல கலர் கலரா புட்டாங்கள் வரும், வந்துட்டா, யாரு நல்ல அழகான புட்டான் வச்சிருக்கானோ அவனுக்கு தனி மரியாதை, அந்த பயவுள்ள ராத்திரி அதை ஒரு அட்டை பெட்டியில் வைத்திருப்பான்,&lt;br /&gt;காலையில் பார்த்தால் எறும்புங்க தின்னுட்டி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கப்டப்பு இருக்கிற இடத்துல செவப்பு நெறத்துல நிறைய புட்டாங்கள் பறக்கும், அதை நாங்க வெளக்குமாரு வைச்சி அடிச்சி புடிப்போம்.&lt;br /&gt;நான் பயப்படுகிற புட்டானே, அந்த மல புட்டான் தான். அதை மலை புட்டான்னு சொல்லுறதா இல்லை மழை புட்டான்னு சொல்லுறதான்னு இன்னும் கொழப்பம் இருக்குது, சிவாகிட்ட தான் கேட்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை பேஞ்சா ஒடனே வந்துடும், அய்யோ ராத்திரி லைட் மேலே மோதிகிட்டே இருக்கும், திடிரென்று ராக்கெட் வேகத்தில் கீழே பாயும், நான் பயந்து ஓடுவேன். செல சமயம், நம்ம மேலே, சட்டையில் இருக்கும், அதை தம்பி சொல்ல, அய்யோ, குய்யோன்னு சட்டையை கழட்டி போட்டு ஓடுவேன். அப்புறம் அம்மா வெளக்குமாத்தை கொடுக்க, வீராதி வீரன் என் தம்பி, தைரியமாக அதை அடித்து ஒரு கையால் பிடிச்சி வெளியே வீசிடுவான், அடுத்த நாள் எங்க வீட்டு எறும்புகளுக்கு பிரியாணி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செல சமயம், நம்ம கூட்டாளிங்க மழை புட்டானை பிடிச்சிட்டு வந்து அதன் வாலில் நூலை கட்டி விடுவான்க, அது அங்கேயும் இங்கேயும் ஓடும், செல பயலுக நூலை இழுக்க, வால் அறுந்துடும், அவனை போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவோம். செல சமயம் புட்டான் பறந்து வேப்ப மரத்து உச்சிக்கு போயிடும், நாங்களும் விட்டுட்டு அடுத்த் ஆட்டத்துக்கு போயிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரு கோயிலு கொடை வந்துட்டா போதும், கிடா வெட்டுவாங்க தானே. விழா முடிஞ்சதும், எங்க கூட்டாளிகள் எல்லாம் காட்டுக்குள்ள மண் கோயில் கட்டுவோம், மண் சட்டியில் பேப்பரை ஒட்டி, கொட்டு தயார் செய்வோம், பூவரசு எலையை எடுத்து பீப்பீ செய்வோம், ஆளுக்கு ஒரு இசைக்கருவி.&lt;br /&gt;அப்புறம் சாமியாட ஒருவர், விபூதி, சாம்பிராணி, சாமி எல்லாம் தயார்.  அப்புறம் கிடாவுக்கு எங்கே போறது, இருக்கவே இருக்குது நம்ம புட்டான்கள்.&lt;br /&gt;நாங்க புட்டான்களை புடிச்சிட்டு வந்து கொடுக்க, சாமியாடி ஆடிக்கொண்டே கிடா வெட்டுவார், நல்ல பனைமட்டை ஓரத்தில் இருக்கும் கருக்கை கத்தியாக்குவார், ஒரே வெட்டு, தல துண்டாயிடும், இப்படி 20, 30 கிடா வெட்டுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஒரு நாள் எங்க அம்மா கிட்ட யாரோ போட்டு கொடுக்க, எங்க வீட்டில் பெரிய பூசையே நடந்தது, அப்புறம் ராத்திரி ஒரு கதை சொன்னாங்க.&lt;br /&gt;ஒரு முனிவராம், ரொம்ப ரொம்ப நல்லவராம், ஒரு முறை அவர் தவறே செய்யாமல் ஒரு அரசர் அவரை பிடிச்சி, மரத்தில் கட்டி வைத்து உடம்பு எல்லாம் ஈட்டியால் குத்தச் சொல்லி கொன்னுடுவார், முனிவரும் கொடுமைகள் எல்லாம் அனுபவிச்சு, செத்து சித்திரகுப்தனிடம் போவார், அங்கே போய் அவரிடம் சண்டை போடுவார், நான் ரொம்பவும் நல்லவன், எப்போவும் இறைவனையே வேண்டுபவன், எப்படி என்னை அந்த அரசன் கொடுமைப்படுத்தி கொன்றான், நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு சித்திரகுப்தன் ரிஜிஸ்டரை எடுத்து தேதி வாரியாக சின்ன வயசில் நீர் புட்டான்களை பிடிச்சி கொன்னிருக்கீரு, அதான் உமக்கு இந்த தண்டனை என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சொல்லிட்டு அம்மா, அய்யா! அந்த முனிவருக்கே இந்த தண்டனை என்றால், உனக்கு எப்படி எல்லாம் தண்டனை கிடைக்கும், நினைச்சு பாரு, இனிமேல் அப்படி செய்யாதே, பாவமுண்ணு ஒரு அறிவுரையோடு கதையை முடிச்சாங்க, நானும் அத்தோடு புட்டான்களை கொல்லுறதை விட்டுட்டேன், ஆனா கருந்தேள் பிடிக்கத் தொடங்கிட்டேன். ஏன்னா, தேளை கொன்னா தண்டனைன்னு அம்மா கதை சொல்லலையே?&lt;br /&gt;&lt;br /&gt;அது அடுத்த கதை, கருந்தேள், மஞ்ச தேளை எப்படி புடிப்போமுன்னு வெளாவாரியா  அடுத்தவாட்டி சொல்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114959257688163894?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114959257688163894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114959257688163894' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114959257688163894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114959257688163894'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/06/blog-post.html' title='வேட்டையாடு விளையாடு – புட்டான்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114906599987549885</id><published>2006-05-31T01:57:00.000-07:00</published><updated>2006-05-31T01:59:59.886-07:00</updated><title type='text'>நம்பிக்கை போட்டி - இன்றே கடைசி நாள்</title><content type='html'>இணையத்தின் இனிய நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31 மே ௨006.&lt;br /&gt;&lt;br /&gt;விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114906599987549885?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114906599987549885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114906599987549885' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114906599987549885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114906599987549885'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/05/blog-post_31.html' title='நம்பிக்கை போட்டி - இன்றே கடைசி நாள்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114881613355310580</id><published>2006-05-28T04:29:00.000-07:00</published><updated>2006-06-06T23:20:41.443-07:00</updated><title type='text'>டென்னிஸ் - பிரெஞ்ச் ஓப்பன்</title><content type='html'>இன்று பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கிராண்ட் ஸ்லாம் எனப்படும் நான்கு போட்டிகளில் ஒன்று பிரெஞ்ச் ஓப்பன் போட்டி, நான்கில் கடுமையான போட்டி பிரெஞ்ச் ஓப்பன் தான். களிமண் தரையில் ஆடப்படுவதால் ஆட்டம் மிகவும் வேகம் குறைவாக இருக்கும், மணிக்கணக்கில் ஆட்டம் நீடிக்கும். சின்ன வயசில் மாட்ஸ் விலாண்டர் ஆட்டம் ஆடத் தொடங்கினால், நாங்க ஓட்டம் எடுப்ப்போம், அப்படி பொறுமையாக ஆடுவாங்க, மணிக்கணக்கில், நாள் கணக்கில் ஆடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விம்பிள்டன் எனப்படும் புல்தரை போட்டியில் கலக்கும் பல முன்னணி ஆட்டக்காரர்கள் களிமண் தரையில் தடுக்கி விழுவார்கள், பீட் சாம்பிராஸ் ஒரு எடுத்துக்காட்டு, அந்த வகையில் சிக்காமல் தப்பிய அதிசய ஆட்டக்காரர் ஜான் போர்க் தான். இவர் விம்பிள்டன் 5 முறையும், பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் 6 முறையும் வென்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்ச் ஓப்பன் போட்டி ஆரம்பித்தவுடன் தினம் தினம் நான் முதலில் பார்ப்பது, இன்று எந்த பெரிய தலை கவிழ்ந்தது என்று தான், ஆமாம் அது மாதிரியே நடக்கும், முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழ்வார்கள், அரையிறுதி ஆட்டக்காரர்கள் பெயரையும் ரேங்கையும் பார்த்தால் நாம் முன்னபின்ன கேள்விப்படாத பெயராகவே இருக்கும். அதில் கொஞ்சம் பேர் மட்டுமே புகழ்பெற்றவராக இருப்பார்கள் ஜிம் கொரியர், இவான் லெண்டில் இப்படி, ஆனால் மகளிர் போட்டியில் அப்படி இருக்காது, முன்னணி வீராங்கனைகள் தான் வெல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் இளம் வயதில் வென்றவர்கள் என்ற சாதனைப்பட்டியலில் ஆண்கள் பிரிவில் மைக்கேல் சாங் 17 வயதில் ஸ்டீபன் எட்பெர்க்கை வெற்றி கொண்டார். மகளிர் பிரிவில் மோனிகா செலஸ் 1990 16 வயதில் வென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக முறை வென்றவர்கள் பட்டியலில் கிரிஸ் எவர்ட் – 7 முறை, அழகான ஆட்டக்காரர், நான் பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலப்பாடத்திட்டத்தில் இவரது வாழ்க்கை வரலாறு இருந்தது. ஆடவரில் ஜான் போர்க் 6 முறை வென்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/102/399/1600/bhu-hira-bw1.png"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; CURSOR: pointer" alt="" src="http://photos1.blogger.com/blogger/102/399/320/bhu-hira-bw1.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;இந்தியர்கள் பிரெஞ்ச் ஓப்பனில் என்று பார்த்தால் மகேஷ் பூபதி ஜப்பானை சேர்ந்த அழகான இளம் வீராங்கனையோடு ஜோடி சேர்ந்து ஆடி வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை 1997ல் வென்றார். பின்னர் லியாண்டருடன் சேர்ந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் 1999 மற்றும் 2001ல் வென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு வென்றவர்கள் ஆடவர் பிரிவில் ரபெல் நாடல், மகளிர் பிரிவில் ஜஸ்டின் ஹெனான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு ???&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் களிமண் ராசா ரபெல் நாடல் வெல்லுவார் என்று எதிர்பார்க்கலாம். &lt;a href="http://www.dinamalar.com/2006may30/photos/Sports%20-%2007.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.dinamalar.com/2006may30/photos/Sports%20-%2007.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/2006may30/photos/Sports%20-%2007.jpg"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="tamil"&gt;&lt;a href="http://www.rolandgarros.com/en_FR/index.html"&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114881613355310580?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114881613355310580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114881613355310580' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114881613355310580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114881613355310580'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/05/blog-post_28.html' title='டென்னிஸ் - பிரெஞ்ச் ஓப்பன்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114853955497101200</id><published>2006-05-24T22:24:00.000-07:00</published><updated>2006-05-24T23:47:30.656-07:00</updated><title type='text'>நான் யார்?  மதுமிதா மற்றும் அனைவருக்கும்</title><content type='html'>வலைப்பதிவர் பெயர்: &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;பரஞ்சோதி (எ) சுரேஷ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ பெயர்   : &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;பரஞ்சோதியின் பக்கம், சிறுவர் பூங்கா, சிறுவர் பாடல்கள், சாதனையாளர்கள், நம்பிக்கை, முத்தமிழ் மன்றம், விரைவில் சக்தி புராணம் மற்றும் சிறுவர் உலகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி(url)         :  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;http://paransothi.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;                       http://siruvarpoonga.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;                       http://siruvarpaadal.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;                       http://nambikkaioli.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;                       http://muthamilmantram.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;                       http://saathanai.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;                       http://sakthiparansothi.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;                       http://siruvarulagam.blogspot.com/&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்:  &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;பிறந்தது சென்னையில், நடை பயின்றது ஹைதராபாத்தில், பாடம் பயின்றது  திருச்செந்தூர் பரமன்குறிச்சியில், வாழ்க்கை நடத்துவது அபூஹலிபா குவைத் நாட்டில், அடுத்தது ?????.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடு: &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;தாய் நாடு : இந்தியா, தந்தை நாடு: குவைத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ அறிமுகம் செய்தவர்: &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;நம்ம ஜெர்மனி முத்து அவர்கள் தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;2004லேயே ஜெர்மனி முத்து தொடங்கி கொடுத்தார், ஆனால் பதிவுகள் தொடங்கியது ஜீன் 2005ல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எத்தனையாவது பதிவு: &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;குத்து மதிப்பாக 100+&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவின் சுட்டி(url):  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;http://paransothi.blogspot.com/2006/05/blog-post_24.html&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;என்னைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ளவே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தித்த அனுபவங்கள்: &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;எக்கசக்கம், சொல்ல ஆரம்பித்தால் நிப்பாட்ட முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற நண்பர்கள்: &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;எக்கசக்கம், சொல்லாமல் விட்டால் நன்றாக இருக்காது, ஜெர்மனி முத்து, மூர்த்தி அண்ணா, சாகரன், முத்துகுமரன், இராகவன் அண்ணா, இசாக், கவிமதி, நண்பன், முருகபூபதி, பாஸிடிவ் ராமா (எங்க ஊர்க்காரர்), சிவா (எங்க சொக்காரர்), விழியன், மஞ்சூர் ராசா, சித்தார்த், பாம்பாட்டி சித்தன், துளசி அக்கா, மனு அம்மா, நிலா சகோதரி, சண்முகி அக்கா, இன்னும் பல தமிழ்மண, தேன்கூடு நண்பர்கள், வலைப்பதிவை தாண்டி எக்கசக்கமான நண்பர்கள், உறவினர்கள். ஆனா பாருங்க, என்னை விட என் மகள் சக்திக்கு தாங்க அதிக நண்பர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்றவை: &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;அதுவும் எக்கசக்கம், தினம் தினம் கற்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம், ஆனால் பயனுள்ளதாக எழுதலாம் என்ற எண்ணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி செய்ய நினைப்பவை: &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;குழந்தை இலக்கியத்திற்காக என் பங்கிற்கு ஏதாவது செய்வது, முடிந்தால் தமிழிலில் முழுவதும் குழந்தைகளுக்கான இணைய தளம், அதற்கூ உதவ நண்பர்களை தேடி வருகிறேன், உதவுவார்கள் என்றும் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;சொல்ல ஒன்றும் இல்லை என்று சொல்லலாம், ஆனாலும் சொல்கிறேன். வாழ்க்கையில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நம்புபவன், இல்லை என்றால் எங்கேயே ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக்கா இருக்க வேண்டியவன், உங்க எல்லோருக்கும் அறிமுகம் ஆகி இருப்பேனா என்ன? என் முன்னேற்றத்திற்கு முழு காரணம் என் தாயாரும் என் மனைவியும் தான், இப்போ என் மகளும் கூட.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:  &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;நண்பர்களே! இறைவன் படைத்த அழகிய உலகில் நாம் வாழும் நாட்கள் கால சக்கரத்தில் ஒரு புள்ளியை விட குறைவே, ஆக இருக்கிற காலத்தில் நல்லதை செய்வோம், நல்லதையே நினைப்போம், நாமும வாழ்வோம், பிறரையும் வாழ வழி செய்வோம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114853955497101200?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114853955497101200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114853955497101200' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114853955497101200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114853955497101200'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/05/blog-post_24.html' title='நான் யார்?  மதுமிதா மற்றும் அனைவருக்கும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114795692278964403</id><published>2006-05-18T05:43:00.000-07:00</published><updated>2006-05-18T06:02:12.796-07:00</updated><title type='text'>கிரிக்கெட் – பாஹில் கோப்பை புகைப்படங்கள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/102/399/1600/b-Fahaheel%20Jewellery%20Trophy1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/102/399/320/b-Fahaheel%20Jewellery%20Trophy1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புகைப்படங்கள் மார்ச் மாதம் குவைத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் எடுத்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;குவைத்தில் பாஹில் என்ற இடத்தில் இருக்கும் செம்மானூர் ஜீவல்லரி என்ற புகழ்பெற்ற நகைக்கடை ஸ்பான்ஸர் செய்ய, கேரளாவைச் சேர்ந்த நண்பர்கள் முதன் முறையாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன, இறுதிப் போட்டியில் எங்க அணி மற்ற அணியிடம் தோல்வி அடைந்தது, மிகச் சிறந்த 3 ஆட்டக்காரர்களால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் அரையிறுதியில் வென்று, இறுதி போட்டியில் கடைசி வரை போராடி பயனில்லாமல் போய் விட்டது. வலிமையான எதிரணியை மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தோம், ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே சிறந்த துவக்க ஆட்டக்காரர் சேவாக் மாதிரி வெளியே போன பந்தை ஒத்தடம் கொடுத்து அவுட் ஆனால், அடுத்தவரோ முதல்வரை விட்டு பிரியாதவர் மாதிரி ஓடி ரன் அவுட் ஆகி வந்து விட்டார், அடுத்த சென்றவர் 5 பந்துகள் தொடர்ந்து அடிக்க முடியாததால் வெறி வந்தவர் மாதிரி அடிக்க, பந்து சரியாக ஸ்டம்பை பதம் பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சென்றவர்கள் ரன் எடுப்பதை விட விக்கெட் எண்ணிக்கை கூடக்கூடாது என்ற கவனத்தில் ரன் விகிதத்தை உயர்த்தினார்கள். இறுதியில் சென்ற நானும் மட்டையை வேகம் கொண்டு வீச காற்று மட்டுமே அடிபட்டு, பந்து கீப்பர் கைக்கே சென்றது, இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ கடைசி நேரத்தில் போட்டியில் சேர்ந்து, கடைசி நேரத்தில் கிடைத்தவர்களை கொண்டு போய் விளையாடி பைனல் வரை வந்ததும், பெரிய அணிக்கு தண்ணீ காட்டியதும் எங்க எல்லோருக்கும் திருப்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போட்டி முடிந்து அன்று மாலையில் எங்க கம்பெனியின் போட்டியில் கால் இறுதி ஆட வேண்டும், கால் கால் எல்லாம் சரியான வலி, அப்படியோ போய் ஆடி காலிறுதியில் வென்று செமி போனோம், அதன் கதையை முந்தைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவர்கள் எல்லாம் முடிந்து போச்சு, ஆட்டமும் போச்சு, வெற்றி கோப்பையும் போச்சு, அதனாலேயே சிறந்த பந்து வீச்சு, அதிக விக்கெட், அதிக ரன்கள் எடுத்த எங்களவர்களுக்கு மற்ற பரிசு கோப்பைகள் கிடைக்காமல் போய்விட்டது, அதை நினைத்து கொஞ்சம் வருத்தம். எங்க விக்கெட் கீப்பர் பெங்களூரை சேர்ந்த ஜமீல் இறுதி போட்டியில் மட்டுமே 5 கேட்ச், ஒரு ரன் அவுட், ஒரு ஸ்டம்பிங்க் செய்து, மிகச் சிறந்த விக்கெட் கீப்பருக்கான பரிசை தட்டிச் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/102/399/1600/b-Fahaheel%20Jewellery%20Trophy.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/102/399/320/b-Fahaheel%20Jewellery%20Trophy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆண்டு மிகச் சிறந்த அணியை கொண்டு போய் வெற்றி கோப்பைகள் அள்ளி கொண்டு வர வேண்டும். &lt;a href="http://photos1.blogger.com/blogger/102/399/1600/b-Cricket%20-%20Fahaheel%202006%20-%20Team.3.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/102/399/320/b-Cricket%20-%20Fahaheel%202006%20-%20Team.3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;       எங்க அணியில் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக தங்கராஜ், ரஞ்சித், ஜமீல், ரிஸ்வான், அருண் ராஜகோபால்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து வலமாக கங்கா, டென்சன், மாலிக், வீரமணி, சுபேர், சந்தீப், நான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114795692278964403?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114795692278964403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114795692278964403' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114795692278964403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114795692278964403'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/05/blog-post.html' title='கிரிக்கெட் – பாஹில் கோப்பை புகைப்படங்கள்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114579359483617042</id><published>2006-04-23T04:46:00.000-07:00</published><updated>2006-04-23T04:59:55.040-07:00</updated><title type='text'>நிலா சகோதரிக்காக - 'குட்டி நிலவு 2006' போட்டி</title><content type='html'>அன்பு நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தைகளின் தனித்திறமையினை கண்டறிய அருமையான வாய்ப்பு. கட்டாயம் உங்கள் குழந்தைகளை கீழே இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.  கை கொடுத்து மேலே ஏற்றி விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நிலா சகோதரியின் பதிவு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;பூஞ்சிட்டுப் பிள்ளைகளே,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நலம்தானே?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;வரும் மே பதினெட்டாம் தேதி நிலாச்சாரல் தனது ஐந்தாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறதல்லவா? அதற்காக உங்களுக்கெல்லாம் ஒரு போட்டி நடத்தி பரிசுகள் தரலாம் என்றிருக்கிறோம். ஆவலாக இருக்கிறீர்கள்தானே? மேலே படியுங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;இந்தப் போட்டியில் நீங்கள் எப்படி பங்குகொள்ளலாம்?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;* படம் வரைந்து அனுப்பலாம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;* கதை எழுதி அனுப்பலாம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;* கவிதை எழுதலாம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;* பாட்டுப் பாடி அல்லது நடனமாடி பதிவு செய்து அனுப்பலாம் (அப்பா அம்மாகிட்டே கேளுங்க எப்படி செய்யறதுன்னு)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;எப்படி அனுப்புவது?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;* Chittu@nilacharal.com என்கிற மின்னஞ்சலுக்கு உங்கள் கோப்புகளை அனுப்ப வேண்டும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;* அனுப்பும்போது உங்களுடைய பிறந்த தேதியையும், பெயர் மற்றும் முகவரியைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;* 'குட்டி நிலவு 2006' என்று மின்னஞ்சலுக்குத் தலைப்பிட்டு அனுப்புங்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நீங்கள் என்ன செய்தாலும் உங்களுடைய ஆக்கங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி மே 7, 2006..&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;பரிசுகள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படும்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;முல்லைப் பிரிவு: மே 18,1999 க்குப் பின் பிறந்த குழந்தைகளின் படைப்புகள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;மல்லிகைப் பிரிவு: மே 19,1996 - மே 18, 1999 க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் படைப்புகள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;தாமரைப் பிரிவு: மே 19,1993 - மே 18 , 1996க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் படைப்புகள் மூன்று பிரிவிலும் ஒவ்வொரு பரிசுகள் வழங்கப்படும். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;பரிசுகள் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.nilashop.com/"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நிலாஷாப்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt; சார்பில் வழங்கப்படும். சில ஆறுதல் பரிசுகள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;விதிமுறைகள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;1. போட்டியில் பங்கேற்கும் படைப்புகள் வேறு எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்கக் கூடாது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;2. குழந்தைகளின் முயற்சியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;3. மேற்கண்ட இரு உறுதிமொழிகளையும் பெற்றோர்கள் தரவேண்டும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;4. படைப்புகளின் மீதான வாசகர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுமானாலும்நிலாக்குழுவின் முடிவே இறுதியானது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;5. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் மே 7, 2006. போட்டியின் முடிவு ஜுன் முதல் வார இதழில் வெளியாகும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;6. போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெறாத படைப்புகளைப் பிரசுரிக்க நிலாச்சாரலுக்குஉரிமை உண்டு. இப்படைப்புகளுக்கு வழக்கம் போல சன்மானம் வழங்கப்படமாட்டா.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;அன்புடன் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நிலாக் குழுவினர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://nilacharal.blogspot.com/"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;http://nilacharal.blogspot.com/&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நிலா சகோதரி, நானும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்க என்னால் முடிந்த பரிசுகள் கொடுக்க விரும்புகிறேன்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114579359483617042?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114579359483617042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114579359483617042' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114579359483617042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114579359483617042'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/04/2006.html' title='நிலா சகோதரிக்காக - &apos;குட்டி நிலவு 2006&apos; போட்டி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-114188996046222453</id><published>2006-03-08T23:33:00.000-08:00</published><updated>2006-06-03T00:26:22.336-07:00</updated><title type='text'>நினைவலைகள் – கிரிக்கெட்-2006</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நினைவலைகள் – கிரிக்கெட்-2006&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் குவைத் வந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகுது, எக்கசக்கமான போட்டிகள் விளையாடி இருக்கிறேன், பலமுறை வெற்றிகள், பலமுறை தோல்விகள், கோப்பைகள், பதக்கங்கள், பரிசுகள், பலமுறை பிரச்சனைகள் சந்தித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ம் ஆண்டு என் வாழ்வில் மறக்கமுடியாத கிரிக்கெட் ஆண்டாக இருக்கும், காரணம் இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எங்க கம்பெனி குவைத்திலேயே பெரிய கம்பெனி, குறைந்தது 15,000 பேர் வேலை செய்கிறார்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் அரபு, மற்றும் மேலைநாட்டவர்கள். கடந்த 5 ஆண்டுகளாக ரம்தான் மாதத்தில் கால்பந்து போட்டிகள் நடத்தி கோப்பைகள் வழங்குகிறார்கள், அதில் அரபு நாட்டவர்களே அதிகம் விளையாடி கோப்பையை தட்டிச் செல்வார்கள். நாங்களும் பலமுறை கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தச் சொல்லி கேட்டுப் பார்த்து வெறுத்து விட்டோம், காரணம் மேலிடத்தில் இருப்பவர்கள் அனைவரும் அரபுநாட்டைச் சேர்ந்தவர்கள், எங்க முதலாளியும் அரபுநாட்டவர், ஆனால் அவருக்கு கிரிக்கெட் மீது கொஞ்சம் விருப்பம் உண்டு, லண்டனில் படித்தவர் என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம், நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறோம், வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் காலையில் 8 மணி தொடங்கினால் 1 மணி வரை 15 ஓவர், 20 ஓவர் போட்டிகள் என்று இரண்டும், மாலையில் 3 மணிக்கு தொடங்கி ஒரு போட்டியும் நடக்கும். எங்க கம்பெனியின் ஆட்கள் தங்குமிடம் (Camp) அருகில் பல கம்பெனி ஆட்கள் தங்கியிருப்பதால் போட்டியிட எதிரணிக்கு பஞ்சமே இல்லை. சில நேரங்களில் 15 தினார் அல்லது 4 பெரிய பெப்சி குளிர்ப்பானம் போன்றவற்றை பந்தயமாக வைத்து விளையாடுவோம், அப்படி எதிரணியினர் வரவில்லை என்றால் எங்களுக்குள்ளே இரு அணியாக பிரித்து விளையாடுவோம். வெள்ளிக்கிழமை வந்தாலே வீட்டில் மனைவி முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார், காலையில் போனால் மாலையில் தான் வருகிறீங்க, சக்தியை யார் பார்த்துக் கொள்வார்கள், அவளையும் அழைத்துச் செல்லுங்க என்று ஒரே பாட்டு தான். வழக்கம் போல் ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் அலுவலக்த்தில் இருக்கும் போது எனது தலைமை அலுவலக நண்பர் கோபால் போன் செய்து “சுரேஷ்! நான் ஒரு கிரிக்கெட் அணி தயார் செய்கிறேன், நம்ம கம்பெனி பெயரில் விளையாட இருக்கிறது, உங்களுக்கு தெரிந்த சிறந்த ஆட்டக்காரர்கள் பெயர் சொல்லுங்க” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சந்தோசம் தாங்க முடியவில்லை, கோபால் எப்படியோ கம்பெனி பெயரில் விளையாட அனுமதி வாங்கிட்டார், இனிமேல் பல போட்டிகளில் கம்பெனி விளையாட உதவும் என்று நினைத்து, என் பெயர், டிக்சன், ரவி, நயீம், லசாந்தா (இலங்கை வீரர்), போன்ற சிறந்த வீரர்கள் பெயரை கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்தில் மீண்டும் கோபால் பேசும் போது நம்ம கம்பெனி கால்பந்து போன்று கிரிக்கெட் போட்டிகள் நடத்த இருக்கிறது, அதற்கு ஒவ்வொரு டிபார்ட்மெண்ட், மற்றும் புராஜெக்ட்கள் தனித்தனியாக அணி தயார் செய்யவேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி பார்த்தால் நான் கோபால் அணியில் விளையாட முடியாது, எங்க புராஜெக்ட் தனி, எனவே நான், டிக்சன், ரவி, அருண், பாரதி, ஜமீல், அஸ்லாம், ஷாவூத், ரஞ்சித், சுவாமிநாதன், மாலிக், டென்சன், லோகநாதன், கங்கா, கிரிஷ் லாட் போன்ற சிறந்த வீரர்களை கொண்ட அணி தயார் செய்தேன், எங்க புராஜெக்ட் மேனேஜர் நபில் நாடிக்கு கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாது, இருந்தாலும் எங்க அணி மேஜேனராக போட்டேன், காரணம் கிரிக்கெட் தெரியாததால் போட்டியின் போது அமைதியாக இருப்பார், இல்லை என்றால் எங்களை குற்றம் குறை சொன்னால் அது ஆட்டத்தை பாதிக்கும். அணியின் கேப்டனாக எனது நண்பர் டிக்சனை தேர்வு செய்தோம், துணை கேப்டனாக என் பெயரை போட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்சன் பெங்களூரை சேர்ந்தவர், அருமையான ஆட்டக்காரர், பேட்டிங், பவுலிங், கீப்பீங்க் என்று அனைத்து துறையிலும் சிறந்தவர், மேலும் ரொம்பவும் பொறுமைச்சாலி, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், அரபி என்று பல்மொழி வல்லுநர், அணியை திறமையாக நடத்துபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அணியில் வேகப்பந்து வீச நான், அஸ்லாம், அருண், ரஞ்சித், கங்காவும், ஸ்பின் போட லாடும், பேட்டிங் என்று டிக்சன், ரவி, பாரதி, சுவாமி, மாலிக், ஜமில் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அணியை ரிஜிஸ்டர் செய்ய கடைசி நாளும் குறித்து கொடுத்தார்கள், நான் ஆரம்பம் முதல் கண்டிப்பாக கோப்பையை கொண்டு வருவேன் என்று எங்க மேனேஜரிடம் சொல்லி வந்தேன், அவருக்கோ நம்பிக்கை இல்லை, மேலும் அவருக்கு பல வேலைகள், கடைசியில் அவர் எங்க அணியை ரிஜிஸ்டர் செய்ய மறந்துட்டார். தலைமை அலுவலகத்தில் எனது அணியைப் பற்றி எல்லோருக்கும் தெரியும், மிகச் சிறந்த அணியில் எங்கள் பெயர் இரண்டாவதாக இருந்தது, கடைசியில் எங்க அணி ரிஜிஸ்டர் செய்யபடவில்லை, எங்க புராஜெக்ட் மாதிரியே வேற ஒரு புராஜெக்ட் பெயர் உண்டு, அவர்கள் ரிஜிஸ்டர் செய்ய, போட்டியை நடத்தும் பாலா, பிரான்ஸில், இம்ரான் ஆகியோர் மற்ற அணியை என் அணி என்று நினைத்து, மொத்தம் 32 அணிகளை தேர்வு செய்து (9 அணிகளை தவிர்த்து), யார் யாருடன் மோதுவார்கள் என்பதையும் பட்டியலிட்டு அனைத்து அணிக்கும் இமெயில் செய்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்போழுதும் இல்லாமல் அன்று தலைமை அலுவலகம் சென்றேன், சிறிது நேரத்தில் டிக்சன் போன் செய்து, “சுரேஷ் நீங்க என்ன செய்றீங்க, நம்ம அணி லிஸ்டிலேயே இல்லை, இங்கே எல்லோரும் மண்டை காய்ந்து போயிருக்காங்க” என்று சொல்லி போனை கடுப்பாக துண்டித்து செய்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உடனே தலை தெறிக்க பாலாவின் அலுவலகத்திற்கு சென்றேன், அவர் பிரான்ஸில் அலுவலகத்தில் இருந்தார், இருவரிடமும் என் அணியை இன்னமும் சேர்க்கவில்லையா என்று கேட்டேன், அவர்களோ! மிகவும் ஆச்சரியப்பட்டு, மற்ற அணியை காட்டி இது தானே உன் அணி என்றார்கள். அய்யோ சாமிகளா! அது என் அணி இல்லை, வேற அணி, ஏன் என் அணியை சேர்க்கவில்லை என்றால், அவர்களோ அப்போ உன் அணியின் விபரம் எங்களுக்கு வந்திருக்காது என்றார்கள். உடனே என் மேனேஜர் நபிலை தொடர்பு கொண்டு கேட்டால் அவரோ அப்படியா, தெரியலையே என்று சொல்லி பிரான்ஸிடம் பேசினார், பேசினார் பேசினார், மொபைல் பேட்டரி சார்ஜ் குறையும் வரை பேசினார். எங்க மேனேஜர் நபிலுக்கு ரொம்ப நல்ல பெயருண்டு, இளம்வயதுகாரர், அனைவரிடமும் நன்றாக பழகுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக பிரான்ஸிலை சரிகட்ட, பிரான்ஸில் இருக்கும் 32 அணியில் ஒரு அணிக்கு ஆப்பு வைத்து தான் உன் அணியை உள்ளே நுழைக்கமுடியும் என்று சொல்லி, ஒரு அணியை தூக்கிவிட்டு எங்க அணிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் யார் யாருடன் மோதுவார்கள் என்ற பட்டியல் தயார் செய்ய, எங்க அதிஷ்டம் முதல் போட்டியே எங்க போட்டியாக அமைந்தது, அது மிகவும் நல்லவாய்ப்பு, ஏனென்றால் போட்டி ஆரம்பிக்க பெரிய பெரிய ஆட்கள் வருவார்கள், அவர்கள் எங்க போட்டியை காண வாய்ப்பு உண்டு, நாமும் ஏதாவது சாதித்து நல்ல பெயர் எடுக்க வாய்ப்புண்டு என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 32 அணியில் மிகச் சிறந்த அணியாக இருந்தவற்றில் எங்க அணி, வாகனப்பிரிவு (Equipment Division) அணி (8பேர் இலங்கை ஆட்டக்காரர்கள்), மனிதவள மேம்பாட்டு பிரிவு (HRD), தலைமை அலுவலகம், எங்களுடன் அடிக்கடி விளையாடும் இரு அணிகளும் இருந்தன. மேலும் எங்களுக்கு தெரியாத நிலையில் பல நல்ல அணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிகள் குவைத் ஆயில் கம்பெனியின் கிரிக்கெட் மைதானத்தின் அருகில் இருந்த ஹாக்கி மைதானத்தில் இரவில் தொடங்கியது, முதல் நாள் மொத்தம் 32 அணியினரும், மற்றும் அனைத்து மேனேஜர்கள், பார்வையாளர்கள் என மொத்த மைதானமே நிரம்பி வழிந்தது, முதன்முறையாக நான் கிரிக்கெட் ஆடுவதை பார்க்க என் மனைவியும் என் மகள் சக்தியும் வந்திருந்தார்கள். சரியான குளிர் வேற.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் போட்டி எங்களுக்கும் அஹமதி மருத்துவமனை பிரிவுக்கும் (Ahmadi KOC Hostpial Maintenance Project) இடையே நடந்தது, அனைவரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று சொல்லிவிட்டார்கள், இருந்தாலும் 12 ஓவர்கள் மட்டுமே கொண்ட போட்டி, மேலும் மைதானம் சிறியது, இரவில் நடக்குது, வெள்ளை நிறப்பந்து, ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் நன்றாக ஆடினாலும் ஆட்டம் கைவிட்டு போயிடும் என்ற பயம் உண்டு. நாங்களும் எதிரணியை மட்டமாக நினைக்கவில்லை. போட்டியில் டாஸ் வென்று எதிரணி பேட்டிங்க் செய்தது, முதல் ஓவர் முதல் பந்தை அஸ்லாம் போட்டார், அது கேட்சாக அமைந்து எங்களுக்கு விக்கெட் கிடைத்தது, அனைவரும் மகிழ்ச்சியில் முங்கி விட்டோம். அடுத்த ஓவரில் எனக்கு ஒரு விக்கெட், இப்படியாக மாறி மாறி 11 ஓவரில் எதிரணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 62 ரன்கள் எடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அணியில் டிக்சன் நன்றாக விளையாடி 5 ஓவரில் 63 ரன்கள் அடித்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு போனோம். இது மாதிரி மற்ற அணிகளும் விளையாடி 32 அணியில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் மழை பெய்து போட்டிகளை தாமப்படுத்தியது, அதனால் எங்க கேப்டன் டிக்சன் தன்னுடைய விடுமுறை தள்ளிபோட முடியாமல் இந்தியா செல்ல வேண்டியதாகி விட்டது, அது மாதிரி பாரதிக்கு ஆண் குழந்தை பிறக்க அவரும் இந்தியா சென்று விட்டார், கேப்டன் மற்றும் சிறந்த மட்டையாளரை இழந்த நிலையில் எங்க அணி. இப்போ நான் தான் அணியை நடத்திச் செல்ல வேண்டும், போட்டியின் ஆரம்பித்திலேயே நான் டிக்சனிடம், “டிக்சன், நீங்க அடிபட்டு போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுங்க, நான் கேப்டனாகி விடுகிறேன், பெரிய அங்கிகாரம் எனக்கு கிடைக்கும்” என்று கிண்டலாக சொன்னது உண்மையிலேயே நடந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சுற்று போட்டிக்கு எங்க எதிரணி சுபையா பவர் ஸ்டேஷன் புராஜெக்ட் (Subiya Power Station Maintenance Project) என்ற அணி, அந்த அணிக்கு எங்க அணியில் டிக்சன் இல்லை, பாரதி இல்லை என்ற செய்தியை பரப்பி, அவர்களுக்கு உற்சாகம் கொடுத்தார்கள். நானோ எனது அணியினரோ அதை பெரிதாக நினைக்கவில்லை, எங்களால் சாதிக்க முடியும் என்று நம்பினோம், முதல் போட்டியில் விளையாடாத ரஞ்சித், கங்கா ஆகியோர் வாய்ப்பு பெற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க எதிரணி ஏற்கனவே முதல் போட்டியில் 12 ஓவரில் 148 ரன்கள் குவித்த அணி, இருந்தாலும் எங்க அணியில் அஸ்லாம் மற்றும் என் பந்தை அடிப்பது அத்தனை எளிதில்லை, மூன்றாவது மற்றும் நான்காவது பந்து வீச்சாளராக அருண், கங்கா, ரஞ்சித் வருவார்கள், அவர்கள் நன்றாக வீசினால் நாங்க எளிதாக வெல்ல முடியும் என்று நம்பினோம். நான் டாஸ் தோற்றுவிட்டேன், இருந்தாலும் எங்க அணியிடம் நான் தான் டாஸ் வென்றேன், பந்து வீச்சுக்கு பதில் பேட்டிங்க் தேர்வு செய்தேன் என்று பொய் சொல்லி உள்ளே அழைத்து சென்றேன், இல்லை என்றால் ஒரிரு ஆட்டக்காரர்கள் டாஸ் தோத்துட்டோமா என்று புலம்பக்கூடும். நானும், டிக்சனும் எப்போவும் டாஸ் வென்றாலும், தோற்றாலும் அதை வெளியே சொல்லாமல், நாங்க வென்றது போலவே நடந்துக் கொள்வோம். போட்டி முடிந்த பின்னர் தான் அதை அறிவிப்போம். இது ஒருவகையில் பலனளிக்கும் விசயம். எங்களைப் பொறுத்தவரை நாங்க பேட்டிங்க் செய்தால் 10 ரன் ஒரு ஓவருக்கு, எதிரணி பேட்டிங்க் செய்தால் 5 ரன் ஒரு ஓவருக்கு என்று கணக்கு வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நாங்க பேட்டிங்க் செய்ய ரன்களுடன் விக்கெட்களும் விழுந்து கொண்டே இருந்தது, நானும் அனைத்து ஆட்டக்காரர்களும் வாய்ப்பு பெறச் செய்ய பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி அனுப்பினேன், காரணம் இனி வரும் போட்டியில் கடைசி ஆட்டக்காரர் வரை விளையாட வேண்டிய சூழ்நிலை வரும், போது இவர்கள் நன்றாக ஆட இது ஒரு பயிற்சியாக இருக்கும். அப்படி சென்றவர்கள் ஒரு சிக்ஸரோ, ஒரு பவுண்டரியோ அடித்து விட்டு ஆட்டமிழக்க, நான் சென்ற வேகத்தில் வர, கடையில் 10 ஓவரில் 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தோம், அந்நிலையில் அருண் சென்று கடைசி இரு ஓவரில் 40 ரன்களுக்கு மேல் விளாச நாங்க 12 ஓவரில் 146 ரன்கள் எடுத்தோம். எதிரணியினரை நான், அஸ்லாம், அருண், கங்கா, ரஞ்சித் எல்லோரும் சேர்ந்து புரட்டி எடுக்க 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலிறுதியில் நாங்க இருமுறை வென்ற அணியான சுலைபியா வேஸ்ட் வாட்டர் டிரீட்மெண்ட் புராஜெக்ட் (Sulaibiya Waste Water Treatment Project) அணியுடன் மோதினோம், அதிலும் டாஸ் வென்று முதலில் பேட் செய்து 138 ரன்கள் எடுத்தோம், எதிரணியை 73 ரன்களுக்குள் அவுட் செய்தோம். ஒருவழியாக அரையிறுதிக்கு சென்றாச்சு, காலிறுதியில் மிகபெரிய அணிகளான வாகனப்பிரிவு (Equipment Division) அணி (8பேர் இலங்கை ஆட்டக்காரர்கள்), மனிதவள மேம்பாட்டு பிரிவு (HRD), தலைமை அலுவலகம், தோற்று வெளியேறி விட்டன. கடைசி நான்கு அணிகளில் எங்க அணி, பெட்ரோபேக் (KOC Petrofac Maintenance Project) என்ற அணி, பம்பிங் ஸ்டேசன் அணி (Operation and Maintenance of Pumping and lifting Stations Project), அப்புறம் எங்களுடன் அடிக்கடி விளையாடும் நண்பர் அணி (KOC Effluent Water Disposal Plants Project).&lt;br /&gt;&lt;br /&gt;செமி பைனலில் நாங்க பம்பிங் ஸ்டேசன் அணியுடன் மோதினோம், காலையில் இருந்தே பயங்கர டென்சன், செமி வரை வந்தாச்சு, இப்போட்டியில் வென்றால் கண்டிப்பாக கோப்பை உண்டு, இறுதிபோட்டியில் விளையாடுவது என்பது மிகவும் சந்தோசமான ஒன்று. டிக்சன், பாரதி இல்லை, எனக்கு கால்மூட்டு சரியான வலி, ஜமிலுக்கு கழுத்து சுளுக்கு பிடித்துக் கொண்டது, அஸ்லாமுக்கு காலில் அடி, அதிரடி வீரர் ரவியின் மனைவிக்கு விசா முடிந்து இரண்டு நாளில் இந்தியா போகிறார் என்ற கவலை, கிரிஷ் லாட் ஊருக்கு போகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார். இப்படி பல பிரச்சனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் மைதானத்தில் அனைவரும் கூடி, வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று சபதம் எடுத்து உள்ளே சென்றோம், டாஸ் வென்ற எதிரணி முதலில் பேட் செய்தது, நானும் டாஸ் தோற்றதாக காட்டிக் கொள்ளாமல் பந்து வீசினோம், முதல் 10 ஓவரில் எதிரணி 65 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள், அடுத்த வீசிய கங்கா, அருண், ரஞ்சித் ஓவர்களில் சரியாக அடித்து 120 ரன்களாக உயர்த்திக் கொண்டார்கள். 120 ரன்கள் என்பது 15 ஓவரில் பெரிய ரன்களே கிடையாது, ஆனாலும் எதிரணியில் நல்ல பந்து வீச்சாளர் இருந்தார்கள் என்பதால் கூடுதல் டென்சன். ஒருவழியாக கடைசி ஓவர் கடைசி பந்தில் அஸ்லாம் பவுண்டரி அடிக்க நாங்க வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றோம். தோற்ற அணியின் கேப்டன் ஜெயக்குமாருக்கு ஓடி போய் ஆறுதல் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு அரையிறுதியில் எனது நண்பர்கள் அணி (எப்யூலண்ட் வாட்டர் இன்ஜக்சன் புராஜெக்ட்) மற்றொரு அணியான பெட்ரோபேக் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த எனது நண்பர்கள் அணி 15 ஓவரில் 146 ரன்கள் குவித்தார்கள், பாவம் எதிரணி 90 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 32 அணிகள் மோதிய போட்டித் தொடரில் எங்க இருவரது அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும் சம அளவில் திறமை பெற்றது, இருந்தாலும் எதிரணிக்கு 4 நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள், எங்க அணியில் நானும் அஸ்லாம் மட்டுமே, முதன் முறையாக டிக்சன் இல்லை என்பதை நான் மனதளவில் உணர்ந்தேன், இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் போட்டிக்கு தயார் ஆனோம், அதே நேரத்தில் எங்க அணியில் நல்ல மட்டையாளரான கிரிஷ் லாட் கட்டாயம் ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை, இப்போ மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் இறுதிப் போட்டிக்கு விளையாட வேண்டிய சூழ்நிலை, எனக்கும் அஸ்லாமுக்கும் காலில் வலி வேற.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் வீரர்களிடம் நம்மால் கண்டிப்பாக வெல்ல முடியும், நம்பிக்கை வைத்திருங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். முதலில் டாஸ் வென்ற நான் பேட்டிங்க் தேர்வு செய்தேன், 120 ரன்கள் எடுத்தாலே போதும், நாம் வென்று விடலாம் என்று சொல்லியிருந்தேன், ஆனால் எதிரணியின் அற்புதமான பந்து வீச்சால் 6 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நானும் அருணும் எவ்வளவு முயற்சித்தும் அதிக ரன்கள் எடுக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரணி பேட்டிங்க் செய்யும் போது என்னுடைய பந்தையும், அஸ்லாம் பந்தையும் அடிக்க வேண்டாம் என்றும், அடுத்து வரும் அருண், கங்கா, ரஞ்சித் பந்தை அடிக்கலாம் என்று முடிவு செய்து ஆடினார்கள். அது மாதிரியே நாங்க இருவரும் போது 5 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அடுத்த வந்தவர்களை அடித்து ஆடி ரன்கள் சேமிக்கத் தொடங்கினார்கள், அப்போ அப்போ விக்கெட்களும் கிடைத்தது, கடைசி 6 ஓவரில் 36 ரன்கள் தேவை, அந்நிலையில் ரஞ்சித் கிடைத்த அருமையான கேட்சை விட்டு விட்டார், அடுத்து கங்கா தொடர்ந்து 3 வைட் பந்து வீச (1 வைட் = 2 ரன்), போட்டி எங்க கையை விட்டு போனது, ஆனாலும் நானும் அஸ்லாமும் விடாமல் போராடி வீச, கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது, ரஞ்சித் பந்து வீச வந்தார், முதல் பந்தில் 4 ரன்கள் எடுத்து விட்டார்கள், அடுத்த இரு பந்தில் 1 ரன், ஒரு விக்கெட், இப்போ 3 பந்தில் 2 ரன்கள், அடுத்த பந்தில் ஒரு ரன்னும், கடைசி 2 பந்தில் ஒரு ரன், அப்போ ரஞ்சித் அருமையாக போல்ட் செய்தார் இப்போ கடைசி பந்து ஒரு ரன் தேவை. ஒரு ரன் எடுத்தால் எதிரணி வெற்றி, விக்கெட் விழுந்தால் நாங்க வெற்றி, ரன் எடுக்கவில்லை என்றால் கோப்பை இரு அணிக்கும் கிடைக்கும், இந்நிலையில் எதிரணி ஆட்டக்காரர் பந்தை அடிக்க அது எங்களது மிகச் சிறந்த பீல்டரான ஜமீலில் விரலில் பட்டு எகிற அதற்குள் ஒரு ரன் ஓடி வென்று விட்டார்கள். திறமை, நம்பிக்கை இருந்தும் அதிஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதானத்தில் ஒரே குழப்பம், கொண்டாட்டம், நாங்க அனைவரும் ஒன்று கூடினோம், நான் அனைவரையும் பார்த்து “நாம் இறுதி போட்டியில் எளிதாக தோற்கவில்லை, போராடி தான் தோற்றோம், போராடி தோற்றதில் கூட சந்தோசம் தான் கிடைக்கும், 32 அணியில் நாம் இரண்டாம் இடம் பெற்றது மிகப் பெரிய சாதனை, அதிலும் டிக்சன், பாரதி, லாட் இல்லாமல் நாம் விளையாடி இரண்டாவது வெற்றிக் கோப்பை எடுத்திருக்கிறோம், இதற்கு முக்கிய காரணம் அருண், கங்கா, ரஞ்சித் ஆகியோர் தான், ஆக யாரால் தோற்றோம் என்று இனிமேல் பேசவேண்டாம். மகிழ்ச்சியாக இருப்போம், அடுத்த ஆண்டு நாம் தாம் வெற்றி பெறுவோம்” என்று கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதானத்தில் வந்த அனைவரும் வென்றவர்களை விட்டு விட்டு எங்களையே அதிகம் பாராட்டினார்கள். எதிரணியின் திறமைக்கு நாங்க சரியான சவால் கொடுத்தோம், எளிதாக வெல்வார்கள் என்று நினைத்த அணியை கலங்க வைத்துவிட்டீர்கள், என்று எங்க மேனேஜர் மற்றும் அனைவரும் பாராட்டினார்கள். அதன் பின்னரே எங்க அணியில் அனைவரும் சந்தோசமடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக இரண்டாவது வெற்றிக் கோப்பையையும், பதக்கத்தையும், பல போட்டிகளில் நடுவராகவும் நான் பணி புரிந்தமைக்கு ஒரு பரிசும் கிடைத்தது, ஆக எங்க கம்பெனியில் முதன் முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியானது அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது, அதிலும் இறுதிப்போட்டி பல ஆண்டுகளுக்கு அனைவரின் மனதிலும் நினைவில் இருக்கும், எனக்கோ சாகும் வரை மறக்கமுடியாத சாதனைப் போட்டி. இப்போட்டியில் மறக்கமுடியாத சம்பவங்கள் பல, எங்க அணிக்காக விளையாட இருந்து பின்னர் வேறு வழியில்லாமல் HRD அணிக்கு விளையாட எனது இலங்கை நண்பர் லாசந்தா எடுத்த 108 ரன்கள் (48 பந்தில்), காலிறுதியில் அருண் அடித்த கடைசி இரு ஓவர்கள், எனது நண்பர்கள் அணி, தோற்க வேண்டிய காலிறுதி போட்டியில் எதிரணியின் முட்டாள்தனமான முடிவில் வென்றது, என் மனைவி முதன்முறையாக என் ஆட்டத்தை கண்டு, உங்களால் இத்தனை வேகமாக ஓட முடியுமா என்று ஆச்சரியமாக கேட்டது (24மணி நேரமும் கணினி முன்னால் உட்கார்ந்து இருப்பதால் சோம்பேறி என்று நினைத்து விட்டாராம்), எங்களுக்கு கோப்பை வழங்கிய எங்க கம்பெனியின் முதலாளிக்கு நாங்க வேறு போட்டியில் வென்ற கோப்பையை பரிசாக கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா செல்லும் போது கோப்பையை எடுத்துச் சென்று என் அன்னையிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பது என் எண்ணம். என் அன்னையும் அதனை அனைவருக்கும் காட்டி பெரு மகிழ்ச்சி அடைவார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-114188996046222453?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/114188996046222453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=114188996046222453' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114188996046222453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/114188996046222453'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/03/2006.html' title='நினைவலைகள் – கிரிக்கெட்-2006'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-113973112758096616</id><published>2006-02-11T23:56:00.000-08:00</published><updated>2006-02-27T03:35:40.623-08:00</updated><title type='text'>நினைவலைகள் - அலிபாபாவும் நா(ன்)லு திருடர்களும்</title><content type='html'>முந்தைய பகுதியான களவும் கற்றும் மற - தொடர்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பு சொன்னது போல் என் தம்பி ரொம்பவும் அன்பானவன், இரக்கம் குணத்திற்கு கர்ணனை எடுத்துக்காட்டாக சொல்லலாம். கையில் இருப்பதை யார் கேட்டாலும் கொடுத்து விடுவான். தம்பி வள்ளல் கர்ணனாக இருந்ததால் நான் எப்படி? திருட்டு கண்ணனாக இருந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், அவனிடம் நான் தினமும் திருவிளையாடல் நடத்துவேன். அவனுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதால் அம்மா மாலை நேரத்தில் இனிப்பு போன்ற திண்பண்டங்களை அவனுக்கு கொடுக்காமல் எனக்கு மட்டுமெ கொடுப்பார்கள், அவன் பங்கை தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். நான் என் பங்கை ஈ, காக்கைக்கு கூட தெரியாமல் தின்று விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் என் தம்பி தன் பங்கை அம்மாவிடம் வாங்கி சாப்பிட, நானோ ஒன்றுமே தெரியாத அம்மாஞ்சி மாதிரி நிற்பேன், தம்பி என்னைப் பார்த்து   “அண்ணா, அம்மா உனக்கு தரவில்லையா?” என்று கேட்பான், நானோ “இல்லையே” என்பேன், உடனே அவன் தன் பங்கை பாதியாக்கி எனக்கு கொடுப்பான், நான் அம்மா எங்கே பார்க்கிறார்களா என்று பார்த்து, தின்று  இடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன், சில நேரம் அம்மா பார்த்தால் எனக்கு அர்ச்சனை (சாப்பாட்டு ராமா என்ற பட்டம்) கிடைக்கும். சில சமயம் தம்பி முன்னாலேயே எனக்கு கொடுத்து, அவன் எடுத்து வைத்திருந்தால் திருட்டு பூனையாகி விடுவேன், அடுத்த நாள் தம்பி பார்த்து, சரி நம்ம அண்ணன் தானே என்று விட்டு விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் பனங்கிழங்கு அவித்தால் உடனே, பெரிய பெரிய கிழங்குகளை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன். வீட்டில் முருக்கு சுட்டால், காலையில் இரண்டு, மாலையில் இரண்டு என்று அம்மா கணக்கு போட, நானோ அம்மா இல்லாத நேரம் எல்லாமே முருக்கு தான் என்று தனிக்கணக்கு போட்டு வைத்திருப்பேன், என்னால் கடுப்படிக்கப்பட்டிருந்தால் அன்று தம்பி என்னை அம்மாவிடம் போட்டு கொடுத்து விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு விசயத்தில் மட்டும் நான் செய்யும் தவறுகள், திருட்டு என்ற கணக்கில் வராது என்று எனக்கு நானே ஒரு நியதி வைத்திருந்தேன். எங்க வீட்டு தோட்டத்தில் சிவப்பு கொய்யா மரங்கள் 5 இருந்தது, ஒவ்வொரு மரமும் வித்தியாசமான சுவை, அளவு, கொய்யா பழங்களை கொடுக்கும். எங்க இருபக்க வீடுகளும் எங்கள் முன்னோர் முதற்க் கொண்டு பகையாளிகள். யாரும் யாருடனும் பேச மாட்டோம். ஆனால் என் தம்பி மட்டுமே இருவீட்டிற்கும் சென்று விருந்து சாப்பிட்டு வருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டில் வெள்ளை கொய்யா மரம் இருந்தது, அதன் கிளைகள் எங்க வீட்டில் தொங்கும், அப்போ அடுத்த வீட்டில் யாருமே இல்லாத நேரம் எங்க வீட்டிலிருந்து அந்த பழங்களை திருட்டுத்தனமாக பறித்து சாப்பிடுவேன், சில சமயம் எத்தனை பழம் பறித்தெனோ அத்தனை சிவப்பு பழங்களை அங்கே தூக்கி போட்டு விடுவேன், திருட்டு கணக்கு சரியாகுது இல்லையா.&lt;br /&gt;&lt;br /&gt;அது மாதிரி இந்த பக்க பாட்டி வீட்டில் நாவல் பழம் மரம் இருந்தது, தினமும் காலையில் விழித்ததும் ஓடி போய் தோட்டம் சென்று பார்ப்போம், அங்கே நாவல் பழங்கள், வாதுமை கொட்டை, கொய்யா எல்லாம் கிடக்கும், அவை எல்லாம் இரவில் வவ்வால் கொண்டு வந்து போட்டவை. அவை தனிச் சுவையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் பார்த்து கெட்டு போயிருந்தேன், ஆமாம், இருப்பவர்களிடம் இருந்து எடுத்து, இல்லாதவர்களுக்கு கொடுப்பது தவறு கிடையாது, அது திருட்டு கிடையாது என்ற எண்ணம் மனதில் பதிந்து விட்டது. அதனாலேயே தெருவில் யார் யார் வீட்டில் நாவல், நெல்லிக்காய், கொய்யா, நாக்கு ஒட்டி பழம், இனிப்பு புளியம்பழம்,  சீத்தாப்பழம், போன்ற அதிகமாக இருக்கிறதோ அங்கே எல்லாம் மதியம் 3, 4 மணி அளவில், எல்லோரும் உண்ட மயக்கத்தில் உறங்க, நாங்களோ எங்க வேட்டையை ஆரம்பிப்போம். நிறைய முறை மாட்டி திட்டு, உதை வாங்கியிருக்கிறேன், போன்ஸாக எங்க அம்மாவிடமிருந்து கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சின்ன சின்ன திருட்டுகளோடு வாழ்க்கை சென்றது. கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதும், எங்களுக்கு ஒரு பாஸ்/குரு கிடைத்தார், பெயர் : அலிபாபா, உண்மையான பெயர் சொல்ல வேண்டாம். என்னை விட 8 வயது கூடியவர், அவர் நல்ல விசயத்தை விட கெட்ட விசயங்களைத் தான் அதிகம் எங்களிடம் பேசுவார், ஏனென்றால் கெட்டதை எல்லாம் கேட்டு உலகம் அறிந்து கெட்டு போகாமல் இருக்க, ஆனால் ஒரு சிலர் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் ஆனதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் குருவாக வேண்டும் என்றால் பலவித்தைகளுக்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும், எங்க குரு, நன்றாக கிரிக்கெட் ஆடுவார், வாலிபால், கபாடி, அழகாக இருப்பார், திறமைச்சாலி, எல்லாத்தையும் விட பனைமரம் கூட ஏறுவார். பனை மரம் ஏறுவது சாதாரண விசயமில்லை மிகவும் கடினம். ஒரு படத்தில் மணிவண்ணன் பஸ்ஸில் போறவரை மாமா, மச்சான் சொல்லி கிண்டல் செய்வாரே, அதை என் குரு அடிக்கடி பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டு செய்வார், நாங்களும் சிரிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க எல்லோரும் கிரிக்கெட் ஆடி முடித்து இருட்டியதும் விட்டிற்கு திரும்புவோம், ஆனால் எங்க குரு மற்றும் சில மூத்த வீரர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள், கேட்டால் நீங்க போங்க, பின்னாடி வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிடுவாங்க. அடுத்த நாள் முந்தைய நாள் வீரபிரதாபங்களை சொல்லச் சொல்ல எனக்கும் அதில் பங்கேற்ற ஆசையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரில் இருக்கும் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை இருக்கும், ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு வீட்டார் பொறுப்பேற்க வேண்டும், பச்சரிசி, தேங்காய், பழம் மற்றும் அனைத்தும் வாங்கிக் கொடுத்தால் போதும், பூசாரி பெரிய பாத்திரத்தில் பாயாசம் தயார் செய்து, பூஜைக்கான ஏற்பாடு செய்து, மணி அடித்து அழைப்பு கொடுப்பார், உடனே அனைவரும் கிளம்பி கோயிலுக்கு வருவோம், அங்கே இருக்கும் மைதானத்தில் பெரிய கூட்டமே விளையாடிக் கொண்டிருக்கும். பலவகை விளையாட்டு இருக்கும். நான், தம்பி என் அம்மாவுடனே இருக்க வேண்டும். பூஜை தொடங்கினால் குறைந்தது 1 மணி முதல் 1:30 மணி நேரம் நடக்கும். பின்னர் அனைவரும் கோயில் வரண்டாவில் அமர்ந்தால் பாயாசம், பழம், தேங்காய் துண்டு என்று அனைவருக்கும் கொடுப்பார்கள். பாயாசம் சாப்பிட்டால் இரவு சாப்பிடத்தேவை இல்லை, அவ்வளவு அளவு கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே நிறைய பேர் கடைசி பூஜை மணி அடிக்கும் போது (சிறுவர்கள் பாயாசம் கிடைக்க போகுது என்ற ஆர்வத்தில் கோயில் மணியை வேகமாக அடிப்பாங்க) நிறைய பேர் வந்து விடுவாங்க. நான் பலமுறை பார்த்திருக்கிறேன், பூஜை தொடங்கியதும் எங்க குரு மற்றும் சிலர் காணாமல் போய் விடுவாங்க, அப்புறம் கடைசி மணி அடிக்கும் போது வந்து சேர்ந்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் நான் குருவிடம், “அண்ணா, நானும் உங்க கூட வருகிறேனே”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்க அம்மா, உன்னைத் தேடினா”&lt;br /&gt;&lt;br /&gt;“அது ஒன்னும் பிரச்சனை இல்லை, கடைசி மணி அடிக்கும் போது தான் நீங்க வந்து விடுவீங்களே!”&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க கோயிலுக்கு பின்பக்கம் இருக்கும் பனை மரக்காட்டில் இறங்கி நடக்க நடக்க, நேரா எங்க சின்னப்பாட்டி தோட்டத்திற்கு அருகே போய் நின்றோம், எனக்கோ ஒரே ஆர்வம், என்ன செய்யப்போறாங்க, அதே நேரம் சீக்கிரமா அம்மா தேடுவதற்குள் கோயிலுக்கு போகணுமே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க குரு, ஒரு பெரிய கம்பை எடுத்து பாட்டி வீட்டு வேலியை விலக்கி, பாதை உண்டாக்கினார், பின்னர் உள்ளே சென்றதும், பெரிய பெரிய தென்னை மட்டைகளை வேலியின் மேல் போட்டு, நடக்க வழி செய்தார். எனக்கு ஒன்னுமே புரியலை. அருகில் இருந்த ஒரு அண்ணனிடம் “ஏன் இங்கே வந்திருக்கிறோம், இங்கே என்ன இருக்குது”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏலே, சும்ம இரு, இங்கே எளநீ குடிக்க வந்திருக்கிறோம், கொஞ்ச நேரத்தில் பாஸ் மரம் ஏறி பறித்து போடுவார்:&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சப்பென்று ஆகிவிட்டது, “எளநீ குடிக்கவா இங்கே வந்தீங்க, அதான் எங்க வீட்டிலேயே நிறைய இருக்குதே”.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்க வீட்டில் மட்டும் இல்லையா என்ன, இப்படி குடித்தால் அதில் ஒரு திரில் கிடைக்கும்”.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் எங்க பாஸ் சர் சர் என்று நன்கு வளர்ந்த மரத்தில் ஏறினார், குறைந்தது 20 எளநீ வெட்டிப் போட்டார். இருக்கிறது 5 பேர் இத்தனை எளநீயா என்று யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்த எளநீயை எல்லாம் கிணறு அருகே கொண்டு சென்று தண்ணீர் தொட்டியில் அமர்ந்து, ஓவ்வொரு எளநீயா வெட்டிக் கொடுக்க, ஒரு அண்ணன் மட்டும் 5 எளநீ தண்ணீர் குடித்தார், எனக்கு இரண்டுக்கே வயிறு ரொம்பி விட்டது. கடைசியில் பார்த்தால் 6, 7 எளநீ மீதி இருக்குது, இதை என்ன செய்வாங்கனு யோசித்தா, எங்க பாஸ் அந்த எளநீ எல்லாம் எடுத்து மோட்டார் ரூம் மேலேயே வைத்து விட்டு, பின்னர் நாங்க நடந்து வந்த பாதையில் கடைசியில் வந்தார், கையில் ஒரு தென்னை ஓலையை வைத்து, பின்பக்கமாக திரும்பி, நாங்க நடந்து வந்த பாதையின் தடங்களை அழித்துக் கொண்டே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே கோயிலில் கடைசி மணி அடிக்கும் சப்தம் கேட்டதும், குடித்த எளநீ தண்ணீர் எல்லாம் பயத்தில் வேர்வையாக வரத் தொடங்கி விட்டது. வந்த காரியம் முடிந்ததும் ஆர்வம் எல்லாம் போய் பயம் பிடிக்கத் தொடங்கியாச்சு, எங்கே அம்மா, நான் கோயிலில் இல்லாததை கண்டுபிடித்து, எங்கே போனாய் என்று கேட்பாங்களா, என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.&lt;br /&gt;மத்தவங்க எல்லாம் சிரித்துக் கொண்டு வந்தார்கள். ஒருவழியாக வந்து பூஜையில் கலந்துக் கொண்டு, விபூதி, சந்தனம், குங்குமம் வாங்கி வைத்துக் கொண்டேன், திருடியதற்கு கடவுளிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் எங்க பாட்டி வீட்டிற்கு முன்னால் பெரிய கூட்டம், எங்க பாட்டி, கன்னாபின்னா என்று திட்டுறாங்க, குடும்பத்தையே திட்டுறாங்க, வயித்தால போகும், பேதியில் போகும், நாசமாக போவாங்க என்று திட்டுறாங்க. எனக்கோ பயம், எங்கே பாட்டி கண்டுபிடிச்சிருப்பாங்களோன்னு. எங்க பாட்டி என்னைப் பார்த்ததும் “யப்பூ, வந்து பாரு, இப்படி களவாணிப்பயலுக எளநீ வெட்டி போட்டிருக்கானுக”&lt;br /&gt;&lt;br /&gt; “அப்படியா, யாரு ஆச்சி, இப்படி செய்தாங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலையப்பா, பின்னாடி போய் பாரு, எல்லோரும் தடம் பார்க்கிறாங்க”&lt;br /&gt;அவ்வளவு தான் பயம் பிடித்துக் கொண்டது, மொகம் வெளிரிப்போய், பின்னாடி கிணத்துமேட்டு பக்கம் போனால், எனக்கு ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே தடம் கண்டுபிடிப்பது யார் என்றால் அவர் எங்க குரு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருடனிடமே திருட்டை கண்டுபிடிக்கச் சொன்ன கதை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆச்சி, இது தெக்கூர்க்காரன் மாதிரி தான் தெரியும், தடத்தை அழிச்சுப்புட்டானுக, அடுத்த வாட்டி வந்தால் விடக்கூடாது, பேசாம போலிசுக்கு சொல்லலாமா” குரு&lt;br /&gt;&lt;br /&gt;“போலிசா, வேண்டாமய்ய்யா, அவனுங்க வந்தால் எல்லாத்தையும் போட்டு கொடைவானுங்க, எளநீ திண்ணவங்க நாசமா போவானுங்க, பேதியில் போவானுங்க” ஆச்சி&lt;br /&gt;&lt;br /&gt;“ஆச்சி, அப்படி விடக்கூடாது, அடுத்தவாட்டி வந்தால் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தோலை உரிக்க வேண்டும்” குரு.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் பங்கிற்கு கொஞ்சம் திட்டு விட்டு, இடத்தை காலி செய்தேன். இது தான் முதல் திருட்டு. அப்புறம் வாரம் ஒருவர் வீடு என்று போவோம், அதன் பின்னர் திருடியது தெரியாமல் இருக்க எளநீயை கயிறு கட்டு இறக்குவோம், வேற இடம் போய் வெட்டி சாப்பிடுவோம். சில சமயம் எங்க வீட்டிலேயே இந்த வாட்டி எளநீ வெட்டலாம் என்று உறுப்பினர்களே அன்பு வேண்டுகோள் விடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் மாலைப்பயிநீ (பதநீர்) குடிக்க ஆசையா இருந்தால், குருவிடம் சொன்னால் போதும், எவ்வளவு பெரிய பனமரம் என்றாலும் ஏறி கலயத்தை கொண்டு வருவார், குடித்து முடித்தது, அங்கேயே போட்டு உடைத்து விடுவோம். அடுத்த நாள் பனமரம் ஏறுபவரிடம் இருந்து அர்ச்சனை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எங்க கையில் எப்போவும் உண்டிவில் இருக்கும், அதில் வட்ட வட்ட கல்லை வைத்து தெருவிளக்கு முதல் பாட்டிகளின் மண்டை வரை அடித்திருக்கிறேன். அதை உபயோகித்து அணில், குருவிகள் அடிப்போம், அதுவே போர் அடிக்க, ஒரு நாள் நண்பனிடம் பந்தயம் கட்டி, அங்கே மேய்ந்த கோழி ஒன்றை குறி வைக்க, அது சரியாகப்பட்டு துடிதுடித்து இறந்து போனது, அய்யோ என்ன செய்வது என்று தெரியலை. நல்லவேளை அது காட்டுப்பக்கம் என்பதால் யாரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் எங்க குரு அங்கே வர, நிலைமையை சொல்ல, அவரோ இதுக்கு போய் பயப்படலாமா, என்று சொல்லி, அந்த செத்த கோழியை எடுத்து லுங்கிக்குள் போட்டுக் கொண்டார். உடனே எல்லோரையும் தன்னுடன் வரச் சொல்லி, அவரது தோட்டத்திற்கு போனோம். அங்கே போனதும் அந்த கோழியை தீயில் சுட்டு, மிளகாய் பொடி, உப்பை தடவி சாப்பிட்டோம், ஆகா என்னா ருசி, என்னா ருசி. அதன் பின்னர் வாரம் ஒரு கோழி என்று தீர்மானம் போட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை எளநீ திருடப் போய், அப்போ இரவில் தான் கரண்டு விடுவாங்க, அதனாலே தோட்டத்திற்கு தண்ணீ பாய்க்க வந்தவர், எங்க சப்தம் கேட்டு, அரிவாளைத் தூக்கிக் கொண்டு விரட்ட, ஓவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் போக நானோ ஒரு ஒடை மரத்தின் கீழ் ஒளிந்துக் கொண்டேன், ஒரு மணி நேரம் கழித்து எங்க கூட்டம் கூடும் இடத்திற்கு வந்தேன், எனக்கு கால், முட்டு எல்லாம் முள் ஏறி ரத்தம் வந்து விட்டது. அதே போல் வீரத்தளும்போடு மத்தவங்க இருந்தாங்க. அத்தோட சரி, இருட்டு, திருட்டு எல்லாமே விட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகள் மேயும் இடத்தில் போய் திருட்டுத்தனமாக ஆட்டுப்பால் கறந்து குடித்தது, நிலக்கடலைத் தோட்டம், வள்ளிக்கிழங்கு, சீனிக்கிழங்கு தோட்டங்களில் யாருக்கும் தெரியாமல் பிடுங்கி, தீயில் வாட்டி சாப்பிட்ட அனுபவங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவலைகள் ஓய்வதில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-113973112758096616?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/113973112758096616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=113973112758096616' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113973112758096616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113973112758096616'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/02/blog-post.html' title='நினைவலைகள் - அலிபாபாவும் நா(ன்)லு திருடர்களும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-113827098403523781</id><published>2006-01-26T02:15:00.000-08:00</published><updated>2006-02-27T03:37:13.506-08:00</updated><title type='text'>நினைவலைகள் - களவும் கற்று மற</title><content type='html'>அப்பா இல்லாத காரணத்தால் சின்ன வயதில், என் அம்மா என்னையும் என் தம்பியையும் வளர்க்க ரொம்ப ரொம்பவே கஷ்டப்பட்டாங்க, குறிப்பாக எங்க உறவினர்கள் முன்னாள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும், யாரும் எங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்லக்கூடாது என்பதே என் அம்மாவின் ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;நானோ நினைத்ததை சாதிக்க துடிக்கும் பயங்கரமான கோபக்கார முரட்டு புத்திச்சாலி, என் தம்பியோ அன்பான அப்பாவி நோயாளி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இருவரும், பொய், திருட்டு, கெட்டு பேச்சுகள், கெட்ட செயல்கள் செய்வதை தடுக்க அம்மா தினமும் அறிவுரைகள், கதைகள் சொல்வார்கள், நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், பெரிய பெரிய தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை தினமும் இரவில் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் தம்பியும் கூடுமானவரை அம்மாவின் எண்ணத்தை காப்பாற்றியிருக்கிறோம். எங்க தெருவில் மற்ற பையன்கள் வாயிலில் செந்தமிழாய் கெட்ட வார்த்தைகள் வரும், அண்ணன், தம்பியை பார்த்து அவன் பரம்பரையே திட்டுவான். பெத்த அம்மா தன் மகனை நாசமாய் போ என்று திட்டுவதும் உண்டு, சிலரின் திட்டுதல் நன்மையில் கூட முடியும் (எ.கா. கொல்லையில் போ, பேதியில் போ, மருந்து மாத்திரை செலவே இல்லை).&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தாயை அழைத்து என் அம்மா அறிவுரை சொல்வார்கள். என் மற்றும் தம்பியின் வாயிலிருந்து ஒரு கெட்ட வார்த்தை தூக்கத்தில் கூட வராது. சில சமயம் அர்த்தம் தெரியாமல் யாராவது திட்டினாலும் என் அம்மா அந்த பையனை அழைத்து, அவன் திட்டியதற்கு அர்த்தம் சொல்வார்கள், “இப்போ சொல்லு, நீ உன் தம்பியை திட்டினாயா, அல்லது உன் அம்மாவை திட்டினாயா” .&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் 6 மணிக்கு மேல் வீட்டு வாசலை தாண்டி வெளியே செல்ல அனுமதி கிடையாது. பள்ளி விட்டு வந்ததும் வெளியே சென்று விளையாட அனுமதி, அதுவும் 6 மணி வரை தான், பல நாட்கள் மாலை 6 மணி கடந்ததை அம்மா கையில் இருக்கும் கொய்யா குச்சி தான் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி அதிஷ்டக்காரன், அதிகம் விளையாட செல்ல மாட்டான், வயதான பாட்டிகள் மத்தியில் ஊர்க்கதை பேசுவதில் வல்லவன்,யார் யார் கூட ஓடிப் போனார்கள்,போன்று அனைத்து கதைகளும் பேசுவான் .  எனக்கோ ஒரு இடத்தில் அமர்ந்து பேசவே பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நண்பர்களுடன் விளையாடும் போது நேற்றிரவு அந்த தெருவில் நடந்த அம்மன் விழாவில் ரஜினி படம் போட்டார்கள், போய் பார்த்தோம், மேலத் தெரு கல்யாண வீட்டில் வீடியோ போட்டார்கள் என்று எல்லாம் பேசுவதைக் கண்டு நாம மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் மனம் வருந்தியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, நம்மை என்று சுதந்திரப்பறவையாக விடுவாங்க என்று பல நாட்கள் கனவு கண்டதுண்டு. தினம் தினம் அறிவுரை, கதைகள், அர்ச்சனைகள், போதனைகள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் கடவுள் பக்தி என்பதை விட பயமே அதிகம். தப்பு செய்தால் கடவுள் கண்ணை குத்திடுவார், கை, கால் ஊனமாகி விடும், படிப்பு வராது, காய்ச்சல் வந்துடும், பேய் பிடித்திடும் இப்படி எல்லாம் எனக்குள் நானே பயந்திருக்கிறேன், அதுவே என்னை ஒழுக்கமானவனாக நடக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் பல்பம், பென்சில் கீழே கிடந்தால் யாராவது பார்க்கிறார்களா என்று ஒரு சுற்று பார்த்து விட்டு எடுத்து விடுவேன், அவ்வளவு தான் இதயத் துடிப்பு 100 மீட்டர் ஓடி வந்தவன் போல் அடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் எனக்கு தெரிந்த அத்தனை கடவுள்களும் கண் முன்னால் ஆயுதங்களோடு வந்து போவார்கள், உடனே ஓடி போய் ஆசிரியரிடம் இது கீழே கிடந்தது என்று கொடுக்க, அவரோ எல்லோரையும் கை தட்டச் சொல்லி, நேற்று பென்சில் திருடியவன் காதை இன்றும் திருகி, இருந்தால் இவனைப் போல் இருக்க வேண்டும் என்று சொல்ல சொல்ல, எனக்கு புகழ் போதை ஏறியது, அதுவே பிற்காலத்தில் என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு போனால் அம்மா என்னை ஒரு வழி செய்து விடுவாங்க. எனவே பயத்தாலும், புகழாலும் நான் தவறு செய்யாமல் இருந்தேன். சில நேரங்களில் அம்மா, கடைக்கு போயிட்டு வா என்று பைசா கொடுத்து அனுப்புவாங்க, நானும் கடையில் பொருட்கள் வாங்கி வருவேன், அப்போ எப்படியும் 10 முதல் 20 பைசா வரை கமிஷன் அடித்து விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ எல்லாம் பபுள்கம் வாங்க ஆசைப்படுவேன், அதில் ஒரு ஸ்டிக்கர் கொடுப்பார்கள், அதில் கிரிக்கெட் வீரர்களின் பெயரும், ரன், விக்கெட் இருக்கும், அதை சேகரித்தேன். வீட்டில் வந்ததும் அம்மா, கொடுத்த பணத்திற்கும் வாங்கி வந்த பொருளுக்கும் கணக்கு கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வரும் போது உருளைக்கிழங்கில் 5 பைசா, கேரட்டில் 10 பைசா ஏற்றி விலையை நிர்ணயம் செய்து மனப்பாடம் செய்து வந்து சொல்வேன். நான் சொல்லும் திருட்டு கணக்கை அம்மாவும் கேட்டு விட்டு போ, போய் படி என்று அனுப்பி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரம் கழித்தப் பின்பு மீண்டும் கணக்கு கேட்க உருளைக்கிழங்கில் ஏற்றிய பைசாவை தக்காளியில் மாற்றி சொல்ல, மீண்டும் கொய்யா குச்சி என் கணக்கு தப்பு என்று சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச காலத்தில் கமிஷன் எடுப்பது என் பிறப்புரிமையாக்கப்பட்டது. கடைக்கு போக வேண்டிய நேரம் வந்ததும் படிப்பதாக புத்தகத்தை எடுப்பது அல்லது கழிவறையில் போய் ஒளிந்துக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவும் எனக்கு வீட்டில் பொறுப்பு இருப்பதாக எண்ணி கணக்கு கேட்பது கிடையாது. என் அம்மா வீட்டில் பணத்தை எடுக்க, வைக்க எங்களையே உபயோகிப்பார்கள். பணத்தை ஒரு நாளும் பெட்டியில் வைத்து பூட்டியது கிடையாது. அஞ்சறைப் பெட்டி, ஊசி நூல் பெட்டி, தையல் மிஷின் பெட்டி, சாமி அறையில் விபூதி பெட்டி இப்படி திறந்த வெளியில் தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தையல் தைத்து கிடைத்த பணம், எலுமிச்சை, கருப்பட்டி விற்ற பணத்தை நான் அல்லது தம்பி தான் கணக்கு போட்டு வாங்கி, எங்கே அம்மா சொல்லுறாங்களோ அங்கே வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளும் அந்த பைசாவை எடுக்க தோணியது இல்லை, ஆனால் கடைக்கு போனால் மட்டும் கமிஷன் அடிக்கவில்லை என்றால் ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கும். சில சமயம் அம்மா பணத்தை எங்கே வைத்து, எப்போவே தேடி, அது கிடைக்காமல், ஒருவேளை நான் தான் எடுத்துவிட்டேன் என்று தவறாக நினைத்து துவைத்து எடுத்த நாட்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னமோ என்ன மாயமோ தெரியாது, என் தம்பிக்கு அடியே விழாது, நான் வேறு பணத்தை எடுத்தேன், இல்லை என்று சொல்வதற்கு பதில் சிரித்துக் கொண்டிருப்பேனா, அதுவே அம்மாவை நல்லா கடுப்பேற்றி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தவறாக அடித்ததை நினைத்து அம்மா மனம் வருந்துவாங்க, அது தான் சாக்கு என்று சொல்லி, முருக்கு, அதிரசம் செய்யச் சொல்லி ஆர்டர் போடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் காய்கறி, மளிகைக்கடையில் பணத்தை கொடுத்து பொருள் வாங்கி வரும் போது, கடைக்காரர் ஏதாவது ஒன்றை விட்டோ, அல்லது ஏதோ நினைவில் பணத்தை அதிகமாக கொடுத்து விடுவார். அய்யோ, அந்த பணத்தை வாங்கி நான் படும் பாடு இருக்கிறதே, கடன் கொடுத்து வாங்க முடியாமல் இருக்கும் ஒருவனின் மனநிலை தான். பக், பக் என்று அடிக்கும், எங்கே அந்த பைசாவை அமுக்கி விடலாமா, அல்லது கடைக்காரரிடம் திரும்பி கொடுத்து விடலாமா? மாலையில் கிரிக்கெட் பந்து வாங்க வேறு பைசா கொடுக்க வேண்டுமே,இதை அதற்கு உபயோகிக்கலாமா, பபுள்கம் வாங்கலாமா என்று எல்லாம் மனசு நினைக்கும், ஒரு 100 மீட்டர் நடந்ததும், மீண்டும் அனைத்து கடவுள்களும் கண் முன்னால் வந்து மிரட்டுவார்கள், ஊரில் கெட்ட பெயர் எடுத்தவர்கள் எல்லாம் வந்து எங்க அணியில் சேர் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; அய்யோ கடவுளே என்னை காப்பாற்று என்று கூறிக் கொண்டு, நல்ல பிள்ளையாக, “அண்ணாச்சி, பைசா ஜாஸ்தியாக கொடுத்துட்டீங்க, கொஞ்சம் கணக்கு பாருங்க” என்று சொல்லி, குற்றத்திலிருந்து தப்பி விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் அந்த கடைக்காரர் என் சித்தப்பா, மாமா அனைவரிடமும் என் நன்னடத்தைக்கு சான்றிதழ் கொடுப்பார், அதன் பிரதி என் அம்மாவுக்கு வரும், அப்போ என் தாயாரின் மகிழ்ச்சியை கண்டால் அதன் பின்பு கனவிலும் தவறு செய்யவே தோணாது. இத்தனை இருந்தும், நான் கள்ள கழவாணிப்பயலாக  இருந்த கதையை சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவலைகள் ஓய்வதில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-113827098403523781?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/113827098403523781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=113827098403523781' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113827098403523781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113827098403523781'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2006/01/blog-post.html' title='நினைவலைகள் - களவும் கற்று மற'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-113202888770373248</id><published>2005-11-14T20:27:00.000-08:00</published><updated>2005-11-14T20:28:07.713-08:00</updated><title type='text'>அழகிய தேவதையின் வருகை</title><content type='html'>அன்பு தம்பி பாஸிடிவ் ராமா அவர்களுக்கு இறைவனின் அருளால் அழகான குட்டி தேவதை பரிசாக கிடைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வாழ்த்துவோம். குட்டி தேவதைக்கும் வாழ்த்துகள் கூறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூற தொலைபேசி எண் 9841422739.&lt;br /&gt;&lt;br /&gt;- மகிழ்ச்சியுடன் பரஞ்சோதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-113202888770373248?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/113202888770373248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=113202888770373248' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113202888770373248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113202888770373248'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2005/11/blog-post_14.html' title='அழகிய தேவதையின் வருகை'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-113196957475512705</id><published>2005-11-14T03:58:00.000-08:00</published><updated>2006-05-24T11:33:58.493-07:00</updated><title type='text'>நினைவலைகள் - குழந்தைகள் தினம்</title><content type='html'>எனக்கு சின்ன வயதிலிருந்தே குழந்தைகள் என்றால் உயிர். சின்னக் குழந்தைகளோடு விளையாடுவது, பேசுவது, அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிப்பது எனக்கு மிக மிக பிடித்த விசயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க தெருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இரவில் அவர்களுக்கு என் அம்மா கதை சொல்வதை வழக்கமாக வைத்திருந்தாங்க. எங்க உறவினரது குழந்தைகள் எங்க வீட்டிற்கு வந்தால் என்னை விட்டு போக மாட்டாங்க, அந்த அளவுக்கு குழந்தைகளோடு ஒன்றிப் போய் விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் 4வது படிக்கும் போது என் சித்தப்பாவின் மகள் மலர்விழி எனக்கு மிகவும் பிடிக்கும், பெரிய கண்கள் அவருக்கு, அவர் பேசும் அழகே தனி. தினமும் நான் அவரோடு போய் விளையாடுவேன், தெருவில் கொண்டு வந்து அனைத்தும் சுட்டிக் காட்டுவேன். பள்ளி விட்டு வரும் வழியிலேயே அவர் என்னைப் பார்த்து விளையாட அழைப்பார். என் வாழ்வில் முதன் முதலில் சிறு குழந்தைக்கு அடிமையானது என் தங்கை மலர்விழிக்கு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் எங்க தூத்துக்குடியில் அருகில் இருக்கும் மாப்பிள்ளையூரணியில் எங்க மாமாவின் மகன் பழனி, ஆகா, என்ன அழகான குழந்தை தெரியுமா? அதுவும், என் மாமா, அத்தை திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த குழந்தை. பழனியை யாரும் தரையில் விட மாட்டார்கள், என் பெரியமாமா, சின்னமாமா ஆகியோரின் பிள்ளைகளுக்கு பழனி என்றால் உயிர், அவர்கள் எல்லோரும் 15, 20 வயதை  தாண்டியவர்கள். வாரம் ஒரு முறையாவது புகைப்படம் எடுப்பார்கள், அப்படி 500க்கும் மேல் புகைப்படம் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் விடுமுறைக்கு சென்றால் பழனியுடன் தான் விளையாடுவேன். அவரது சின்ன வயது உருவம் இன்னமும் நினைவில் இருக்குது. இப்போ ஊருக்கு சென்ற போது அவர் கல்லூரியில் படிப்பதாக சொன்னார். சின்ன வயது சிரிப்பை நான் மீண்டும் பழனியிடம் கண்டேன். பெரிய மனிதனாக எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க போனதை நினைத்து சிரித்தேன், மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என் மற்றோரு சித்தப்பாவின் மகள் திவ்யா, திவ்யா சின்ன வயதில் கொழு கொழு என்று குண்டாக இருப்பார், விரல் பட்டாலே சிவந்து அளவிற்கு அழகான குழந்தை, அவரை தூக்கி வைத்திருப்பது மிகவும் கடினம் என்பதால் அதிக நேரம் யாரும் அவரை தூக்கி வைத்திருக்க மாட்டாங்க. அதுவே எனக்கு நல்ல வாய்ப்பு, அடிக்கடி திவ்யாவை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விடுவேன், என்னைப் பார்த்தாலே அவருக்கு குஷியாகி விடும், அப்படியே தூக்கியவுடன் என்னைப் பார்த்து, வீட்டை விட்டு வெளியே கொண்டு போகச் சைகையால் காட்டுவார். நல்லா ஊர் சுத்திக் காட்டுவேன். ஆடு, மாடு, கோழி எல்லாம் காட்டினால் ரொம்பவும் மகிழ்வார். அவர் கொஞ்ச நாளில் குவைத் வந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது என் அண்ணன் மகள் திவ்யா, இரண்டு திவ்யாவிற்கும் ஒரு மாத காலமே வித்தியாசம். நான் என் உயர்நிலை பள்ளிப் படிப்பு முடித்து, சென்னையில் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து கணினி பாடம் படித்தேன், அப்போ திவ்யாவிற்கு 2 வயது இருக்கும். இரண்டு திவ்யாவும் பார்க்க ஒரே மாதிரி அழகான பொம்மைகள் மாதிரி இருப்பாங்க. காலையில் திவ்யா எழுந்தது முதல் சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது, அழுவது, சிரிப்பது எல்லாமே என்னுடன் தான். நாங்க இருவரும் சண்டையும் போடுவோம். திவ்யாவுக்கு விளையாட, பேச, எல்லாமே நான் கற்றுக் கொடுத்தேன். பள்ளியில் படிக்கும் அவர் என்னமும் எனக்கு அவர் சின்னக்குழந்தைப் போல் தான் தெரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது கீர்த்தனா, திவ்யாவின் தங்கை, அவர் பிறந்த சில மாதங்களில் குவைத் வந்து விட்டேன். கீர்த்தனா 3 மாதக்குழந்தையாக இருக்கும் போது மிகவும் அழகாக கெக் கெக் என்று சிரிப்பார். எனக்கு இன்னமும் அந்த சிரிப்பு நினைவில் இருக்குது. மனக்கஷ்டம் உண்டாகும் போது எல்லாம் கீர்த்தனாவின் சிரிப்பை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, என் மனநிலையை மாற்றிக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குவைத் வந்தப் பின்னர் தங்கை திவ்யா, தம்பி கௌதம், மற்றொரு சித்தப்பாவின் மகள் அகல்யா, சித்தப்பாவின் நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். வாரந்தோறும் அவர்கள் வீட்டிற்கு நான் கண்டிப்பாக போக வேண்டும் என்று அன்புக்கட்டளை. நல்ல வெயில் காலத்தில் இரவில் கடற்கரைக்கு சென்று விளையாடுவோம், விடுமுறை நாட்களில் பூங்கா, மற்றும் பல இடங்களுக்கு சென்று விளையாடுவோம். அவர்கள் எங்கே சென்றாலும் முதலில் நான் வருவேனா என்பதை கேட்டு வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்காக என் கிரிக்கெட் போட்டிகளை விட்டுக் கொடுத்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளில் திவ்யா முதற்கொண்டு குழந்தைகள் பெரிய குழந்தைகளாக, கையில் வைத்து கொஞ்சும் அளவுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் எனக்கு கிடைக்கவில்லை, அப்போ என் நண்பரின் குழந்தை ஜனனி குவைத் வந்தார். அப்புறம் தமிழ்மன்றத்தின் நண்பர்களின் குழந்தைகளை நான் கடிதங்களில், நான் சொல்லும் கதைகளில் கொஞ்சி மகிழ்ந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள் வீட்டில் கணினி பிரச்சனை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரச்சனை என்றால் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள், வீட்டிற்கு வரச் சொல்லுவார்கள், அங்கே குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக போவேன், இல்லை என்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றால் மட்டுமே போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில ஆண்டுகளாக கைக்குழந்தையாக யாருமே கிடைக்காத காரணத்தால் திருமணமே வேண்டாம் என்றிருந்த நான், என் அம்மாவிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தேன் ))).&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் ஆகி என் மனைவியிடம் என்ன வேண்டும் என்று கேட்டால், அவர் கேட்டது ஒன்றே ஒன்று தான். நமக்கு பெண் குழந்தை பிறந்தால் பெயர் சக்தி என்றே வைக்க வேண்டும். நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு கொஞ்சி விளையாட குழந்தை கிடைத்தால் போதும், பெயர் முக்கியமில்லை என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் ஆகி குவைத்திற்கு என் மனைவியை அழைத்து வந்த போது எங்க அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர் ராஜேஷ் அவர்களின் குழந்தை அரவிந்த் அறிமுகம் ஆனார். ஒரு நாள் என் மனைவி சொன்னார் “முதல் தளத்தில் இரண்டு தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன, அவர்களை போய் சந்தித்தேன். ஒரு வீட்டில் மிக அழகான ஆண் குழந்தை இருக்கிறது, பெயர் அரவிந்த், 4 மாதக்குழந்தை, கண்கள் பெரிய கண்கள். குட்டி கிருஷ்ணன் மாதிரி இருக்கிறான் என்றார். நான் உடனே போய் அந்த குழந்தையை எப்படியாவது நம்ம வீட்டிற்கு கொண்டு வா, என்று அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் என் மனைவி அரவிந்தோடு வந்தார். ஆகா என்ன அழகான குழந்தை, நிறைய முடிகள், குட்டி கிருஷ்ணன் மாதிரி ஒரு சடை, பெரிய கண்கள், காலில் கொலுசுகள், அழகான சிரிப்பு. நான் மயங்கியே போய் விட்டேன். நான் அரவிந்தை தூக்கி, முத்தமிட்டு மகிழ்ந்தேன். அன்று முதல் நான் அலுவலகம் போய் திரும்பியதும் அரவிந்த் எங்க வீட்டிற்கு வந்து விடுவார். அரவிந்திற்கு அழவே தெரியாது, எப்போவும் சிரிப்பு தான். கிள்ளி விட்டாலும் அழமாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு ஆண்டாக எங்க வீட்டு பிள்ளையாக இருந்த அரவிந்த் தற்போது இந்தியாவில் இருக்கிறார். அவரது அப்பாவுக்கு ஓமனில் வேலை கிடைத்து மாற்றம் ஆகி போயிட்டார். ஆனாலும் அரவிந்த் இன்னமும் என் மனதில் அதே புன்னகையோடு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குவைத்தில் எனக்கு மேலும் குழந்தைகள் அறிமுகம் ஆனார்கள், என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மாதம் இருமுறை குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது, விளையாட்டு, நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுப்பது என்று தீர்மானித்தோம், அதையும் செய்து வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கூட தெருவில், பிரயாணம், ஷாப்பிங்க் செண்டரில் என் முன்னால் இருக்கும் குழந்தைகளை வேடிக்கை விளையாட்டு காட்டி, என்னைப் பார்த்து சிரிக்க வைப்பேன். சில குழந்தைகள் அப்பா, அம்மா பேச்சை கேட்காமல் அடம்பிடித்தால் பெற்றோருக்கு தெரியாமல் பயமும் காட்டுவேன். அவர்கள் பயந்து போய் பெற்றோர் சொல்படி கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியிடம் எனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்றேன், அவருக்கும் பெண் குழந்தை தான் இஷ்டம், எங்க இருவரின் விருப்பம் போல் என் மகள் சக்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ந்தேதி பிறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி என்று சொல்லும் போது மனதில் உற்சாகம் ஒட்டிக் கொள்ளும், தொடர்ந்து இரண்டு மூன்று  முறை அழுத்தமாக சொல்லிப் பாருங்க, உங்களுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும். அது தான் இந்த பெயரில் இருக்கும் மகத்தான சக்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா என் மகள் சக்தியைப் பற்றி சொல்ல ஒரு வலைத்தளம் போதாது, அத்தனை தகவல்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே குழந்தைகளுக்காக சிறுவர் பூங்கா வலைப்பூ தொடங்கி, அதில் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன். சக்தி புராணம், இது என் மகள் சக்திக்காக தொடங்க இருக்கும் வலைப்பூ. என் மகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே சேமிக்க இருக்கிறேன். அவர் தமிழிலில் எழுத, படிக்க தொடங்கும் காலத்தில் அவரே தகவல்கள் கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது குழந்தைகள் சந்தோஷ், ஸ்மையா, அருண் பாலாஜி, சக்தி ஆகியோர் எங்க வீட்டில் கொட்டம் அடிக்கிறார்கள்.  கிரிக்கெட் விளையாட செல்லுமிடத்தில் இலங்கை நண்பர்களின் குழந்தைகள் வருவார்கள், அவர்களுக்கென்று சாக்லெட் எடுத்து செல்வது வழக்கமாக வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பொதுவாக புதிய நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் அவர்கள் குழந்தைகளை உடனே தூக்க மாட்டேன், ஏன் என்றால் அவர்கள் அழத் தொடங்கி விடுவார்கள், பின்னர் என்ன செய்தாலும் நம்மிடம் ஒட்ட மாட்டார்கள். குழந்தைகளை முதலில் கண்டுக்கொள்ளவே கூடாது. நாம் அமைதியாக இருக்க வேண்டும், அல்லது குழந்தைகளின் பெற்றோரிடம் சிரித்து பேச வேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தைகளை கொஞ்சம் கவர முடியும், சிறிது நேரம் சென்றப்பின்னர் குழந்தைகளைப் பார்த்து சமிக்கை செய்து, சிரிப்புண்டாக்க வேண்டும், பின்னர் நம் கையில் இருக்கும் தொலைபேசி, பென் போன்றவற்றை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். இவ்வளவு செய்தும் வரவில்லை என்றால் இன்னமும் பொறுமை காக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமாக கொடுத்து வாங்குவது போல் விளையாட வேண்டும், பின்னர் கழுத்து பக்கத்தில் கிச்சு முச்சு காட்ட வேண்டும், அதன் பின்னர் தான் கையில் தூக்க வேண்டும், தூக்கியது முத்தம் கொடுக்கக்கூடாது, மீசை உள்ளவர்கள், சிகரெடி பிடிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தூக்கி விசிறி, போட்டோகள், அல்லது வேற பொருட்களை தொட அவர்களை தூக்கி காட்டவேண்டும். அல்லது வீட்டின் உள்ளேயே அங்கே இங்கே நடக்க வேண்டும், அப்போ தான் குழந்தைகள் நம்மை கட்டி பிடித்துக் கொள்வார்கள். அவ்வளவு தான், அதன் பின்னர் நீங்க குழந்தைகளை கீழே விட்டாலும் இறங்க அடம் பிடிப்பார்கள். வீட்டிற்கு கிளம்பினால் அழத் தொடங்குவார்கள். அதுவே நீங்க குழந்தையின் மனதை கொள்ளை அடித்ததற்கு அடையாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குழந்தைகளோடு இருக்கும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப நாமும் நடக்க வேண்டும், தரையில் குழந்தைகள் உருண்டால், நாமும் உருள வேண்டும். ஓடி விளையாடினால், நாமும் ஓட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை நீங்களும் இதையே செய்து, குழந்தைகளின் மனதை கொள்ளை கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி செய்தி: எங்க திருமண நாள், அது குழந்தைகள் தினமான இன்று தான். மேலும் எங்க திருமணம் நடந்த திருமண மண்டபத்தின் பெயர் சக்தி திருமண மஹால்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-113196957475512705?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/113196957475512705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=113196957475512705' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113196957475512705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/113196957475512705'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2005/11/blog-post.html' title='நினைவலைகள் - குழந்தைகள் தினம்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-112953108481631916</id><published>2005-10-16T23:37:00.000-07:00</published><updated>2006-05-18T02:10:22.323-07:00</updated><title type='text'>என் நினைவலைகள் – கிரிக்கெட் (4)</title><content type='html'>என்னுடைய அம்மாவுக்கு இனிமேல் நான் சத்தியமாக கிரிக்கெட் விளையாட போகமாட்டேன் என்று சத்தியம் செய்த நேரத்தில் என்னால் மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்த முடிந்தது, அதனால் 100, 200மீட்டர் ஓட்டம், நீளம், மும்முறை தாண்டுதலில் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்க முடிந்தது (இது தனிக்கதை). நிறைய புத்தகங்கள் படிப்பது, விவசாயம், தேனீ வளர்ப்பது, காட்டில் வேட்டையாடுவது போன்றவற்றில் என் கவனம் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ முக்கியப் போட்டிகள் இருந்தாலும் நான் செல்லவில்லை. அதே நேரம் எங்க ஊரில் இரண்டாம் ஆண்டாக கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்து, திருநெல்வேலி அணியிடம் இருந்த சுழல் கோப்பையை வாங்கி வந்து, பணம் வசூல் செய்து, இந்த முறை எங்க ஊர் அணியை இரண்டாக பிரித்து, ஒரு அணிக்கு பாஸ்கர் அண்ணா தலைமையும், அடுத்த அணிக்கு மெல்கி தலைமையும் தாங்கினார்கள். பாஸ்கர் அண்ணா அணியில் எல்லாமே நல்ல வீரர்கள், அது மட்டுமல்லாது பக்கத்து ஊரில் நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்களையும் சேர்த்து பலமான அணியாக்கி விட்டார்கள். அடுத்த அணியில் வழக்கம் போல் மெல்கி, மனோகர், சார்லஸ், பாக்கியம், ஆசிர்வாதம், குருஸ் என்று சொத்தை அணியை தேர்வு செய்து விட்டார்கள். என்னை அழைத்தும் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் போட்டியிலேயே எங்க சீனியர் அணி எதிர்பாராத விதத்தில் தோற்று போக, அதிசயமாக எங்க ஜீனியர் அணி வெற்றிப் பெற, ஊரில் ஒரே குழப்பம். சீனியர் அணிக்கு சரியான திட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாத அளவுக்கு வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் கமெண்ட் அடித்தார்கள். இப்போ செமி பைனலில் எங்க ஜீனியர் அணி,  வெற்றி பெற்றால் இரண்டாவது பரிசாவது கிடைக்கும், நான் விளையாடினால் வெற்றி நிச்சயம் என்று நம்பி, எங்க அம்மாவிடம் அனைத்து வீரர்கள், எங்க மாமா, சித்தப்பா எல்லாம் வந்து என்னை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எங்க அம்மாவும் இத்தனை பேர் கேட்கிறார்களே என்று யோசித்து என் சத்தியத்தை பூஜை அறையில் வாபஸ் வாங்கி விட்டார்கள். அதன் பின்பு சத்தியம் சர்க்கரை பொங்கல் என்ற நிலையை நான் எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செமிபைனலில் உடன்குடி அணியை எதிர்த்து ஆட வேண்டும், அப்போ பார்த்து சென்னையில் இருந்து 2 பேர் எங்க ஊருக்கு விருந்தாளியாக வந்திருந்தார்கள், இருவரும் நல்ல ஆட்டக்காரர்கள் என்று சொல்லி இருவரையும் அணியில் சேர்த்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பேட் செய்த உடன்குடி அணி 25 ஓவரில் 9 விக்கெட்கள் இழந்து 165 ரன்கள் எடுத்தார்கள். சென்னை வீரர் ஒருவர் அருமையாக ஸ்பின் பந்து வீசி 4 விக்கெட்கள் மேல் எடுத்தார், அன்று தான் நாங்க இதுதாண்டா ஸ்பின் பவுலிங் என்று தெரிந்து கொண்டோம். என் பங்கிற்கு 3 விக்கெட்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டிங் செய்த போதும் சென்னை வீரர்கள் அருமையாக ஆடி நல்ல துவக்கம் கொடுத்தார்கள், 70 ரன்கள் வரை விக்கெட் விழவே இல்லை, அதன் பின்பு விக்கெட் மழை பொழிய தொடங்கியது, வரிசையாக 5 விக்கெட்கள் காலி, பின்னர் கட்டை மன்னன் சார்லஸிம், கேப்டன் மெல்கியும் தாக்கு பிடித்து 110 ரன்கள் வரை கொண்டு வந்து விட்டார்கள், ஓவரும் 18 முடிந்து விட்டது. சார்லஸால் மெல்கி ரன் அவுட் ஆக, நான் இறங்கினேன். இன்னமும் 56 ரன்கள் தேவை, 7 ஓவர் தான் இருக்குது, பாஸ்கர் அண்ணா தான் போட்டிக்கு அம்பயர், அவர் நான் உள்ளே சென்றதும் தயவு செய்து சார்லஸ் பேட்டிங் செய்ய விடாதே, அவன் கட்டை போட்டு கவுத்துடுவான், ஓவருக்கு 8 ரன் தேவை, சார்லஸால் ஓடவும் முடியாத நிலை, எனவே ஓவருக்கு 2 பவுண்டரி அடிக்கப் பார், விக்கெட் கீப்பருக்கும் பின்னால் பந்தை தட்டி விடப்பார், 5 அல்லது 6வது பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவருக்கு நீயே விளையாடு என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்போவும் கால் / இடது பக்கம் ரொம்பவும் நன்றாக விளையாடுவேன் (நன்றி. கேப்டன் ரவிகுமார்), முதல் 2 ஓவரில் பயந்து பயந்து ஆடினேன், எனக்கு அப்புறம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆட்டக்காரர்கள் கிடையாது, மேலும் சார்லஸ் கட்டை போடும் மன்னன், ஓடவும் முடியாத நிலை. 5, 6 ரன்கள் என்று தான் எடுக்க முடிந்தது. ரன் ரேட் எகிற, வெளியே வேடிக்கை பார்க்கும் ஓவ்வொருவரும் கத்தி கத்தி, ஒவ்வொன்றாக சொல்ல, அதில் ஒருத்தர், ஏலே, இவங்க மட்டும் அடிக்காம வரட்டும், வெட்டி புடுவேன்லே என்று மிரட்ட, ஒரே டென்சன்.  சார்லஸீக்கு ரன்னர் கேட்டால் உடன்குடி அணி அனுமதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ பார்த்து முதல் நிலை பந்து வீச்சாளர் ஒருவரை கொண்டு வர, அவர் என்னை பயமுறுத்த முதல் பந்தே பவுன்ஸர் போட்டார், எனக்கு நல்லா தெரியும், அம்பயர் பாஸ்கர் அண்ணா, கண்டிப்பாக நோ பால் கொடுப்பார், எனவே கண்ணை மூடிக் கொண்டு ஹீக் சாட் அடிக்க அது சிக்ஸர் பறந்தது, அதே போல் நோ பால் கொடுக்க, எதிரணிக்கு ஒரே டென்சன், அடுத்த பந்தை என் காலைப் பார்த்து வீச, நான் அதை லெக் சைடில் தட்டி விட அது பவுண்டரியாகி விட்டது. அதன் பின்பு அந்த பந்து வீச்சாளரை எதிரணி அசிங்க அசிங்கமாக திட்ட, அடுத்த பந்தில் நான் ஒரு ரன் எடுக்க, சார்லஸ் தன் வேலையை காட்ட, அது மட்டுமல்லாது கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தான், அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது, அத்தோடு சார்லஸீக்கு பாஸ்கர் அண்ணா சரியான திட்டு கொடுத்தார். இப்போ 4 ஓவரில் 32 ரன்கள் தேவை. சார்லஸ் பேட்டிங், மீண்டும் சார்லஸ் பந்தை மட்டை வாங்காமல் விக்கெட் கீப்பரிடம் விட, டென்சன் ஆன பாஸ்கர் அண்ணா வைட் கொடுக்க, சண்டை ஆரம்பித்தது, அப்புறம் நாலாவது பந்தில் சார்லஸ் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் ஒரு ரன், கடைசி பந்தில் நான் ஒரு ரன், மொத்தம் 7 ரன்கள் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் டென்சன், 3 ஓவர் 25 ரன்கள். எனக்கு பந்து வீச யார் வருகிறார்கள் என்று ஒரே ஆர்வம், மீண்டும் அவர்கள் புதிய பந்து வீச்சாளரை கொண்டு வந்தார்கள், அந்த ஓவரில் 1 பவுண்டரி, ஒரு 2 ரன் ஒரு வைட், 1 ரன் எடுக்க முடிந்தது, 12 பந்தில் 17 ரன்கள் தேவை. கடைசி ஓவரில் மட்டும் 11 ரன்கள் தேவை. என் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி, முதல் பந்தில் 0, அடுத்த பந்தில் 4, அடுத்த பந்தில் 0, 4வது பந்தில் 4, ஐந்தாவது பந்து, இன்னும் 3 ரன் தேவை, ஒரே டென்சன், பாஸ்கர் அண்ணா சொன்னார், முடிந்தவரை விக்கெட் கீப்பருக்கு பின்னால் அல்லது சிலிப் பந்தை தட்டி விடப்பார், இரண்டு ரன் எடுத்தால் டை ஆகிவிடும், நாம விக்கெட் கம்மி தான், கடைசி பந்தில் ரன் வரவில்லை என்றால் நான் நோ பால் கொடுத்து விடுகிறேன் என்றார், எனக்கோ என்னமோ நடக்க போகுது என்ற பயம், சார்லஸிடம் சொல்லிவிட்டேன், பந்து வீசும் முன்பே பாதி மைதானம் வந்து விடு.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இருக்கும் அத்தனை தெய்வங்களையும் வணங்கி விட்டு மட்டையால் பந்த தடவ முயற்சிக்க, அது மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் போக, பாதி தொலைவில் நின்ற சார்லஸ் பாய்ந்து வர, பந்து எங்கே போனது என்று  தெரியாமல் நான் ஸ்டெம்பை மறைத்துக் கொண்டு ஓட, விக்கெட் கீப்பர் என்னை ரன் அவுட் ஆக்க வீசிய பந்து என் காலில் பட்டு ஓட, நான் மீண்டும் இரண்டாவது ரன் எடுக்க விக்கெட் கீப்பரை நோக்கி ஓடி வர, சோம்பேறி சார்லஸ் நின்று கொண்டிருக்க , நான் அவனை விரட்டி விட்டு ஓடு என்று சொல்ல, பந்து சார்லஸ் திசைக்கு வீச, சார்லஸ் பந்தை பார்த்துக் கொண்டே ஓட, ஸ்டெம்ப் விழ, சார்லஸீம் கிரீஸில் விழ ஒரே டென்சன், அனைவரும் பாஸ்கர் அண்ணாவை சூழ்ந்துக் கொண்டார்கள். ரன் அவுட் கேட்டார்கள், அவர் கொஞ்சம் கூச்சப்படாமல் நாட் அவுட், ஷேப்பிலி ரீச்சிடு என்று ஆங்கிலத்தில் சொல்ல, உடன்குடி அணியினரில் சிலர் ஸ்டெம்பை உறுவ,  அதுவரை ஆட்டம் பார்த்த எங்க ஊர் மக்கள் சிலர் அரிவாளை எடுத்து “வெக்காளி, வேட்டுல உடன்குடிகாரன்களை” என்று உள்ளே வர, மற்ற வீரர்கள் என்னையும் சார்லஸையும் சூழ்ந்துக் கொண்டார்கள், ஊர் பெரியவர்கள் அரிவாளை தூக்கியவர்களை திட்டி, சமாதானப்படுத்தி, வெளியே அனுப்பி, நடுவரும் உடன்குடி அணியினரும் சமரசம் பேச ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்கர் அண்ணாவிடம் எதிரணியினர் சொன்னது, காலில் பட்டு சென்ற இரண்டாவது ரன் கிடையாது, அப்படியே அது ரன் என்றால் சார்லஸ் அவுட். இதில் எதற்கும் பாஸ்கர் ஒத்து வரவில்லை. கொஞ்ச நேரத்தில் எதிரணியினர் ஒரு ரன் மட்டுமே கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், கடைசி பந்தில் 2 ரன் என்றால் நாங்க விளையாட வருவோம் என்றார்கள். எங்களிடம் பேசிய சார்லஸ் கவலையே வேண்டாம், நான் கடைசி பந்தில் 2 அடிப்பேன், என்று சொல்ல, அவன் தலையில் ஓங்கி மத்தவங்க அடிக்க, ஒரே டென்சன், “ஏலே வாயை மூடிட்டு சும்மா இருலே, ஒரு ரன் ஓட முடியலை, நீ என்னத்தை கிழிப்ப” என்று வேடிக்கை பார்க்க வந்தவங்க திட்டினார்கள்.               “&lt;br /&gt;&lt;br /&gt;உடன்குடி அணியினர் எல்லாம் மைதானத்தை விட்டு வெளியே வந்து கூடி பேசத் தொடங்கினார்கள். பாஸ்கர் அண்ணா மற்றும் மற்றவர்கள் என்னையும் சார்லஸையும் போய் மைதானத்தில் நிற்க சொன்னார்கள். நாங்களும் போய் நிற்க, பாஸ்கர் அண்ணா மைக் வாங்கி அதில் “உடன்குடி அணிக்கு இன்னமும் 2 நிமிடம் நேரம் தரப்படும், அதற்குள் மைதானத்தில் இறங்கவில்லை என்றால் அவர்கள் டிஸ் கோலிபை, ரத்து செய்யப்படுவார்கள் என்று சொல்ல, உடன்குடி அணியினர் உள்ளே இறங்க வில்லை, உடனே அவசர அவசரமாக உடன்குடி அணியை ரத்து செய்வதாக அறிவிக்க, எங்க ஊர் அணி இறுதிப் போட்டிக்கு தகுது பெற்றது என்று அறிவித்து விட்டார்,  ஒரே அடிதடி, ரகளை. ஓவ்வொருவரும் மற்றவரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டார்கள். எங்க வீட்டில் வேலை செய்யும் சுப்பிரமணி அவர்கள் என்னைப் பார்த்து “தம்பி, இனிமேல் இங்கே நிக்காதீங்க, வாங்க போகலாம் என்று கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு எனக்கு பாதுகாப்பாக இருந்து வீடு கொண்டு வந்து சேர்த்தார். நான் அவரிடம் என் அம்மாவிடம் தயவு செய்து சண்டையை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் பஜார் சென்று என் நண்பர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் சொன்ன வார்த்தை என்னை நிலை குலையச் செய்தது. மயக்கமே வரும் போல் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றி தோற்கடிக்கப்பட்ட உடன்குடி வீரர்களும், மற்றவர்களும் என்னைத் தான் அதிகம் திட்டினார்களாம், “அவன் எப்படியும், ஒடன்குடி வரத்தானே செய்வான், அவனை அங்கே தலையை வெட்டி எடுத்துவிடுவோம்” என்று சவால் விட்டு சென்றார்களாம். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு உடன்குடி பக்கம் போகாதே என்று சொல்ல, எனக்கோ சொல்ல முடியாத அளவுக்கு பயம், வாரந்தோறும் உடன்குடி சந்தைக்கும், அடிக்கடி தேங்காய் எண்ணெய் ஆட்டி எடுக்க, கோப்பரை தேங்காயை உடன்குடிக்கு எடுத்துச் செல்வதும், கிணற்றில் மோட்டார் ரிப்பேர் ஆனாலும் கண்டென்சர் வாங்க உடன்குடி போக வேண்டுமே, என்ன செய்வது என்று பயந்தேன். நாலு, ஐந்து மாதம் உடன்குடி பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செமி பைனல் அருமையாக விளையாடியதற்கு எனக்கு ஆட்ட நாயகன் பரிசு கொடுப்பதாக சொன்னார்கள். பைனல் போட்டியில் வழக்கம் போல் திருநெல்வேலி அணி வந்தார்கள், சின்னபசங்க எங்களைப் பார்த்து கேலி செய்தது மட்டுமல்லாமல் உடன்குடி அணியை ஏமாற்றியதையும் சொல்லி சிரித்தார்கள். எங்களுக்கு இரண்டாவது பரிசு கிடைத்த மகிழ்ச்சி, அதுவே போதும் என்ற நிலையில் பைனலில் திருநெல்வேலி அணியிடம் தோற்று போனோம். முதலில் பேட் செய்த எங்களை 70 ரன்னுக்கும் குறைவில் ஆட்டமிழக்க செய்து, அதை 8 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து விட்டார்கள். ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, அரையிறுதி, இறுதிப் போட்டியின் நாயகனுக்கான பரிசு எல்லாம் இரவில் எங்க ஊர் எம்.எல்.ஏ கையால் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வீட்டில் எங்க அம்மா, மாலையில் 6 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு போக அனுமதி, அதுவும் அவர்கள் வந்தால் மட்டுமே. அன்றைக்கு தான் தேங்காய், பதநீர் திருடும் படலம் நடக்கும் (அடுத்த பதிவில் சொல்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் என்னால் அந்த பரிசை வாங்க முடியவில்லை, அடுத்த நாள் போய் எங்க அணியினரிடம் கேட்டால் அந்த பரிசை சுதாகர் அண்ணா தான் வாங்கினார் என்று சொல்ல, நான் கேட்க, அவர் என்னிடம் இல்லையே என்று சொன்னார்கள். எனக்கு சரியான டென்சன், உடனே “மரியாதையாக யார் கிட்ட இருக்கு என்று சொல்லுங்க, இல்லேன்னா, என் பரிசை வைத்திருப்பவர் குடும்பத்தையே கெட்ட வார்த்தை சொல்லி திட்டப் போறேன்” என்று சொல்லி மிரட்ட, உடனே அந்த எவர்சில்வர் குடம் எனக்கு பரிசாக கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலக்கட்டத்தில் மீண்டும் பல போட்டிகள், அடிதடிகள், தினம் தினம் புதுப் புது அணிகள், புதிய கேப்டன்கள் என்று நிறைய அனுபவங்கள். ஒன்று சொல்ல மறந்துட்டேனே, எந்த அணி என்னை வெட்டுவேன் என்று சொன்னதோ, அதே அணிக்கு 6 மாதம் பின்னர் விளையாடினேன். ஆமாம், ஒரு நாள் உடன்குடி அணியின் ஒரு ஆட்டக்காரர் எங்க ஊர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார், நான் அவரை பார்த்து சிரித்து பேச, அவர் உடனே “நாளை நாங்க திசையன்விளையில் ஒரு போட்டி ஆடப் போகிறோம், நீங்க விளையாட தயாரா” என்று கேட்டார். நான் ஆகா திட்டம் போட்டு சாத்தப் போறாங்க என்று நினைத்தேன். நான் யோசிப்பதை பார்த்த அவர் “நீங்க இன்னமும் பழசை மறக்கவில்லையா, நாங்க எங்கே போனாலும் கப்பு எடுக்கிறோமோ இல்லையோ, தலையை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு தான் வருவோம், அது எல்லாம் சும்ம, பயப்பட வேண்டாம், வரும் போது மெல்கியையும் அழைத்து வாங்க என்றார், நாங்க இருவரும் போய், உடன்குடி அணிக்கு விளையாடி வென்று கொடுத்தோம். அது மறக்க முடியாத சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு +1, +2 வகுப்புகளில் ஆடிய ஆட்டங்கள் ஏராளம். ஒரு முறை காயல்பட்டிணத்தில் ஒரு போட்டி, செய்தி தாளில் பார்த்து தலைமை ஆசிரியரிடம் சொல்லி அனுமதி வாங்கி அணியின் பெயரை சேர்த்தாசு. முதல் போட்டி தூத்துக்குடி பள்ளி அணிக்கு எதிராக, களவாணிப் பயலுக ஆதித்தனார் கல்லூரி படிக்கும் 3 பேரை பள்ளி மாணவர்கள் என்று கொண்டு வந்துட்டானுங்க, நானோ கல்லூரியில் படிக்கும் மெல்கியை அழைத்து போயிருந்தேன், என்னாலும் அவர்களை குற்றம் சொல்ல முடியவில்லை. எங்க அணியில் நன்றாக ஆடும் மனோகர் முந்தைய நாளில் சரக்கு ஏற்றி, படுத்தானாம், கடைசி வரை  மைதானம் வரவில்லை, நல்ல வேளையாக ஆட்டம் பார்க்க எங்க நண்பன் டேனியல் வந்திருந்தான். நான் டாஸ் வென்று பவுலிங்க் எடுக்க, சிமெண்ட் பிட்ச்சில் மேட் போட்டிருந்தார்கள். அது என்னடா என்றால் எக்ஸ்ட்ரா  சுவிங்க் ஆகி வைட், தொடர்ந்து 3 வைட், என் பள்ளி அணியில் என்னை பிடிக்காத வின்ஸி, சோமு, எல்லாம் என்னை கிண்டல் செய்ய, சரியான ஆத்திரம், அடுத்த இரண்டு பந்தில் விக்கெட் வீழ்த்தி, அவனை திட்டு திட்டு என்று திட்டி தீர்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போட்டியில் தோற்று போனோம், ஆனால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று, அதான் சொல்கிறேன். நான் அவுட் ஆகி வர, வரிசையாக விக்கெட் மழை, இன்னும் 2 விக்கெட் இருக்குது  டேனியலை கூப்பிட்டு, நீ ஆட போகிறாயா என்று கேட்க அவனும் ஓகே சொல்லிட்டான், நாங்க இடது காலில் மட்டுமே கால்காப்பு கட்டுவோம், இரண்டு காலில் கட்டுவது இல்லை, நான் வழக்கம் போல் அவனுக்கு இடது காலில் கால்காப்பு கட்டி விட, அங்கே போன அவன், இடதுகை ஆட்டக்காரன் போல் நிற்க, வலது கால், கால்காப்பு இல்லாமல், இடது காலில் கால்காப்பு இருக்க, அம்பயர் முதல் எதிரணி முழுவதும் சிரிக்க, தோற்கும் நிலையில் இருந்த எங்களுக்கும் ஓரே சிரிப்பு, அவனும் அதை வைத்தே ஆடி, அவுட் ஆகி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் வெற்றி பெற்ற போட்டிகளை விட என்னால் தோற்ற போட்டிகள் அதிகம் இருக்கும். போன வேகத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து வந்த போட்டிகள் நிறைய, அது மாதிரி ஒரே ஓவரில் 8, 10 வைட் போட்டு அத்தோடு மைதானம் விட்டு ஓட்டம் எடுத்த போட்டிகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;+2 படிப்பு முடித்ததும், அதற்கு மேல் கல்லூரியில் படிக்க வீட்டு பொருளாதாரம் கையை விரிக்க, என் அண்ணன்கள் (பெரியப்பா மகன்கள்) உதவ, நான் சென்னை மேற்கு மாம்பலம் வந்தேன், அங்கே பனகல் பார்க்கில் பிரையன்ஸ் அண்ட் பிட்ஸ் என்ற தனியார் கணினி கல்விக்கூடத்தில் டிப்ளமோ படித்தேன். அந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் அதிகம் விளையாட முடியவில்லை. ஒரு வருடம் படித்து, உடனே வேலைக்கு தூத்துக்குடி சென்றேன், அங்கேயும் விளையாட முடியவில்லை, பின்னர் வண்ணாரப்பேட்டையில் ஒரு ஷாப்பிங் செண்டரில் மொத்த கணினி துறையை பார்த்துக் கொள்ளும் வேலை, 3 வருடங்கள், அப்போ ஞாயிற்றுக்கிழமைகளில் வண்ணாரப்பேட்டை பார்க், தியாகராய கல்லூரியில், கல்மண்டபம் பகுதியில் விளையாடி இருக்கிறேன், அப்புறம் இங்கே வந்ததும், என் வாழ்க்கையில் நிறைய பரிசுகள், பதக்கங்கள் வாங்கியது, நம்ம தினேஷ் கார்த்திக்குடன் விளையாடியது போன்றவை இங்கே நிகழ்ந்தன, 10 ஆண்டுகள் ஆகியும், இன்றும் தொடர்கிறது.  கிரிக்கெட் நினைவலைகள் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவலைகள் ஓய்வதில்லை ….)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-112953108481631916?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/112953108481631916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=112953108481631916' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112953108481631916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112953108481631916'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2005/10/4.html' title='என் நினைவலைகள் – கிரிக்கெட் (4)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-112842250895709139</id><published>2005-10-04T03:41:00.000-07:00</published><updated>2005-10-04T03:41:48.963-07:00</updated><title type='text'>என் நினைவலைகள் – கிரிக்கெட் (3)</title><content type='html'>என் நினைவலைகள் – கிரிக்கெட் (3)&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரில் கிரிக்கெட் விளையாடுவதை விட வெளியூரில் சென்று விளையாட இருக்கிறோம் என்றால் அதற்கு முந்தைய இரவில் தூக்கமே வராது, எப்போடா விடியும் என்று தோணும். ஒருவழியாக விடிந்தப் பின்பு அம்மாவிடம் கையை பிடித்து, காலைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி, முதல் ஆளாக பஜாரில் போய் நிற்பேன், ஒவ்வொருவராக வர வர சந்தோசம் கூடும். 10 கிலோமீட்டருக்குள் அமைந்த ஊர் என்றால் சைக்கிளில் செல்வோம் அல்லது பஸ் தான். ஒரு போட்டிக்கு குறைந்தது 20 பேர் செல்வோம், ஆனால் பஸ்ஸில் எடுப்பதோ 8 அல்லது 10 டிக்கெட் தான், கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று முன்பக்கம் வந்தால் டிக்கெட் எடுக்காதவங்க பின்பக்கம் போய் ஏறிக் கொள்வோம், பின்பக்கம் வந்தால் முன்பக்கம், தனியார் வண்டியில் ஏறுவது இல்லை காரணம், இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்களே!.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸில் போகும் போது படபடக்கும், டிக்கெட் கூட பரவாயில்லை, நம்ம பசங்க வண்டியில் கையை, காலை வச்சிகிட்டு சும்ம வரணுமே. கிண்டல், பாட்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக போய் வருவோம். வெற்றி, தோல்வி எல்லாம் எங்களை பாதிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க வாராவாரம் கிரிக்கெட் விளையாட போவது பூச்சிக்காடு என்ற ஊர், சைக்கிளில் செல்வோம், அங்கே இருந்த குளத்தில் தான் கிரிக்கெட் விளையாடுவோம், நல்லா புல் முளைத்திருக்கும், அங்கே தான் நான் பாய்ந்து பாய்ந்து விழுந்து பந்தை தடுப்பேன், அடியே படாது. அங்கே மாதவன் என்ற அருமையான பேட்ஸ்மேன், டிவிசன் போட்டிகளில் விளையாடியவர், அவருக்கு என்னைக் கண்டாலே அலர்ஜி, அருமையாக விளையாடுவார், எங்க சீனியர்கள் பந்து வீசி முடித்தப் பின்பு 4வது பந்து வீச்சாளராக நான் வருவேன், அதற்குள் அவர் 40 அல்லது 50 ரன்கள் சேகரித்து விடுவார், நான் போட்ட முதல் ஓவரிலேயே அவுட் ஆகி விடுவார். ஒரு மாதிரியா என்னை பார்த்து விட்டு போவார். இதை ஒருவழியாக கண்டுபிடித்த என் அணித்தலைவர் ரவிகுமார் என்னை 5 அல்லது 6வது ஓவரிலேயே பந்து வீச அழைப்பார், நானும் வருவேன், மாதவன் விக்கெட்டை எடுப்பேன், மீண்டும் பீல்டிங்க் செய்ய போய் விடுவேன், ஏனென்றால் மத்தவங்க சாத்தி புடுவாங்க. இறுதிக்கட்டத்தில் பந்து வீச சந்தர்ப்பம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டிங்க் எடுத்துக் கொண்டால் எனக்கு 5 அல்லது 6 வரிசையில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் 10 ஓவருக்குள்ளேயே பேட்டிங்க் செய்து விடுவேன், எங்க முன்னணி ஆட்டக்காரர்கள் வெகு விரைவில் அவுட் ஆகி விடுவாங்க, அப்புறம், நானும் மத்தவங்களும் டொக்கு போட்டு 25 அல்லது 30 ஓவர்கள் வரை நின்று ஆடி விடுவோம். எனக்கு கபில் மாதிர் பேயாட்டம் ஆட ஆசை, ஒரு பந்தை ஆசைப்பட்டு ஓங்கி அடித்து அது 4 போனாலும், அங்கே கேப்டன் ஏதாவது சொல்லி திட்டுவார், மொவனோ அவுட் ஆகி மட்டும் வா, குளத்திலேயே முக்கி விடுவேன் என்பார், ஏதோ அவர் 50 அடித்த மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளில் பாஸ்கர் அண்ணா கேப்டன் ஆனார், அதன்பின்பு எனக்கு அணியில் தனி மரியாதை, அவர் என்னை வலதுகரம் போல் பாவித்தார். நல்ல ஆட்டக்காரர், நிறைய நுணுக்கங்களை பந்து வீச்சில் சொல்லிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஒரு நாள் ஜெயராஜ் அண்ணா, சுதாகர் அண்ணா, சார்லஸ் அண்ணா (சீனியர்) ஜோசப் அண்ணா எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது நாம ஏன் டோர்ணமெண்ட் நடத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டோம், உடனே எல்லோரும் சரி நடத்தலாம் என்றதும், கையில் ஒரு 50 பக்க நோட்டை எடுத்தாச்சு, மொத ஆளாக டாக்டர் மாமா தம்பிராஜை போய் பார்த்தோம், அவர்கள் ரொம்ப மகிழ்ச்சியாக 500 ரூபாய் முதல் பரிசாக கொடுப்பதாக சொன்னாங்க, அடுத்தது பஞ்சாயத்து தலைவர் பாண்டியன் 250 ரூபாய் இரண்டாவது பரிசு, அதிமுக செயலாளர் தொடர் ஆட்டக்காரர் விருதை கொடுத்து உதவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பஜாரில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, 5, 10ம், திட்டும் வாங்கி ஒரு 200 ரூபாய் தேத்திட்டோம். உடனே அனைத்து ஊருக்கும் சொல்லி அனுப்பியாச்சி, அணியின் நுழைவுக்கட்டணம் 50 ரூபாய், மொத்தம் 8 அணிகள். நாக் அவுட் போட்டி என்று சொல்லியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;டோர்ணமெண்ட் நடத்தும் அளவுக்கு மைதானம் ஊருக்கு வெளியே தேரியில் தான் இருந்தது, அங்கே போய் மாட்டு வண்டி வைத்து வண்ணாங்குளத்தில்  களிமண் வெட்டி கொண்டு வந்து கொட்டி, ரோலர் போட்டு அருமையான மைதானம் உருவாக்கினோம். மைக் செட், தண்ணீர் பந்தல் என்று அருமையாக தயார் செய்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரு அணி, உடன்குடி, மெஞ்ஞானபுரம், பூச்சிக்காடு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி, நாசரேத் அணி, திருநெல்வேலி அணி இப்படியாக 8 அணிகள். நாங்க எளிதாக வெற்றிக் கொள்ளும் அணியை எங்களுக்கு எதிராகப் போட்டு செமி-பைனல் வந்தாச்சு, அதில் வெற்றிப் பெற்றால் குறைந்த பரிசான ரூபாய் 250 கிடைக்கும், பேட், கால்காப்பு எல்லாம் வாங்கலாமென்று திட்டம் போட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஆட்டத்தில் எங்க பெரியம்மா பையன் ஜெகன் அண்ணா அருமையாக ஆட மெஞ்ஞான புரம் அணியை வென்றோம். செமி பைனலில் திருநெல்வேலி அணி, அதில் ரமணி என்ற ஒரு ஆட்டக்காரர், மிக அற்புதமாக ஆடினார், நான் அவர் ஆட்டத்தை மிகவும் ரசித்தேன், எங்க அணியை போட்டு துவைத்து எடுத்திட்டார். 30 ஓவரில் 220 ரன்கள். ரமணி மட்டுமே 80 ரன்களுக்கு மேல், நல்ல வேளை நான் பந்து வீசும் முன்பே அவுட் ஆகிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எங்க மக்கா, விளையாட போனால், நம்ம கங்குலி மாதிரி போன வேகம் தெரியாம வெளியே வந்து, சர்பத் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க, ஏதோ 50 அடித்த களைப்பு மாதிரி.  மேட்ச் பார்கக் வந்த பெரியவங்க எல்லாம் எங்க அணியின் முண்ணனி ஆட்டக்காரர்களான ஜெகன், சுதாகர், பாஸ்கர், ஆண்ட்ரூ, மெல்கி, மூர்த்தி எல்லோரையும் கன்னாபின்னா என்று திட்டத் தொடங்கிட்டாங்க. அப்புறமா நான் இறங்கும் போது ஒரு ரன் எடுத்தாலே அது நமக்கு பெருமை தான் என்று நினைத்தேன்.  நானும் சார்லஸீம் கட்டை போட்டு, திருநெல்வேலி அணியை கடுப்பேற்றி விட்டோம், 15 ஓவர்கள் வரை தாக்கு பிடித்தோம், அதில் நான் இரண்டு சிக்ஸர் தூக்கி விட, எங்க மக்களுக்கு ஒரே கொண்டாட்டம். செமி பைனலில் தோற்றதும், பைனலில் திருநெல்வேலி அணி வெற்றி பெற்று சுழல் கோப்பை தூக்கியது. ரமணி தொடர் நாயகன் பட்டம் வென்றார், அவரோடு கை குலுக்கியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை சாத்தான்குளத்தில் கிரிக்கெட் விளையாட என்னை உடன்குடி பள்ளி அணி சிறப்பு ஆட்டக்காரராக அழைத்தார்கள். நாங்களும் பக்கத்து ஊரில் நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்களை அழைத்துக் கொள்வோம். அப்படி சென்ற போது அந்த போட்டியானது 10 வரை படிக்கும் மாணவர்களுக்கானது, என்னைப் பார்த்ததும், என்னை விளையாட அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காரணம் கேட்டதற்கு கல்லூரி மாணவன் இப்போட்டியில் விளையாட முடியாது என்று சொல்ல, நாங்க நான் 9வது தான் படிக்கிறேன் என்று சொல்ல, அவர்கள் நம்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை எப்படி நம்ப வைத்தேன் தெரியுமா, ஒரு வாரத்திற்கு முன்பு தேர்வு எழுதிய கேள்வி, பதில்களை ஒன்று விடாமல் சொல்லி, நான் 9வது வகுப்பு தான் படிக்கிறேன் என்பதை நிறுபித்தேன். போட்டியில் நான் போட்ட முதல் பந்திலெயே விக்கெட் எகிற, மீண்டும் பிரச்சனை, ஒருவழியாக சமாளித்து வென்று, பரிசை வாங்கி வந்தோம். அவ்வாறு பரிசு வாங்கினால், ஹோட்டலில் பரோட்டாவும், சால்னாவும் வாங்கி கொடுப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நேரங்களில் பள்ளியில் விளையாடும் போது, மாணவிகளை கவர சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு, கிளின்போல்ட் ஆனது பலமுறை. தெருவில் விளளயாடும் போது வரவங்க போறவங்க மேலே அடிபட, பேட்டை தூக்கிப் போட்டு ஓடியதுண்டு, சில நேரங்களில் லாரியில் பந்து விழ, லாரி ஓட, நாங்க பந்தை எடுக்க சைக்கிளில் லாரியை விரட்டியதுண்டு. சில நேரம் மத்த அணியிடம் விளையாடும் போது அவர்களது பந்துக்களை சுட்டுக் கொண்டு வந்து விடுவோம்,அதற்கு என்று சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தான் ஒரு முறை திருச்செந்தூர் ஹாஸ்டல் அணியுடன் கிரிக்கெட் போட்டி, எப்போவும் இல்லாமல் அன்றைக்கு பார்த்து சுதாகர் அண்ணா லுங்கி கட்டி வந்தார், அப்புறம் பேட்டிங்க் செய்ய போய் சரியான அடி வாங்கி, பெரிய மரம் சாய்ந்து விழுந்த மாதிரி கீழே விழுந்தார், அப்புறம் மீண்டும் லுங்கியை கட்டிக் கொண்டு நடகக் முடியாமல் நடந்து சீக்கிரம் மைதானத்தை விட்டு வெளியே போயிட்டார். மாலையில் அவர் வீட்டுக்கு போனால் புத்தம் புது எஸ்.எஸ் பேட், எப்போ அண்ணா வாங்கினீங்கன்னு கேட்டா, எப்படி சுட்டேன் என்று கேளுடா என்று சொன்னார், அப்புறம் தான் தெரியும் அது காலை போட்டியில் சுட்ட புது பேட், அதை தான் லுங்கியில் வைத்து மறைத்து கொண்டு வந்திருக்கிறார். இப்படி நிறைய கதைகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் என்னுடைய கிரிக்கெட் வெறி அடங்காமல் போக, அடிக்கடி அடி பட்டு வர, அதைக் கண்ட அம்மா பயந்து, என்னை விளையாட விடமாட்டேன் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். நானும் என் அம்மாவிடம் நூலகம் செல்கிறேன், தேவகுமார் வீட்டிற்கு செல்கிறேன், ஸ்பெஷல் கிளாஸ் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, கிரிக்கெட் விளையாட போய் விடுவேன். நான் விளையாட போனது எப்படியாவது என் அம்மாவுக்கு தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் போறவங்க சும்மா இருக்காம, என் பெயரைச் சொல்லி, அடிச்சான் பாரு ஒரு சிக்ஸர் சூப்பர் சிக்ஸர்பா, ஓடி போய் ஒரு கேட்ச் எடுத்தான் பாரு, அருமை என்று சொல்ல, என் அம்மாவோ என்னை ஆரத்தி எடுத்து வரவேற்க தயாராக இருப்பாங்க. 7வது வகுப்புக்கு மேல் அம்மா என்னை அடிப்பதை நிறுத்திட்டாங்க (எருமைமாடு மாதிரி சொரணை இல்லாதது ஒரு காரணம்). என் கிட்ட பேசவே மாட்டாங்க, அது எனக்கு பெரிய தண்டனையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிலையில் 10வது படிக்கும் போது அம்மா என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டாங்க, இனிமேல் கிரிக்கெட் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என்று அவர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்ய சொல்ல, நான் செய்த சத்தியத்தை 6 மாதங்களுக்கு மேல் கடை பிடித்தேன், என் சத்தியத்தை என் அம்மாவே வாபஸ் வாங்கிய கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவலைகள் ஓய்வதில்லை ….)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-112842250895709139?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/112842250895709139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=112842250895709139' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112842250895709139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112842250895709139'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2005/10/3.html' title='என் நினைவலைகள் – கிரிக்கெட் (3)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-112825042053818222</id><published>2005-10-02T03:52:00.000-07:00</published><updated>2005-10-04T03:37:41.706-07:00</updated><title type='text'>என் நினைவலைகள் – கிரிக்கெட் (2)</title><content type='html'>(நண்பர்களே! என் நினைவலைகள் வாயிலாக என் வாழ்க்கையில் நடந்த அனைத்து சுவாரஸ்யமான விசயங்களை சொல்ல இருக்கிறேன், முதலில் கிரிக்கெட், கபாடி, இப்படி அனைத்து விளையாட்டுகளை சொல்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் நினைவலைகள் – கிரிக்கெட் (2)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ எங்க அணியைப் பற்றி சொல்கிறேன், எங்க தெருவில் இரு குருப், ஒன்று மூர்த்தி அண்ணா தலைமையில், அடுத்தது பிர்லா போஸ் அண்ணாவின் தலைமையில். பிர்லா போஸ் அண்ணாவும், அணியினரும் எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் அஜிதா நர்சரி பள்ளியின் பின்புறம் விளையாடுவோம், அருகிலேயே எங்க சித்தப்பாவின் தோட்டம் உண்டு. ஒரு பிரச்சனையும் இருக்காது, பந்து மட்டும் அடிக்கடி ஏதாவது மரத்தில் மாட்டிக் கொள்ளுங்க, அதை எடுக்க எறிந்த செறுப்புகள் மாட்டி, அதை எடுக்க பட்டப்பாடுகள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;பிர்லா போஸ் அண்ணாவின் அணியில் குறைந்த ஆட்டக்காரர்கள் தான், ஒரு பிரச்சனையும் கிடையாது, எல்லோருக்கும் சம வாய்ப்பு, மரியாதை, ஆனால் தினமும் விளையாட மாட்டோம் அது தான் பிரச்சனை. போஸ் அண்ணா கிரிக்கெட் நுணுக்கங்களை பொறுமையாக சொல்லிக் கொடுப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மூர்த்தி அண்ணாவின் அணி அப்படியே எதிர்மறை, எக்கச்சக்கமான ஆட்டக்காரர்கள், முரட்டு ஆட்டக்காரர்கள், வந்தோர் போனோர் எல்லாம் ஆட்டக்காரர்கள், தெருவில், ரோட்டில், வீட்டில், எங்கேயாவது 10 மீட்டர் இடம் கிடைத்தால் அதில் விளையாடுவார்கள். அதில் அதிக அதிகாரம் மூர்த்தி அண்ணாவுக்கு, அடுத்தது குருஸ் பெண்டாண்டஸ் அவன் அடிக்கடி பந்து வாங்கி கொடுப்பான் (அவங்க அப்பா கப்பலில் வேலை செய்தார்), அப்புறம் சார்லஸ், அவனிடம் ஒரு உண்மையான பேட் இருந்தது. அவர்கள் மூவரும் களைத்துப் போனால் தான் மற்றவர்களுக்கு பேட்டிங்க் கிடைக்கும். சார்லஸ் மட்டை போட்டால் கவாஸ்கர் தோற்றுவிடுவார், அதனால் அவனுக்கு கவாஸ்கர் என்று பெயர். நான் எப்படியும் கபில்தேவ் என்ற பெயரை வாங்க வேண்டும் என்ற வெறி, அதுக்கு முதல் போட்டி மூர்த்தி அண்ணா தான். அவரை முந்த வேண்டும் என்ற வெறி, பொறாமை மனதில் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நான் பந்து வீச பழக ஆரம்பித்தேன், எனக்கு ஒரு குறை என்னுடைய இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டச் சொன்னால் அது நேர்க்கோட்டில் இராமல் வளைந்து போய் நிற்கும், என்னை கோணக்கையன் என்பார்கள். நான் முதலில் ஸ்பின் போட்டேன், அப்போ நான் துரோ செய்கிறேன் (அப்போவே எங்க மக்க இத்தனை டிகிரியில் தான் வீச வேண்டும் என்று சட்டம் போட்டிருந்தார்கள்) என்றார்கள். அப்போ துரோ செய்வது தெரியாமல் இருக்க வேகப்பந்து போட ஆரம்பித்தேன். அப்போவும் துரோ என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/monkeyjump.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேகமாக ஓடி வந்து, குரங்கு மாதிரி குதித்து போடுவேனா, மக்களுக்கு என் கையை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். என் கையை நேராக்க என் தம்பியை மிதிக்கச் சொல்வேன், அம்மாவிடம் ஏன் என் கை இப்படி வளைந்து போய் இருக்குது என்பேன், அதற்கு தாயைப் போல பிள்ளை என்று அவரது கையை காட்டுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என் கையை நன்றாக சுத்த, வீட்டில் சும்மா இருக்கும் போது எல்லாம் பந்து வீசுவது போல் வீசிக் கொண்டிருப்பேன், வெள்ளாளன் விளையில் பிஷப் அசரியா பள்ளியில் படிக்க 3 கிலோமீட்டர் நடக்க வேண்டும், அப்படி செல்லும் போது ரோட்டில் கிடைக்கும் கருங்கல், கொமட்டிக்காய், பனங்கொட்டை எல்லாம் எடுத்து வீசிக் கொண்டே செல்வேன். என் புத்தகமூட்டையை என் தம்பி முதுகில் ஏற்றி, அவனை ஏதாவது ஒரு சைக்கிளில் கெஞ்சி, கூத்தாடி ஏத்தி அனுப்பி விடுவேன். சில சமயம் நான் வீசும் கருங்கல் பந்து ரோட்டில் போற சைக்கிளை தாக்க, அவங்க விரட்டி விரட்டி அடித்தது எல்லாம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக வெறித்தனமாக பவுலிங்க் தான் முக்கியம் என்று எந்த நேரமும் பந்து வீசுவதிலேயே இருந்தேன். சில சமயம் மூர்த்தி அண்ணா என்னை ஏமாற்றி தொடர்ந்து மணிக்கணக்கில் பந்து வீச வைத்து, அவர் காய்ச்சு காய்ச்சுவார். நானும் ஏமாளி போல் பந்து வீசி, பேட்டிங்க் பண்ண வந்தால், நேரமாகிவிட்டது, மாலையில் விளையாடலாம், நீ தான் முதலில் பேட் செய்வாய் என்று அல்வா கொடுத்த நாட்கள் எண்ணிக்கையில் அடங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக நான் தொடர்ந்து பந்து வீசி, மூர்த்தி அண்ணாவுக்கு அடுத்து பந்து வீசும் பந்து வீச்சாளர் ஆனேன், சில நேரம் அவரை விட நான் அதிக விக்கெட்களை வீழ்த்தினால் அன்று முழுவதும் என்னை ஏதாவது சொல்லி கடுப்பேத்துவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக நான் எங்க ஊரில் மாணவப்பருவத்தில் பந்துவீச்சாளனாக அடையாளம் காணப்பட்டேன். பின்னர் வெள்ளாளன் விளையில் பள்ளி நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் அணியை தொடங்கினேன், அதே அணியை நான் தலைமை தாங்கி, என் சொந்த/மூர்த்தி அண்ணாவின் அணியை தோற்கடித்து மகிழ்ந்தேன். அப்போ அங்கே தேவ ஆசிர்வாதம், இம்மானுவேல், மெல்கி, தங்கதுரை, நைனார், சேகர், சித்திரைக்குமார், ஐசக், கிருஷ்ணகுமார், குமரன் ஒரு அணியை தொடங்கியாச்சு. 8ம் வகுப்பு எங்க அணி 12வது வகுப்பு மாணவ அணியையே தோற்கடித்து பிரமிப்பு உண்டாக்கினோம், ஆசிரியர்கள் எல்லாம் உலக நிலைமை புரியாமல் நீ கண்டிப்பாக இந்தியாவுக்காக ஆடுவாய் என்று சொல்ல, நானோ தினமும் கனவில் மிதந்தேன், பஸ் ஏறி தூத்துக்குடி போகத் தெரியாத நான், டெல்லிக்கு போவது போல் கனவு கண்டேன், என் குரு கபில்தேவுடன் சேர்ந்து கடைசி ஓவரில் இம்ரான் கானின் 6 பந்தையும் சிக்ஸர் அடித்து கோப்பை வாங்குவது போல் கனவுகள் அடிக்கடி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரில் ஒருவழியாக ரப்பர் பந்தை விட்டு, கிரிக்கெட் பந்தில் விளையாடும் நிலைக்கு வந்தேன், நான் எட்டாவது படிக்கும் போதே கல்லூரி மாணவர்கள் அணியில் விளையாடத் தொடங்கினேன், நான் தான் போர்ட் கருப்பட்டி, அதாவது கடைக்குட்டி. பந்து பொறுக்குதல், தண்ணீர் கொண்டு போய் கொடுப்பது, பேட்ஸ்மேனுக்கு கால்காப்பு கட்டி விடுவது, பந்து கிழிந்து போனால் போய் தைத்து வருவது, போட்டி முடிந்ததும் ஸ்டெம்ப் மூட்டைகளை தூக்கி வருவது, போட்டியில் ஸ்கோர் போடுவது எல்லாம் எனது வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கிரிக்கெட் பந்தை கண்டால் கொஞ்சம் பயமுண்டு, எங்க ஊரு மாக்கான் (தடி) பந்து வீச்சாளர்கள் மத்தவங்க உடம்பை பதம் பார்த்தது கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க கிரிக்கெட் பந்தில் விளையாடும் மைதானம் எங்க ஊர் நூலகத்தின் பின்னால் இருந்தது, சாப்பிட்டு விட்டு 3 மணிக்கே நூலகத்தின் முன்னால் இருக்கும் கிணற்றின் மேல் அமர்ந்திருப்பேன், நூலகம் திறந்தால் அங்கே போய் பத்திரிக்கைகள் படிப்பேன் (அங்கே தான் புத்தகம் படிக்கும் ஆவல் தொடங்கியது), ஒவ்வொருத்தராக வர வர மகிழ்ச்சியாகி கிரிக்கெட் மைதானம் செல்வேன், அங்கே சென்ற காலத்தில் தான்  என்னுயிர் நண்பன் தேவகுமாரை சந்திக்கவும், பேசவும், பழகவும், உருகவும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் பந்தில் விளையாட சென்ற போது அங்கே மூர்த்தி அண்ணாவுக்கு பதில் ரவிகுமார் என்ற எங்க ஊரு கல்லூரி அணித் தலைவர் எனக்கு எமன் ஆனார். முதலில் அவருக்கு வடக்குத் தெரு ஆள் என்பதால் பிடிக்காது, இரண்டாவது என்னுடைய பந்து வீச்சு. பாவம் மனுசன் சில நேரம் என்னை பந்து வீச சொல்லி பேட்டிங் செய்யலாம் என்று நினைப்பார், நானோ அவரை போல்ட் செய்து விடுவேன், உடனே சுதாகர் அண்ணா, மதி அண்ணா, பாஸ்கர் அண்ணா எல்லோரும் அவரை கிண்டல் செய்ய அவருக்கு என் மீது கடுப்பு கூடும். உடனே ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லி, என்னை மீண்டும் பந்து வீசச் சொல்லுவார், என் கெட்ட நேரம் அடுத்த பந்திலும் அவர் போல்ட், இப்படி ஓவருக்கு இரண்டு முறை போல்ட் ஆகி விடுவதால் என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது. மேலும் அவர் தன் கடுப்பை தீர்க்க, எல்லோரும் விளையாடிய பின்பு கொஞ்சம் இருட்டத் தொடங்கும் நேரம், தம்பி  நீ வா, பேட்டிங் செய்ய வா என்று அண்ணாவைப் போல அன்பாக அழைப்பார், என்னை கால்காப்பு கட்டவும் விட மாட்டார், சீக்கிரம் வா, நேரமில்லை, 2 ஓவர் விளையாடு என்று கூறி, என் காலை குறிவைத்து பந்து வீசுவார், நானோ பெரிய மட்டையின் பின்னால் ஒளிந்துக் கொள்வேன், என்னுடைய மகா கெட்ட நேரம், அது மட்டையில் பந்து வீக்கெட் கீப்பரை தாண்டி 4 ரன்கள் போக, அவருக்கு இன்னமும் சூடு ஏறி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீச ஓடி வருவார், சில நேரம் பேட்டை போட்டு விட்டு ஓடியும் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/fastbowler.gif" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக இருக்க ஒரு நாள் புத்தம் புது பந்து பளபளக்க, சும்மா இருந்த என்னை வா, பேட்டிங் பண்ணு என்று சொல்ல, சதி விளையாட, விதி சிரிக்க, நானோ வழக்கம் போல் மட்டையை நேராக தூக்கி பிடிக்க, அவர் வீசியதோ சரியான யார்க்கர், அது என் கால் பாதத்தின் நடுவிலும், எலும்புகள் சேரும் இடத்தில் குறி வைத்து தாக்க, அவ்வளவு தான் என்னட அம்மே என்று ஒரு சுத்து சுத்தி விழுந்தேன், அவ்வளவு தான் தெரியும், அடுத்து விவேக் மாதிரி நான் எங்கே இருக்கேன் என்று கேட்க, எதிரே ஊசியோடு டாக்டர் மாமா தம்பிராஜ் நிற்க, கண்ணீரோடு அம்மா.  ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்தேன், அதன் பின்பு கிரிக்கெட் பக்கம் ஒரு மாதம் வரை தலைவைத்து படுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் மனதில் இருக்கும் கிரிக்கெட் மிருகம் விழித்துக் கொள்ள, மீண்டும் மைதானம் சென்றேன், அங்கே ரவிகுமார் அண்ணனை பார்த்து, உலகில் இருக்கும் அத்தனை கெட்டவார்த்தைகளையும் மனதுக்குள் திட்டி தீர்த்துக் கொண்டேன், பின்ன, நேரில் திட்டி, அடுத்து மண்டையை உடைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு நான் கால்காப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு பந்தையும் மிகவும் கூர்ந்து கவனமாக கவனித்து, அவசரப்படாமல் விளையாடத் தொடங்கினேன், குறிப்பாக ரவிகுமார் அண்ணன் பந்தில் மட்டும் அவுட் ஆகக்கூடாது என்ற வெறி. அந்த காலக்கட்டத்தில் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக என்னை தயார் செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ எங்க ஊர் மாயாண்டி சுவாமி கோயில்கொடையில் பிர்லா போஸ் அண்ணா தன் செலவில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தினார்கள். நான் ஒரு அணித்தலைவன், மூர்த்தி அண்ணா ஒரு அணித்தலைவர், அவர் அணியில் எல்லாம் நல்ல ஆட்டக்காரர்கள். என் பக்கம் எல்லாம் சின்ன பசங்க, ஆனால் நல்ல பசங்க.&lt;br /&gt;&lt;br /&gt;1983 உலககோப்பை கபில்தேவ் அணி வென்ற மாதிரி எங்க அணி அபார வெற்றி, அதில் என்னுடைய பங்கை மறக்க முடியாது 24 ரன்கள் அதில் 4 பவுண்டரிகள். 4 ஓவர் வீசி 3 மெய்டன், 4 விக்கெட், 1 ரன். எனக்கு சிறந்த ஆட்டக்காரர் பரிசு, அது ஒரு எவர் சில்வர் தட்டு, அதை விம்பிள்டனில் கொடுப்பது போல் கொடுத்தார் பிர்லா போஸ் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;ரப்பர் பந்தில் எனக்கு ஆசான் பிர்லா போஸ் அண்ணா என்றால் கிரிக்கெட் பந்திற்கு ஆசான் ஜெயராஜ் அண்ணன். அவர் எங்க ஊரில் தட்டச்சு, ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார்கள், அவரிடம் ஆர்டர் கொடுக்க வருபவர்கள் கிரிக்கெட் மைதானம் தான் வரவேண்டும், நாள் முழுவதும் அங்கே தான் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/peoplewatching.gif" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்க பள்ளியில் எங்க வகுப்பிற்கும், சார்லஸ் (1 வருடம் சீனியர்) அணிக்கும் வெள்ளாளன் விளை சர்ச் அருகில் போட்டி நடந்தது, அதில் நான் அபாரமாக விளையாடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்து எங்க அணி வெற்றி பெற்றது, முதன் முறையாக ஊர் மக்கள் முன்னாடி விளையாடியது அதிக சந்தோசம் கொடுத்தது. சிறந்த வீரர் பரிசை ஜெயராஜ் அண்ணா கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு எக்கச்சக்கமான போட்டிகள், சீறுடையார் புரம் என்ற ஊரில் இரண்டு இன்னிங்க்ஸ் கொண்ட போட்டியில் நாங்க முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் சேர்த்தோம், எதிரணி முதல் இன்னிங்க்ஸில் 30க்கும் குறைவு, இரண்டாவது இன்னிங்க்ஸில் 50 ரன்கள் வரை எடுத்து ஆட்டம் இழந்தது, அந்த போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்கள் கிடைத்தது, மொத்தம் 15 விக்கெட்கள் மேல், அதை எங்க பள்ளிப் பருவ சாதனையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க எங்க ஊர் மட்டுமல்லாது பக்கத்து ஊரில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமதான் விழாக் காலத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்துக் கொண்டோம். அப்படி அடுத்த ஊரில் போய் விளையாடுவது திரில்லாக இருக்கும். திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆலந்தலை, உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், தூத்துக்குடி, காயல்பட்டிணம் இப்படி சுற்று வட்டாரத்தில் அனைத்து ஊர்களுக்கும் போய் விளையாடி இருக்கிறேன். பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் போய் வந்த கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவலைகள் ஓய்வதில்லை ….)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-112825042053818222?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/112825042053818222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=112825042053818222' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112825042053818222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112825042053818222'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2005/10/2.html' title='என் நினைவலைகள் – கிரிக்கெட் (2)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-112823846100867472</id><published>2005-10-02T00:24:00.000-07:00</published><updated>2005-10-02T00:34:21.020-07:00</updated><title type='text'>என் நினைவலைகள் – கிரிக்கெட்</title><content type='html'>என் நினைவலைகள் – கிரிக்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் என்னை உயர்த்தியது எவ்வளவோ அதை விட பல மடங்கு கீழே தள்ளியது, ஆனாலும் என்னால் கிரிக்கெட்டை விட முடியவில்லை, அது இரத்தத்தில் ஊறி போயிட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/villagecricket.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;6ம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என்று தெரியாது. முதன் முதலில் கிரிக்கெட்டைப் பற்றி மற்றவர் பேசக் கேட்டது எப்போ என்றால் நம்ம முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன் அவர்கள், தான் அறிமுகம் ஆன முதல் மூன்று டெஸ்ட்களில் சதம் அடித்து உலக சாதனை படைத்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ எங்க பஜார் தெருவில் இருக்கும் மூர்த்தி என்ற ஒரு அண்ணன் (4 வயது மூத்தவர்) தினமலர் படித்து விட்டு “டேய், நேத்து நம்ம அசாருதீன் சென்சுரி அடித்தாண்டா” என்பார்” எனக்கு சென்சுரி, பிப்டி, ரன், விக்கெட், ரன் அவுட், இப்படி பல ஆங்கில/கிரிக்கெட் வார்த்தைகளை கற்றுக் கொடுத்த குரு அவர். தினமும் அவரை கேள்வி கேட்டு நோண்டுவேன், சில சமயம் மனுசன் வெறுத்து ஓடியே போய்விடுவார், திட்டியும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/kapilazar.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;அப்போ தான் இந்திய அணி இலங்கை சென்றது, எங்க ஊருக்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவையும், இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையும் தெரியத் தொடங்கியது (தொலைக்காட்சி எங்க ஊரில் 3 பேர் வீட்டில் தான் இருந்தது, எங்க குவைத் சித்தப்பா, பஞ்சாயத்து தலைவர்/ தாத்தா வி.வி. பெருமாள், எங்க தெரு ராஜா அண்ணன்,&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க கிரிக்கெட் பார்க்க கூடுவது பெருமாள் தாத்தா வீட்டில் தான்,  ஜெயக்குமார் மாமாவுக்கு கிரிக்கெட் ரொம்பவும் பிடிக்கும், நாங்க எல்லோரும் அங்கே கூடி கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்போம், சில நேரங்களில் புள்ளி புள்ளியாக அடிக்கும், ஆனாலும் நாங்க ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்போம். காற்று அடித்தால் தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகிவிட்டால், உடனே வானொலியைத் தேடி ஓடுவோம், அங்கே சார் ரன் கேலியே என்பதை கேட்டது, என்னப்பா சொல்றான் என்று ஒரு பெரியவர் கேட்க, அது ஒன்னும் இல்லை, சொல்லுபவருடைய சாரங் (லுங்கி) கிழிந்து விட்டதாம் என்று கிண்டல் செய்வோம். அப்போ எல்லாம் ஹிந்தியில் பச்சாஜ்,  தஸ் ரன், சடுக்கா, ஓகயா என்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டு ஒன்றுமே புரியாமல் விழித்திருக்கிறோம், எத்தனை ரன் என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் தத்தளித்ததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ தான் ஒரு போட்டியில் இலங்கை அணியினர் நாம் வெற்றி பெற இருந்த நிலையில் வெளிச்சம் இல்லை என்று சொல்லி போட்டியை நிறுத்த, நாங்க மொத்த சிங்களவர்களையும் திட்ட, அதை மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மாதிரி மறக்க முடியாத போட்டி கடைசி பந்தில் சேட்டனின் பந்தில் மியாண்டட் சிக்ஸர் அடிக்க, எளவு வீட்டுக்கு போய் வந்தவங்க மாதிரி நாங்க இருக்க, அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, சோறு தண்ணீ இறங்க வில்லை, இரவு முழுவதும் அழுது இருக்கிறேன். பல நாட்கள் கனவில் நான் பந்து வீசி மியாண்ட் மண்டையை உடைத்து, கடைசி பந்தில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக தொலைக்காட்சியில் பார்த்து பார்த்து கிரிக்கெட் மேல் வெறி வர, சிறுவர்கள் அனைவரும் மூர்த்தி அண்ணாவின் தலைமையில் ஒரு கிரிக்கெட் அணியை தோற்றுவித்தோம், அதுவே என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலத்தில் நாங்க தென்னை மட்டையையும், பனை மட்டையையும் அழகாக செதுக்கி மட்டை உருவாக்குவோம், தென்னை மட்டை உடனே உடைந்து விடும், அதற்காக அகலமான பனை மட்டையை தேடி அதில் அழகாக செதுக்கி, அதற்கு சைக்கிள் டயரை குட்டி குட்டியாக வெட்டி கைப்பிடியில் மாட்டி, அதை பெருமையாக (எமனின் கதை மாதிரி) தோளில் தூக்கி அழைவதில் தனி மகிழ்ச்சி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வசதி படைத்த பசங்க பைசா கொடுக்க ரப்பர் பந்து வாங்குவோம், சில பந்துகள் பல மாதங்கள் எங்க மரண அடி தாங்கும், சில பந்துகள் ஒரே அடியில் கைலாய மோட்சம் அடையும், அதற்கு துக்கம் தெரிவித்து நாங்க அழுததை நினைத்தால் சிரிப்பு தான் வரும். அந்த பந்தை வாங்கி வந்தவனின் முதுகில் டின் கட்டி விடுவோம். அதன் பின்பு நான் தான் பர்சேசிங் மேனேஜர், எங்க மாமா கடைக்கு போய் கேரண்டி, வாரண்டி எல்லாம் கேட்டு வாங்கி, ஒரு பந்து வாங்க கடையில் இருக்கும் அத்தனை பந்தையும் தரையில் தூக்கிப் போட்டு, நல்ல பந்தை கண்டுபிடித்து வாங்கி வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ தான் சென்னையில் இருந்து வந்த ஒரு நண்பன் சொன்னான், ரப்பர் பந்து வாங்கியதும் அதில் ஊசி வைத்து ஒரு சின்ன துளை போட்டு விட்டால் பந்து என்ன அடி அடித்தாலும் தாங்கும் என்று சொல்ல, அவனை நாங்க கடவுள் மாதிரி பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/villageboy.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;பந்து கிடைக்காத நேரத்தில் கொமட்டிக்காய், பனங்கொட்டை, தென்னங்குறும்பல், சைக்கிள் டயர் ரப்பரை வளையம் வளையமாக வெட்டி தயாரித்த பந்து இப்படியாக கையில் கிடைத்ததை எல்லாம் பந்தாக உபயோகிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க கிரிக்கெட் ஆரம்பித்த சில காலத்தில் எங்க ஊரில் நிறைய தெருக்களில் ஆரம்பித்து விட்டார்கள், தெக்குத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, பள்ளிவாசல் தெரு, இப்படி நிறைய அணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் எங்க அணியிலும் போட்டி, பொறாமைக் காரணமாக பல அணிகள் (குறைந்தப்பட்டம் 2 பேர்) தொடங்கி விட்டார்கள், பைசா இருப்பவன் எல்லாம் தலைவன், அவன் தானே பந்து வாங்கி வருவான் அதான்.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/villagecricket1.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;மூர்த்தி அண்ணா டீம், போஸ் அண்ணா டீம், தெக்குத்தெரு டீம் எல்லாம் புகழ்பெற்றவை. ஆரம்பத்தில் என்னை எல்லோரும் பந்து பொறுக்கத் தான் அழைப்பார்கள். அத்தனை திறமையாக விளையாடத் தெரியாது. எல்லோரும் அவுட் ஆனதும் டவுட்டாகவே என்னை பேட்டிங்க் செய்ய அனுப்புவார்கள். எனக்கு ப்ரண்ட் புட், பேக் புட், ஹீக்சாட், கவர் டிரைவ் என்று ஒன்றும் கிடையாது, கண்ணை மூடிக் கொண்டு ஒரு சுத்து,  பந்து மட்டையில் பட்டதா அல்லது கட்டையில் பட்டதா என்பது கண்ணை திறந்தால் தான் தெரியும், சில சமயம் சுத்துத சுத்தில் கட்டையில் விழுந்து அவுட் ஆகி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/bowled.gif" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;எங்க ஊரில் கிரிக்கெட் பிரபலம் ஆக ஆக,நிறைய ஆட்டக்காரர்கள், திறமையானவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் (செலக்சன் கமிட்டியில் பைசா உள்ளவனுக்கும், சொந்த மட்டை வைத்தவனுக்கும் இடம்), என்பதால் நான் வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன், எவனுக்காவது அடி பட்டால் எனக்கு மகிழ்ச்சி பொங்கும், இடமும் கிடைக்கும். மட்டை அடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் பீல்டிங்கில் ஓடியாடி பந்தை தடுத்து மகிழ்வேன். சில நேரங்களில் அதற்கு கூட எப்போ அழைப்பார்கள் என்று இளவு காத்த கிளி மாதிரி காத்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கொஞ்ச நாளிலேயே என்னை விட சின்னப் பையன் எல்லாம் தன் திறமையால் அணியில் இடம் பிடிக்க, எனக்கு பொறாமை பிடிக்கத் தொடங்கியது. எனக்குள் வெறி எப்படியும் நாமும் நன்றாக ஆடி அணியில் இடம் பிடிக்க வேண்டும், அதற்காக எங்க வீட்டு தோட்டத்தில் ஒரு குரும்பலை கையில் எடுத்து தூக்கிப் போட்டு, அதை உடனே தென்னம்மட்டையால் ஓங்கி அடிப்பேன், நான் அடிப்பது எல்லாம் மட்டையில் படும் வரை தொடர்ந்து அடித்து பழகிக் கொண்டேன், சில நேரங்களில் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் மேலே பட, அதை அறிந்த என் அம்மா என்னை போட்டு சாத்த, இப்படியாக பேட்டிங்கை நான் கற்றுக் கொண்டேன், கொஞ்ச நாளில் பணம் சேர்த்து வைத்து ஒரு பந்தை வாங்கி, யாருக்கும் தெரியாமல் எங்க வீட்டு சுவற்றில் அடித்து அடித்து பேட்டிங்க் பழகினேன். அப்படி விளையாடும் போது தான் முன்னால், பின்னால் சென்று ஆடும் திறமையை வளர்க்க முடிந்தது (வீட்டில் பல்ப் உடைத்து, உதை வாங்கியது தனிக்கதை).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/kapildev2.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;ஒருவழியாக எனக்கும் பேட்டிங்க் தெரியும் என்று நம்பி என்னை அணியில் சேர்த்தார்கள், மேலும் பீல்டிங் நன்றாக செய்வேன். அப்படி அணியில் இடம் பிடித்தும், எனக்கு பேட்டிங்க் என்னவோ கடைசியில் தான் கிடைக்கும், ஊரில் மட்டையை சுத்துபவங்க எல்லாம் பேட்ஸ்மேன் என்பதால் பவுலிங்கில் ஆள் குறைவாக இருக்க நான் பவுலிங்க் போட ஆசைப்பட்டேன். அப்போ தான் பேட்டிங்க், பீல்டிங்க், பவுலிங்க் என்று தொடர்ந்து ஏதாவது செய்ய முடியும் என்ற ஆசை, மேலும் எனக்கு மானசீக குருவாக எல்லாத்தும் மேலாக கிரிக்கெட் இறைவனாக கபில்தேவ் அவர்களை மனதில் நிறுத்திக் கொண்டேன், பெயரில் கூட கபில் என்பதை சேர்த்துக் கொண்டேன், பள்ளி தேர்வில் என் பெயரோடு கபில் பெயரை எழுதி ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. வீடு முழுவதும் கபில்தேவ் படங்களாக மாட்டி வைத்திருப்பேன். இன்றும் கபில்தேவ் என்னோடு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v452/paransothi/kapilmohinder.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் சிறப்பான பெயரையும் அணி நம்மைத் தேடி வரவும் ஆல்ரவுண்டர் ஆவது தான் சிறந்தது என்று பவுலிங்க் போடத் தொடங்கினேன் கொண்டேன். அங்கே தான் என் போராட்டம், நம்பிக்கை, வெற்றி எல்லாமே தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவலைகள் ஓய்வதில்லை ….)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-112823846100867472?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/112823846100867472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=112823846100867472' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112823846100867472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/112823846100867472'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2005/10/blog-post.html' title='என் நினைவலைகள் – கிரிக்கெட்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13967342.post-111978157859056042</id><published>2005-06-26T03:24:00.000-07:00</published><updated>2006-05-18T06:16:11.476-07:00</updated><title type='text'>முதல் வணக்கம்</title><content type='html'>என்னுடைய பக்கத்தை படிக்க வந்த உங்கள் அனைவருக்கும் எனது முதல் வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர் பூங்கா என்ற வலைப்பூவை படியுங்க, உங்கள் குழந்தைகளுக்கும், தெரிந்த குழந்தைகளுக்கும் கதையாக சொல்லி நல்வழிப்படுத்துங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன, நான் வேற ஒன்றுமே சொல்லவில்லை என்று நினைக்கிறீங்களா, எங்கேங்க சொல்லுற, நான் சொல்ல நினைக்கிறதையும், சொல்ல கூடாது என்று நினைக்கிறதையும் சேர்த்து நிறைய பேர் வலைப்பூவில் சொல்லுறாங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழமணம் போய் பாருங்க, நல்லாவே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கும் மேலேயும் நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிக்கனும்முன்னு முடிவு செய்தால் முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், நம்பிக்கை போய் பாருங்க, நான் அங்கே ஏதேதோ சொல்லியிருப்பேன். அதுக்கே நேரம் சரியா இருக்குதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13967342-111978157859056042?l=paransothi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paransothi.blogspot.com/feeds/111978157859056042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13967342&amp;postID=111978157859056042' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/111978157859056042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13967342/posts/default/111978157859056042'/><link rel='alternate' type='text/html' href='http://paransothi.blogspot.com/2005/06/blog-post.html' title='முதல் வணக்கம்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>10</thr:total></entry></feed>
