Wednesday, May 24, 2006

நான் யார்? மதுமிதா மற்றும் அனைவருக்கும்

வலைப்பதிவர் பெயர்: பரஞ்சோதி (எ) சுரேஷ்

வலைப்பூ பெயர் : பரஞ்சோதியின் பக்கம், சிறுவர் பூங்கா, சிறுவர் பாடல்கள், சாதனையாளர்கள், நம்பிக்கை, முத்தமிழ் மன்றம், விரைவில் சக்தி புராணம் மற்றும் சிறுவர் உலகம்.

சுட்டி(url) : http://paransothi.blogspot.com/
http://siruvarpoonga.blogspot.com/
http://siruvarpaadal.blogspot.com/
http://nambikkaioli.blogspot.com/
http://muthamilmantram.blogspot.com/
http://saathanai.blogspot.com/
http://sakthiparansothi.blogspot.com/
http://siruvarulagam.blogspot.com/

ஊர்: பிறந்தது சென்னையில், நடை பயின்றது ஹைதராபாத்தில், பாடம் பயின்றது திருச்செந்தூர் பரமன்குறிச்சியில், வாழ்க்கை நடத்துவது அபூஹலிபா குவைத் நாட்டில், அடுத்தது ?????.

நாடு: தாய் நாடு : இந்தியா, தந்தை நாடு: குவைத்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நம்ம ஜெர்மனி முத்து அவர்கள் தான்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 2004லேயே ஜெர்மனி முத்து தொடங்கி கொடுத்தார், ஆனால் பதிவுகள் தொடங்கியது ஜீன் 2005ல்

இது எத்தனையாவது பதிவு: குத்து மதிப்பாக 100+

இப்பதிவின் சுட்டி(url): http://paransothi.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என்னைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ளவே.

சந்தித்த அனுபவங்கள்: எக்கசக்கம், சொல்ல ஆரம்பித்தால் நிப்பாட்ட முடியாது.

பெற்ற நண்பர்கள்: எக்கசக்கம், சொல்லாமல் விட்டால் நன்றாக இருக்காது, ஜெர்மனி முத்து, மூர்த்தி அண்ணா, சாகரன், முத்துகுமரன், இராகவன் அண்ணா, இசாக், கவிமதி, நண்பன், முருகபூபதி, பாஸிடிவ் ராமா (எங்க ஊர்க்காரர்), சிவா (எங்க சொக்காரர்), விழியன், மஞ்சூர் ராசா, சித்தார்த், பாம்பாட்டி சித்தன், துளசி அக்கா, மனு அம்மா, நிலா சகோதரி, சண்முகி அக்கா, இன்னும் பல தமிழ்மண, தேன்கூடு நண்பர்கள், வலைப்பதிவை தாண்டி எக்கசக்கமான நண்பர்கள், உறவினர்கள். ஆனா பாருங்க, என்னை விட என் மகள் சக்திக்கு தாங்க அதிக நண்பர்கள்.

கற்றவை: அதுவும் எக்கசக்கம், தினம் தினம் கற்கிறேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம், ஆனால் பயனுள்ளதாக எழுதலாம் என்ற எண்ணம்.

இனி செய்ய நினைப்பவை: குழந்தை இலக்கியத்திற்காக என் பங்கிற்கு ஏதாவது செய்வது, முடிந்தால் தமிழிலில் முழுவதும் குழந்தைகளுக்கான இணைய தளம், அதற்கூ உதவ நண்பர்களை தேடி வருகிறேன், உதவுவார்கள் என்றும் நம்புகிறேன்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்ல ஒன்றும் இல்லை என்று சொல்லலாம், ஆனாலும் சொல்கிறேன். வாழ்க்கையில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நம்புபவன், இல்லை என்றால் எங்கேயே ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக்கா இருக்க வேண்டியவன், உங்க எல்லோருக்கும் அறிமுகம் ஆகி இருப்பேனா என்ன? என் முன்னேற்றத்திற்கு முழு காரணம் என் தாயாரும் என் மனைவியும் தான், இப்போ என் மகளும் கூட.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நண்பர்களே! இறைவன் படைத்த அழகிய உலகில் நாம் வாழும் நாட்கள் கால சக்கரத்தில் ஒரு புள்ளியை விட குறைவே, ஆக இருக்கிற காலத்தில் நல்லதை செய்வோம், நல்லதையே நினைப்போம், நாமும வாழ்வோம், பிறரையும் வாழ வழி செய்வோம்.

0 Comments:

Post a Comment

<< Home