Thursday, May 18, 2006

கிரிக்கெட் – பாஹில் கோப்பை புகைப்படங்கள்



இந்த புகைப்படங்கள் மார்ச் மாதம் குவைத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் எடுத்தவை.

குவைத்தில் பாஹில் என்ற இடத்தில் இருக்கும் செம்மானூர் ஜீவல்லரி என்ற புகழ்பெற்ற நகைக்கடை ஸ்பான்ஸர் செய்ய, கேரளாவைச் சேர்ந்த நண்பர்கள் முதன் முறையாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தினார்கள்.

அதில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன, இறுதிப் போட்டியில் எங்க அணி மற்ற அணியிடம் தோல்வி அடைந்தது, மிகச் சிறந்த 3 ஆட்டக்காரர்களால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் அரையிறுதியில் வென்று, இறுதி போட்டியில் கடைசி வரை போராடி பயனில்லாமல் போய் விட்டது. வலிமையான எதிரணியை மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தோம், ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே சிறந்த துவக்க ஆட்டக்காரர் சேவாக் மாதிரி வெளியே போன பந்தை ஒத்தடம் கொடுத்து அவுட் ஆனால், அடுத்தவரோ முதல்வரை விட்டு பிரியாதவர் மாதிரி ஓடி ரன் அவுட் ஆகி வந்து விட்டார், அடுத்த சென்றவர் 5 பந்துகள் தொடர்ந்து அடிக்க முடியாததால் வெறி வந்தவர் மாதிரி அடிக்க, பந்து சரியாக ஸ்டம்பை பதம் பார்த்தது.

அடுத்து சென்றவர்கள் ரன் எடுப்பதை விட விக்கெட் எண்ணிக்கை கூடக்கூடாது என்ற கவனத்தில் ரன் விகிதத்தை உயர்த்தினார்கள். இறுதியில் சென்ற நானும் மட்டையை வேகம் கொண்டு வீச காற்று மட்டுமே அடிபட்டு, பந்து கீப்பர் கைக்கே சென்றது, இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம்.

ஏதோ கடைசி நேரத்தில் போட்டியில் சேர்ந்து, கடைசி நேரத்தில் கிடைத்தவர்களை கொண்டு போய் விளையாடி பைனல் வரை வந்ததும், பெரிய அணிக்கு தண்ணீ காட்டியதும் எங்க எல்லோருக்கும் திருப்தி.

இப்போட்டி முடிந்து அன்று மாலையில் எங்க கம்பெனியின் போட்டியில் கால் இறுதி ஆட வேண்டும், கால் கால் எல்லாம் சரியான வலி, அப்படியோ போய் ஆடி காலிறுதியில் வென்று செமி போனோம், அதன் கதையை முந்தைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.

ஓவர்கள் எல்லாம் முடிந்து போச்சு, ஆட்டமும் போச்சு, வெற்றி கோப்பையும் போச்சு, அதனாலேயே சிறந்த பந்து வீச்சு, அதிக விக்கெட், அதிக ரன்கள் எடுத்த எங்களவர்களுக்கு மற்ற பரிசு கோப்பைகள் கிடைக்காமல் போய்விட்டது, அதை நினைத்து கொஞ்சம் வருத்தம். எங்க விக்கெட் கீப்பர் பெங்களூரை சேர்ந்த ஜமீல் இறுதி போட்டியில் மட்டுமே 5 கேட்ச், ஒரு ரன் அவுட், ஒரு ஸ்டம்பிங்க் செய்து, மிகச் சிறந்த விக்கெட் கீப்பருக்கான பரிசை தட்டிச் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.



அடுத்த ஆண்டு மிகச் சிறந்த அணியை கொண்டு போய் வெற்றி கோப்பைகள் அள்ளி கொண்டு வர வேண்டும். எங்க அணியில் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக தங்கராஜ், ரஞ்சித், ஜமீல், ரிஸ்வான், அருண் ராஜகோபால்.

உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து வலமாக கங்கா, டென்சன், மாலிக், வீரமணி, சுபேர், சந்தீப், நான்.

0 Comments:

Post a Comment

<< Home